ஒரு சொல் பல பொருள்!!!
தமிழில் உள்ள சொற்களில் சில சொற்கள் ஒரு பொருளைக் கொண்டோ அல்லது பல பொருட்களைக் கொண்டவையாக அமைந்திருக்கும்.
பல பொருளில் அமையும் சொற்களில் சில:
1. ஆறு -
இளைப்பாறல் .
எண்ணின் பெயர்.
2. திங்கள் - மாதம், நிலவு, கிழமை.
3. இசை - சம்மதித்தல், சங்கீதம்.
4. மதி -அறிவு, நிலவு, மதித்தல்.
5. ஆரம் - மாலை, சந்தனம்.
6. உடுக்கை - ஆடை, இசைக்கருவி.
7. மாலை -
மாலைப்பொழுது.
.பூமாலை.
8. நகை - புன்சிரிப்பு, அணிகலன்.
9. மெய் - உண்மை, உடம்பு.
10. அன்னம் - சோறு, பறவை.
11. நாண் - கயிறு, வெட்கப்படுதல்.
12. வேங்கை - புலி, ஒரு வகை மரம்.
13. வேழம் -
கரும்பு.
மூங்கில்.
14 .ஞாயிறு - கிழமை, சூரியன்.
15. அறை - சொல், அடி, திரை, வீட்டின் பகுதி.
16. ஓடு - நத்தையின் ஓடு, ஓடுதல்.
17. ஆழி -கடல், சக்கரம், வட்டம், மோதிரம்.
18. படி - படித்தல், மாடிப்படி.
19. ஆடி -
கண்ணாடி.
மாதம்.
அசைந்து.
20. அளி- வண்டு, மது, அன்பு, கொடு.
21. ஆலம் - நஞ்சு, கடல், நீர், மழை, ஆலமரம், அம்புக்கூடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக