தமிழ்-முப்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்-முப்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 பிப்ரவரி, 2025

முப்பொருள் : தமிழ் சித்தாந்த மற்றும் இலக்கியத்தில் முப்பொருள் பற்றிய விளக்கம்! Explanation of the Thing in Tamil ideology and literature !

 


            தமிழ் - முப்பொருள்.


        முப்பொருள் என்பது, சைவ சித்தாந்தத்திலும், இலக்கணத்திலும் பயன்படுத்தப்படும் ஒரு சொல். 

       


சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் :

              முப்பொருள் என்றால் பதி, பசு, பாசம் ஆகியவை ஆகும்.

         பதி என்பது இறைவனை (கடவுள்) குறிக்கும், பசு என்பது உயிர்களைக் குறிக்கும், பாசம் என்பது தளைகளைக் குறிக்கும். 

     கடவுள் பேரறிவு உடையது என்றும், உயிர் சிற்றறிவுடையது என்றும் தளை உயிர் அற்றதாகவும் அறியப்படுகிறது.

இலக்கணத்தில் முப்பொருள் :

          முப்பொருள் என்றால் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை ஆகும்.

      தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறும்போது, அவற்றிற்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை விளக்கியுரைக்கின்றார். 

       @  முதற்பொருள் : நிலம், பொழுது என இரு வகைப்படும்.

          நிலம் என்பதில் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவை அடங்கும்.

          பொழுது என்பதில் மாத்திரை, நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அநயம், ஆண்டு, உகம் ஆகியவை அடங்கும்.

     @   உரிப்பொருள் :

உரிப்பொருள் என்பது மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கத்தைக் குறிக்கும்.

      பண்டைத் தமிழ் இலக்கியங்கள் ஐந்து திணைகளின் நிலப்பகுதிகள் சார்ந்த கருப்பொருள்களிலேயே அமைந்திருந்தன. அவற்றில் அந்தந்த நிலப்பகுதிக்குரிய ஒழுக்கங்களும் இடம்பெற்றிருந்தன. இவ்வொழுக்கங்கள் ஐந்தும் அவற்றிற்கான நிமித்தங்கள் (காரணங்கள்) ஐந்துமாக உரிப்பொருள்கள் பத்து உள்ளன .

 இவ்வொழுக்கங்கள் பின்வருமாறு :


    * புணர்தல்: ஒன்றுசேர்தல்

      


     * இருத்தல்: பிரிவைப் பொறுத்து இருத்தல்.

         


      * ஊடல்: தலைவி தலைவன் மீது கோபம் கொள்ளல்

        


      * இரங்கல்: பிரிவு தாங்காது தலைவி வருந்துதல் .

        


      * பிரிதல்: தலைவன் தலைவியைப் பிரிதல் என்பனவாகும்.

         


       ஐந்து நிலத்திணைகளுக்கும் அவற்றின் இயல்புக்கு ஏற்ப உரிப்பொருள்கள் உள்ளன. அவை பின்வருமாறு :

      * குறிஞ்சி: புணர்தலும், புணர்தல் நிமித்தமும்.

      * பாலை: பிரிதலும், பிரிதல் நிமித்தமும்.

       * முல்லை: இருத்தலும், இருத்தல் நிமித்தமும்.

       * மருதம்: ஊடலும், ஊடல் நிமித்தமும்.

        * நெய்தல்: இரங்கலும், இரங்கல் நிமித்தமும்

     @  கருப்பொருள் :       

        கருப்பொருள் என்பது பண்டையத் தமிழ் இலக்கியங்களில் ஐந்து திணைகளின் நிலப்பகுதிகளைக் குறிக்கும்கும்.

கருப்பொருள்கள் எத்தனை என்பது குறித்துத் தெளிவாகக் குறிப்பிடாத தொல்காப்பியம் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி என்று எட்டு வகைளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது. 

      இது பிற்காலத்தில் பதினான்கு என வரையறுக்கப்பட்டது பின்வருமாறு:

1. ஆரணங்கு (நிலத்தெய்வம்)

2. உயர்ந்தோர் (தலைமக்கள்)

3. அல்லோர் (உயர்ந்தோர் அல்லாதவர் அல்லது பொதுமக்கள்)

4. புள் (பறவை)

5. விலங்கு

6. ஊர்

7. நீர்

8. பூ

9. மரம்

10. உணா (உணவு)

11. பறை

12. யாழ்

13. பண்

14. தொழில்.


SPONSORSHIP :


"This Video Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...