@*சுரைக்காய்*@
சுரைக்காய் வெப்பமண்டலப் பகுதிகளில்வளரக்கூடியது. பார்ப்பதற்கு குடுவையைப் போல இருக்கும்.தொடக்கக் காலத்தில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடுவையாக (நீர்க்கலன்) இதனை மக்கள் பயன்படுத்தினர். பின்னாளிலேயே உணவுக்காக பயன்படுத்தத் தொடங்கினர்.உலகில் மனிதரால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று.
சுரைக்குடுவை
இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இதன் பூர்வீகம் தென்னாப்பிரிக்கா.
2 அடி நீளம் மற்றும் 3 அங்குலம் விட்ட அளவில் வளரக்கூடியது.இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்பு, இரும்புச்சத்து, புரோட்டீன், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது.
நன்மைகள் :
- மனித உடலில் கொழுப்பைக் குறைக்க உதவும்.
- சிறுநீரகங்களைப் பாதுகாக்க உதவும்.
- அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்குப் பயன்படுத்தலாம்.
- வெப்பத்தினால் வரும் தலைவலிக்கு இதன் சதைப் பகுதியைப் பற்றுப் போடலாம்.
- உடல் சூடு தணியும்.
- காமாலை நோயைக் கட்டுப்படுத்தும்.
- சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து உடலை வலுப்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக