வியாழன், 31 அக்டோபர், 2024

இந்தியக் குகைகள் (INDIAN CAVES) : மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள எலிஃபெண்டா குகைகள்,அஜந்தா குகைகள்,எல்லோராக் குகைகள்,கர்லா குகைகள்)

               இந்தியக் குகைகள்.

               


           இந்திய குகைகள் மலைகளில் அறை போன்று இயற்கையாகவே அமைந்திருக்கும் பகுதிகள் குகைகளாகும்.பழங்கால மனிதர்கள் குகைகளை இருப்பிடமாகப் பயன்படுத்தினர்.சில விலங்குகளும் குகைகளில் வாழும் குணமடையவை. மனிதர்கள் சிலர் குகைக் கோவில்களை உருவாக்கவும் செய்துள்ளனர். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான மஹாராஷ்டிர மாநிலத்தில்உள்ள நான்கு குகைககளைப் பற்றி இங்கு காணலாம்.

இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள குகைகள்:

1.எலிஃபெண்டா குகைகள் :

       



        காலம் : கி.பி. 5-10 ஆம் நூற்றாண்டு.
  
                மும்பை துறைமுகத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கராபுரி எலிஃபண்டா தீவில் இக்குகைக் கோயில்கள் அமைந்துள்ளன. இக்குகைகள் முழுவதும் சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இக்குகைகள் யுனெஸ்கோவால் 1987-ல் 
பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

        இது ஒரு குடைவரைக் கோயில். இக்கோயில் தொகுதி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில், அழகிய புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பாறைகளில்  குகைகள் குடையப்பட்டுள்ளன.

2 . அஜந்தா குகைகள் :

        

          காலம் : கி.பி. 2 ஆம் நூற்றாண்டு.

                    அஜந்தா குகைகளில் புத்த மத சிற்பங்களும் ,ஓவியங்களும் காணப்படுகிறது.குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும். மராட்டிய மாநிலம் ஔரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமமாக அஜந்தா காணப்படுகிறது

           இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடமாக இக்குகைக் கோவில் அமையப்பட்டுள்ளது.
        இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.
        குகைகளை முன்பு மழைக்காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக புத்தபிட்சுகள் பயன்படுத்தியிருக்கின்றனர். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன.
            1983 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

3 . எல்லோராக் குகைகள் :

              


         காலம் : கி.பி. 5-10 ஆம் நூற்றாண்டு.

         இக்குகை ஒரு தொல்லியற் களமாகும். இது அவுரங்காபாத், மகாராட்டிரம் நகரிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது. ராஷ்டிரகூட மரபினரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது.இது புகழ் பெற்ற குடைவரைகளைக் கொண்டு விளங்குகிறது. இக்குகைகளிலே பௌத்தஇந்து மற்றும் சமணக் கோயில்களும், துறவு மடங்களும் அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை.

   இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டச் சின்னமாகும்.தனித்துவமான கட்டடக் கலைக்காக உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.

4. கர்லா குகைகள் :

            


           காலம் : கி.பி. 5-ஆம் நூற்றாண்டு.

            பண்டைய இந்தியாவின் பௌத்த,சமய குடைவரை குகைக்கோயில் ஆகும். மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோனோவாலாவிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் கர்லா கிராமத்தின் மலையில் அமைந்துள்ளது.  

         பௌத்த பாறை வெட்டுக்களுக்கும் , பெரிய தூண்களைக் கொண்ட பிரார்த்தனை மண்டபத்திற்கும் கரலாக்குகைகள் புகழ்பெற்றவர் ஆகும்.    இக்குகைகளை இந்திய தொல்லியல் ஆய்வகம் பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவு சின்னங்களாக பராமரிக்கிறது.


SPONSORSHIP :

    "This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal".








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...