வனவிலங்கு சரணாலயங்கள்(4-8).
தமிழகத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள் மொத்தம் 17 உள்ளன. இவற்றில் பறவைகளுக்காக 7 சரணாலயங்களும், விலங்குகளுக்காக 8 சரணாலயங்களும் மற்றும் ஆராய்ச்சிப் பூங்காக்கள் இரண்டும் அடங்கும்.
8 வனவிலங்கு சரணாலயங்கள் :
1.முதுமலை வனவிலங்கு சரணாலயம்.
2.களக்காடு வனவிலங்கு சரணாலயம்.
3.வல்லநாடு வெளிமான் வனவிலங்கு சரணாலயம்.
4.சாம்பல்நிற அணில் வனவிலங்கு சரணாலயம்.
5.சத்திய மங்கலம் வனவிலங்கு சரணாலயம
6.முக்கூர்த்தி விலங்குகள் சரணாலயம்.
7.முண்டந்துறை புலிகள் சரணாலயம்.
8.மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கள் சரணாலயம்.
தமிழகத்திலுள்ள வனவிலங்குகள் சரணாலயங்களில் 3 வனவிலங்கு சரணாலயங்கள் பார்க்கப்பட்டது.இதில் மீதமுள்ள 5 சரணாலயங்கள் பற்றி காணலாம்.
4. சாம்பல்நிற அணில் வனவிலங்கு சரணாலயம்.
* விருதுநகர் மாவட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1988.
*அணில்களுக்கு என்று உள்ள தனிச் சரணாலயம் இதுதான்.
*இளஞ்சிவப்பு மூக்கும் அடர்த்தியான முடிகளுடன் கூடிய நீண்ட வாழ் சாம்பல் நிற முதுகு பகுதி என பார்க்க பெரிய பணியை போல் இருக்கக்கூடியது இந்த அணில்.
*அணிலை தவிர இங்கு புலி, சிறுத்தை,சிங்கவால் குரங்கு, தேவாங்கு உள்ளிட்ட பல விலங்குகளையும் 100க்கும் மேற்பட்ட பறவை இனங்களையும் இங்குப் பார்க்க முடியும்.
* இச் சரணாலயத்தில் ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
5.சத்திய மங்கலம் வனவிலங்கு சரணாலயம் :
* ஈரோடு மாவட்டம்,தொடங்கப்பட்ட ஆண்டு 2008.
* இது புலிகளுக்கு என்று பெயர் பெற்றது.இங்கே சுமார் 50-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன.
* புலிகளைத் தவிர சுமார் 800 யானைகளும் நூற்றுக்கணக்கான பறவைகள், பல இன பட்டாம்பூச்சிகள் ஊர்வனங்கள் மற்றும். பல விலங்குகள் இக்காட்டில் உள்ளன.
6 . முக்கூர்த்தி விலங்குகள் சரணாலயம்.
* நீலகிரி பீடபூமியில் 78.46 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. * மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகும்.
நீலகிரி தஹ்ர்.
* நீலகிரியில் பொதுவாகக் காணப்படும் முக்கிய கல் இனங்களில் ஒன்றான நீலகிரி தஹ்ரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த பூங்கா உருவாக்கப்பட்டது. நீலகிரி உயிர்க்கோளத்தின் ஒரு பகுதி,முக்கூர்த்தி தேசியப் பூங்காவாகும்.
* தாவரங்கள் மற்றும் கவர்ச்சியான விலங்கினங்களால் அமையப்பெற்று தமிழ்நாட்டில் அதிகம் பார்வையிடப்படும் தேசிய பூங்காக்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
7.முண்டந்துறை புலிகள் சரணாலயம்.
*மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளதி.
* 1983-84 களில் இப்பகுதிகளில் களப்பணிகள் மேற்கொண்டு இந்த இடத்தை புலிகள் காப்பகமாக அறிவிக்க பரிந்துரை செய்தார். இதன் விளைவாக ஏப்ரல் 1988ல் இப்பகுதியும், களக்காடு காட்டுயிர் சரணாலயமும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
* இது இந்தியாவின் 17-ஆவது புலிகள் காப்பகமாக களக்காடு முண்டன்துறை அமைந்துள்ளது.
* இங்கு புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன.
*தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காப்பகம் ஆகும்.
8.மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கள் சரணாலயம்.
*இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
* இது 21 சிறிய தீவுகளையும், மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப் பாறைகளையம் உள்ளடக்கிய பகுதியாகும்.
* தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து 1 முதல் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா, தூத்துக்குடியில் இருந்து தனுட்கோடி வரையிலான கடற்பகுதியில் 160 கி.மீ நீளத்திற்குப் பரந்துள்ளது.
* இப்பூங்காவானது பல்வகை தாவரங்களையும், விலங்குகளையும் கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் கொண்டுள்ளது. பூங்காவின் உள்ளே பொதுமக்கள் கண்ணாடிப் படகுகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
PART -1 : 1-3 content link :
https://lifechange4777.blogspot.com/2024/11/some-wildlife-sanctuaries-in-tamil-nadu.html
Sponsorship :
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக