புதன், 19 பிப்ரவரி, 2025

போக்குவரத்திற்கு பயன்படும் பல வகையான சாலைகள் ! Many types of roads used for transportation !.

            சாலைகளின் வகைகள்!

          இன்றைய மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் நான்கு. 1.உணவு 2.உடை 3.உறைவிடம் 4.வாகனம்.
 இவைகள் இன்றி மனிதர்கள் வாழ இயலாது.
       


      பேருந்து , லாரி , கார் , வேன் , ஆட்டோ , மோட்டார் சைக்கிள் , மாட்டு வண்டி, குதிரை வண்டி ,டெம்போ போன்ற அனைத்து வாகனங்களும் எளிதில் இடம்பெற அவசியமாக உள்ளது .
          
          சாலைகள் . சாலைகளின் தன்மை, அமைப்பு ,போக்குவரத்து , யாரால் பராமரிக்கப்படுகிறது என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு பல வகைகளாக பிரிக்கலாம்.

1.துரிதப் போக்குவரத்து சாலை :(Express Highway)
        மும்பை - புனே சாலை. இவை மிக வேகமாக செல்வதற்குரிய சாலைகள் ஆகும் . வெளிநாடுகளில் இவ்வகை சாலைகள் மிக அதிகமாக உள்ளன.

2. தேசிய நெடுஞ்சாலை : (National Highway)
       இச்சாலைகள் மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கின்றன. இதன் கிலோமீட்டர் கல்லின் மேற்பகுதியில் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருக்கும் . இது இரு வழி போக்குவரத்திற்கு உரிய சாலையாகும். இவற்றை மத்திய அரசு பராமரித்து வருகிறது
.
3. மாநில நெடுஞ்சாலை : (State Highway)
         இது தேசிய நெடுஞ்சாலையை விட அகலம் குறைந்து காணப்படும் . இதுவும் இருவழிப் போக்குவரத்திற்கு உகந்தது. இதன் கிலோமீட்டர் கற்களின் மீது பச்சை வண்ணம் பூசப்பட்டிருக்கும். இச்சாலைகளை மாநில அரசு பராமரிக்கிறது.

4. பெரிய மாவட்ட சாலைகள் :(Major District Road)
      மாநிலநெடுஞ்சாலைகளை விட அகலம் குறைந்திருக்கும் . இருவழிப் போக்குவரத்திற்கு ஏற்றது . இதன் கிலோமீட்டர் கற்கள் மீது நீல வண்ணம் பூசப்பட்டிருக்கும் . இது மாநில அரசால் பராமரிக்கப்படுகிறது. 

5. பிற மாவட்டச் சாலைகள் : (Other District Roads)
        இச்சாலையின் அகலம் மிகவும் குறைவாக இருக்கும் . கிலோ மீட்டர் கற்களின் மீது ஆரஞ்சு வண்ணம் பூசப்பட்டிருக்கும் . இச்சாலையானது மாநில அரசின் உதவியுடன் பஞ்சாயத்து யூனியினால் பராமரிக்கப்படுகிறது.

6.  முக்கியச்சாலைகள் : (Arterial Road)      
        இது நகரின் மிக இது நகரின் மிக முக்கியமான சாலை ஆகும் .அதாவது வெளி மாநிலங்களில் இருந்து வரும் சாலைகள் நகரத்திற்குள் முக்கிய சாலையாகிவிடும் இதில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் 
.       

7 .நேரச்சாலை : (Through Fare) :
         போக்குவரத்தை நகரின் பல பகுதிகளில் இருந்து நகரத்தின் மையத்திற்கு கொண்டு செல்லும் பாதையாகும் . பெரும்பாலும் இச்சாலைகளில் நெரிசல் மிகுதியாக இருக்கும் . 

8. பிரதான சாலை : (Main Road)
         முக்கிய போக்குவரத்தை நகரின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லும் சாலையே பிரதான சாலையாகும்.

9. புறவழிச்சாலை : (Bye pass Road)   
          போக்குவரத்தை விரைவுப்படுத்துவதற்காக நகருக்குள் செல்லாமல் நகரை ஒட்டினாற்போல செல்லும் சாலையை புறவழிச்சாலை ஆகும்.

10. கிராமச்சாலை :(Village Road)
      இந்த சாலைகளில் பொதுவாக மண் கொட்டப்பட்டிருக்கும் .தற்போது தார்சாலைகள் போடப்படுகிறது.இதில் ஒரு கனரக வாகனம் மட்டுமே செல்ல முடியும் எதிரே வாகனம் வந்தால் இரண்டு வாகனங்களும் வேகத்தை குறைத்து ஒதுங்கிச் செல்ல வேண்டும் கிலோமீட்டர் கற்களின் மீது முழுமையாக வெள்ளை வண்ணம் பூசப்பட்டு இருக்கும் மாநில அரசு உதவினும் பஞ்சாயத்துக்களால் இச்சாலை பராமரிக்கப்படுகிறது. 

11 . வீதி : (Street)
       பிரதான சாலைகளில் நகருக்குள் பிரிந்து செல்லும் கிளைச்சலைகளை வீதியாகும் . இதனை தெரு என்றும் குறிப்பிடுவர் . இவை மக்கள் குடியிருக்கும் பகுதியிலேயே அமைந்திருக்கும் . இதில் போக்குவரத்து அதிகம் இருக்காது. 

12 . மறுவழியற்ற சாலை : (Dead End street ) 
        ஒரு முனையில் வழியும் மறுமுனையில் வழி இல்லாமலும் இருந்தால் அதற்கு மறு வழியற்ற வீதி என்ற பெயர்.

13.நான்கு வழிச்சாலை :
       நான்கு வழிச்சாலைகளில் வாகனங்கள் நல்ல வேகத்திலும் விபத்து இன்றி விரைவாக பயணம் செய்ய வசதியாக அமைந்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு போக்குவரத்துதான் அடித்தளம் என்றால் அதற்கு ஆணிவேர் நல்ல சாலைகள் ஆகும் . நான்கு வழி சாலைகள் எப்படி பயன்படுத்துவது என்று அறிந்து அதற்கு ஏற்ப அதை பயன்படுத்த வேண்டும். போவதற்கு உரிய சாலையில் எதிரே வேகமாக வந்து விபத்தை விளைவிக்கும் கொடுமையை இந்த நான்கு வழிச்சாலையில் இன்று காண முடிகிறது . ஓட்டுநர்கள் இதை உணர்ந்து முறையாக செயல்பட வேண்டும் விபத்தை தவிர்த்து உயிர்களை காக்க வேண்டும்.

14. ஆறு வழிச்சாலை : நாட்டின் முதல் ஆறு வழிச்சாலை மும்பை நகரத்தையும் புனேயுடன் இணைக்கும் விரைவுச்சாலை ஆகும். இது 2002 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியின் போது கட்டப்பட்டது.

15. எட்டு வழி சாலை :  இது தேசிய நெடுஞ்சாலை. இந்தியாவின் தில்லை நகரையும் மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரை இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்.

SPONSORSHIP :
"This Video Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"





ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

வளைகளில் வாழும் மனிதனுக்கு சேதத்தை உண்டுபண்ணும் எலி ! A rat that causes damage to a man living in the arches !

                                      எலிகள் - RATS.

எலிகளின் தோற்றம்

       எலிகள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப வாழப் பழகி விட்டன . எலி பாலூட்டி வகையைச் சார்ந்தது. 

          


   வீடுகளிலும் வயல்களிலும் வலியை தோண்டி வாழும் ஒரு சிறு பிராணி எலி . இது தன் இறையை குறி வைத்து தின்னும் . கிடைக்கும் எந்த உணவையும் உண்ணக்கூடியவை.

   இந்தியாவில் ஒரு மனிதனுக்கான உணவை 6 எலிகள் உண்ணுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


 எலிகளின் புலன் உறுப்பு : 


        எலிகளுக்கு கண் பார்வையை விட. தொடு , கேள் மற்றும் மோப்ப உணர்ச்சிகள் மிகவும் அபார சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

எலிகளின் வகைகள் :


      சுண்டெலி , வெள்ளெலி , மூஞ்சூறு , கல்லெலி  சரவெலி, இந்திய பெருச்சாளி வீட்டெலிவயலெலி என எலிகளில் பல வகைகள் உள்ளன.


பற்கள் :

        



        எலிகளின் பற்கள் வாழ்நாள் முழுவதும் வளரும் . எனவே எலிகள் அவற்றை கடினமான பொருட்களை கடித்து தேய்ந்து போக செய்யும் . மரம் , பிளாஸ்டிக் , அலுமினியம் போன்ற கடினமான பொருட்களையும் கூட எலிகள் எளிதாக கடிக்க முடியும்.


உணவாகும் எலிகள் :

         



       எலிகளை வேட்டையாடுவது பூனை மட்டுமல்ல . பாம்பு , பருந்து , ஆந்தை , காகம் , நாய் , நரி ஆகியவையும் எலிகளை உணவாகப் பிடித்து உண்ணும்.


உணவுப் பொருள் இழப்பு :


     ஒவ்வொரு ஆண்டிலும் உலகம் முழுவதிலும் எலிகள் தின்று அளிக்கும் உணவுப் பொருட்களை மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது .


        எலிகளால் இந்தியாவில் சுமார் 26 ஆயிரம் கோடி கிலோ வரை தானியங்கள் வீணாகின்றன.


       அமெரிக்காவில் மட்டும் ஓராண்டில் சுமார் 140 கோடி ரூபாய் மதிப்புள்ள  உணவு பொருள்களை எலிகள் தின்று விடுகின்றனவாம்.


எலிக்கடிக் காய்ச்சல்  :


             எலிக்கடிக் காய்ச்சல் என்பது எலிகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் கடும் நோயாகும். இந்தக் காய்ச்சல் பாக்டீரியா  தொற்றுகளால் ஏற்படுகிறது. 

         எலியின் சிறுநீர், சளி சுரப்பிகளின்  வழியான பாக்டீரியா தொற்றுகளால் மனிதர்களிடம் பரவும்  நோயாகும்.

      பாக்டீரியாக்கள் தொற்றிய எலி கடித்தாலோ, அல்லது மனித உடலில் ஏற்படும் வெட்டு அல்லது காயத்தாலோ இந்த காய்ச்சல் பரவும்.


உணவாகும் எலிகள் :


       எலிகளை வேட்டையாடுவது பூனை மட்டுமல்ல . பாம்பு , பருந்து , ஆந்தை , காகம் , நாய் , நரி ஆகியவையும் எலிகளை உணவாகப் பிடித்து உண்ணும்.


   நோய்கள் :


    இரைப்பு நோய்பிளேக் போன்ற கொடிய கொள்ளை நோய்கள் இதனாலேயே பரவுகிறது.


லிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்  :


      எலிகளைப் பிடிப்பதற்கும் அழிப்பதற்கு மனிதர்கள் பல வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.


1 . விந்தைப் பொறி :

        விந்தைப் பொறி மூலம் எலிகளை வயல்களிலும் வீடுகளிலும் உயிருடன் பிடித்து அழிக்கலாம். இந்தப் பொறி கூண்டில் கவர்ச்சியான உணவை வைத்து இரவில் வயல்களில் வைத்தால் எலிகள் உள்ளே சென்றவுடன் முன் கதவு கீழே அழுந்தப்படுவதால் அகப்பட்டுக் கொள்ளும்.


2.சிங்க் பாஸ்பைடு  எலி கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. கருமை நிறத் தூளாக பூண்டு வாசனையுடன் இருக்கும்.


3. முதுகு ஒடிக்கும் பொறி :
       

         இந்தப் பொறியில் உணவை உண்ண வரும் எலி, ஒரு சிறிய கொக்கியை அசைப்பதால், விசையிலிருந்து விடுபடும் விசை மிக்க கம்பி எலியின் கழுத்துப் பகுதியிலோ அல்லது முதுகிலோ வேகமாகத் தாக்கி கொன்று விடும்.


4. சிறு வரப்புகள் அமைத்தல் :


         எலிகளைக் கட்டுப்படுத்த வயல்களில் சிறு வரப்புக்களை அதாவது 3/4 அடி அகலமும் 1/2 அடி உயரமும் உள்ள பரப்புகள் அமைக்க வேண்டும். இதனால் எலிகள் வளை தோண்டி பரப்புகளில் வாழ்வதும், பயிர்களை அழிப்பதும் பெரிதும் தடுக்கப்படுகிறது.


5 . மாமிசப் பட்சிகளான ஆந்தை, கழுகு, கோட்டான், பாம்பு, காட்டுப் பூனை, நாய், கீரிப்பிள்ளை, பருந்து முதலியவை எலிகளை கொன்று உண்கின்றன.


