#genreviews லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#genreviews லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 அக்டோபர், 2024

இலக்கணம்-பால் இலக்கணம் , பாலின் விளக்கம் மற்றும் பாலின் வகைகள்-படங்களுடன்.(Grammar-gender ,gender's definition and their varieties)

                   தமிழ் இலக்கணம்.

                           பால்.


* பால் என்பதற்கு பகுப்பு /பிரிவு என்று பொருள். 


* திணையின் உட்பிரிவே பால் ஆகும்.திணை என்பதற்கு ஒழுக்கம் என்பது பொருள்.திணை உயர்திணை, அஃறிணை என இரண்டு வகையாக பிரித்து அறியப்படும்.

        உயர்திணை:


         @  உயர்ந்த ஒழுக்கம் உடையவர்கள்.அதாவது நன்மை,தீமை என பகுத்தறியும் திறன் உடையவர்கள்.

          @உயர்திணைக்குரிய பால்கள் மூன்று வகைப்படும்.அவை,
1.ஆண்பால்
2. பெண்பால்
3. பலர்பால்  ஆகும்.

         அஃறிணை:

                  @ அல்+திணை.அதாவது மனிதர்கள்  அல்லாத பிற உயிருள்ள,உயிரற்ற அனைத்தும் சார்ந்தது..பகுத்தறியும் திறன் இல்லாதவை.

அஃறிணைக்குரிய பால்கள் :

 இரண்டு வகைப்படும்.அவை,
1. ஒன்றன் பால்

2. பலவின்பால் ஆகும்.


திணையை  உள்ளடக்கியே பால் ஐந்து வகைப்படும்.

பாலின் வகைகள் :


* பால் ஐந்து வகைப்படும்.


1. ஆண்பால் :


ராகவன்.


தாத்தா.




சரண்குமார்.

   *ஓர்  ஆணைக் குறிப்பது ஆண்பால்.(மாணவன்,கண்ணன்,மன்னன்,வெட்டியான்,ஆதவன்)

           *  பொதுவாக 'அவன்' என்றப் பெயரில் சுட்டப்படும்.

       *னகர ஈறுகள் ஆண்பாலை உணர்த்தும்.எ.கா:அவன், இவன், வந்தான்.


 2. பெண்பால் :



                           பாட்டி



              பூக்காரி.


                             நளினி.

     

      *ஓர் பெண்ணைக் குறிப்பது பெண்பால்.(ராகவி,குறத்தி, பைரவி, இளவரசி, சன்விகா)
       * பொதுவாக 'அவள்' என்றப் பெயரில் சுட்டப்படும்.

      * ளகர ஈறுகள் பெண்பாலை உணர்த்தும்.

          எ.கா:அவள், இவள், வந்தாள்.

3.பலர்பால் :

  


                        முதியவர்கள்.


                           மக்கள்.


                   மாணவர்கள்.

        * உயர்திணையில் பலரைக் குறிப்பது பலர்பால்.
        * அவர்கள் என்றப் பெயரில் சுட்டப்படும்.

         * அர், ஆர் என்பன பலர்பாலை உணர்த்தும்.எ.கா:அவர், இவர், உண்டார்.

4.ஒன்றன் பால் :


                            பொம்மை.

      
                            தாமரை.


                               பூனை.


        *அஃறிணையில் ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால்.
         * அது என்ற பெயரில் சுட்டப்படும்.


5.பலவின்பால் :


                   பறவைகள்.


                          பூக்கள்.


                வளையல்கள்.


           * அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால்.
          * அவை என்றப் பெயரில் சுட்டப்படும்.

Vedio link : : https://drive.google.com/file/d/12FODW60eRrIgMABOiik5h0Wwjtsa02ez/view?usp=drivesdk


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

genreviews

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...