கணிதப் புதிர் !!!
மூளைக்கு வேளை !!!
1.நீங்கள் சிறையிலிருந்து தப்பிக்கிறீர்கள், உங்களுக்கு முன்னால் மூன்று கதவுகள் உள்ளன. இடது புறத்தில் உள்ள கதவு எரிமலை குழிக்கு வழிவகுக்கிறது. மையத்தில் உள்ள கதவு கொடிய வாயு நிரப்பப்பட்ட அறைக்கு வழிவகுக்கிறது. வலது புறம் உள்ள கதவு மூன்று மாதங்களாக சாப்பிடாத சிங்கத்திற்கு வழிவகுக்கிறது நீங்கள் எந்த கதவை தேர்வு செய்வீர்கள்?
எரிமலைக் குழி.
கொடிய வாயு.
சாப்பிடாத சிங்கம்.
2. 3+6#27. 4+12#64. 8+9#136. 7+2#? விடை என்னவாக இருக்கும்?
3..இரண்டு நபர்கள் ஆற்றின் மறுபுறம் செல்ல வேண்டும். அங்கு ஒரு படகு மட்டுமே உள்ளது. ஒரே சமயத்தில் ஒரு நபர் ஒரு முறை மட்டுமே செல்ல முடியும். ஒரு முறை சென்று பின் திரும்புவதற்கு மட்டுமே அதில் எரிபொருள் உள்ளது. ஆனால் இருவரும் படகில் சென்று ஆற்றின் கரையை அடைந்தார்கள் அது எப்படி?
விடைகள் :
1.வலது புறம் உள்ள கதவு. மூன்று மாதங்களாக சிங்கம் சாப்பிடாததால் அது இறந்திருக்கும்.😄😄😄
2. 4+2#16 *3 # 64
8+9#17 *8#136
3+6#9 *3# 27
எனவே விடை,
7+2 #9 *7 #63
3.அவர்கள் ஆற்றின் எதிர் எதிர் பக்கங்களில் இருந்தனர். ஒருவர் ஆற்றின் கரையை அடைந்ததும், மற்றொருவர் படகை எடுத்து கொண்டு ஆற்றின் இன்னொரு கரையை அடைந்தார்.