SPONSORSHIP :


"This Video Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"



சனி, 8 பிப்ரவரி, 2025

முப்பொருள் : தமிழ் சித்தாந்த மற்றும் இலக்கியத்தில் முப்பொருள் பற்றிய விளக்கம்! Explanation of the Thing in Tamil ideology and literature !

 


            தமிழ் - முப்பொருள்.


        முப்பொருள் என்பது, சைவ சித்தாந்தத்திலும், இலக்கணத்திலும் பயன்படுத்தப்படும் ஒரு சொல். 

       


சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் :

              முப்பொருள் என்றால் பதி, பசு, பாசம் ஆகியவை ஆகும்.

         பதி என்பது இறைவனை (கடவுள்) குறிக்கும், பசு என்பது உயிர்களைக் குறிக்கும், பாசம் என்பது தளைகளைக் குறிக்கும். 

     கடவுள் பேரறிவு உடையது என்றும், உயிர் சிற்றறிவுடையது என்றும் தளை உயிர் அற்றதாகவும் அறியப்படுகிறது.

இலக்கணத்தில் முப்பொருள் :

          முப்பொருள் என்றால் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை ஆகும்.

      தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறும்போது, அவற்றிற்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை விளக்கியுரைக்கின்றார். 

       @  முதற்பொருள் : நிலம், பொழுது என இரு வகைப்படும்.

          நிலம் என்பதில் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவை அடங்கும்.

          பொழுது என்பதில் மாத்திரை, நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அநயம், ஆண்டு, உகம் ஆகியவை அடங்கும்.

     @   உரிப்பொருள் :

உரிப்பொருள் என்பது மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கத்தைக் குறிக்கும்.

      பண்டைத் தமிழ் இலக்கியங்கள் ஐந்து திணைகளின் நிலப்பகுதிகள் சார்ந்த கருப்பொருள்களிலேயே அமைந்திருந்தன. அவற்றில் அந்தந்த நிலப்பகுதிக்குரிய ஒழுக்கங்களும் இடம்பெற்றிருந்தன. இவ்வொழுக்கங்கள் ஐந்தும் அவற்றிற்கான நிமித்தங்கள் (காரணங்கள்) ஐந்துமாக உரிப்பொருள்கள் பத்து உள்ளன .

 இவ்வொழுக்கங்கள் பின்வருமாறு :


    * புணர்தல்: ஒன்றுசேர்தல்

      


     * இருத்தல்: பிரிவைப் பொறுத்து இருத்தல்.

         


      * ஊடல்: தலைவி தலைவன் மீது கோபம் கொள்ளல்

        


      * இரங்கல்: பிரிவு தாங்காது தலைவி வருந்துதல் .

        


      * பிரிதல்: தலைவன் தலைவியைப் பிரிதல் என்பனவாகும்.

         


       ஐந்து நிலத்திணைகளுக்கும் அவற்றின் இயல்புக்கு ஏற்ப உரிப்பொருள்கள் உள்ளன. அவை பின்வருமாறு :

      * குறிஞ்சி: புணர்தலும், புணர்தல் நிமித்தமும்.

      * பாலை: பிரிதலும், பிரிதல் நிமித்தமும்.

       * முல்லை: இருத்தலும், இருத்தல் நிமித்தமும்.

       * மருதம்: ஊடலும், ஊடல் நிமித்தமும்.

        * நெய்தல்: இரங்கலும், இரங்கல் நிமித்தமும்

     @  கருப்பொருள் :       

        கருப்பொருள் என்பது பண்டையத் தமிழ் இலக்கியங்களில் ஐந்து திணைகளின் நிலப்பகுதிகளைக் குறிக்கும்கும்.

கருப்பொருள்கள் எத்தனை என்பது குறித்துத் தெளிவாகக் குறிப்பிடாத தொல்காப்பியம் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி என்று எட்டு வகைளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது. 

      இது பிற்காலத்தில் பதினான்கு என வரையறுக்கப்பட்டது பின்வருமாறு:

1. ஆரணங்கு (நிலத்தெய்வம்)

2. உயர்ந்தோர் (தலைமக்கள்)

3. அல்லோர் (உயர்ந்தோர் அல்லாதவர் அல்லது பொதுமக்கள்)

4. புள் (பறவை)

5. விலங்கு

6. ஊர்

7. நீர்

8. பூ

9. மரம்

10. உணா (உணவு)

11. பறை

12. யாழ்

13. பண்

14. தொழில்.


SPONSORSHIP :


"This Video Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...