இசைக்கருவி - வீணை.
பண்டைய காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும் கிபி 17ஆம் நூற்றாண்டில் தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது . தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில்தான் இவ்வுருவம் அமையப் பெற்றது.
இசைக்கருவிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வீணை . ஏனென்றால் மற்ற இசைக்கருவிகள் இசையினால் வசீகரிக்கும் . ஆனால் வீணை தன் தனித்துவமான அழகிய தோற்றம், அதில் செதுக்கி இருக்கும் அழகிய வெளிப்பாடுகளினாலும் நம்மை கவர்ந்திழுக்கும். இந்திய இசையின் பல நுட்பங்களை , தத்துவங்களை இக்கருவி மூலம் வெளிப்படுத்தலாம்.
நரம்புக் கருவி :
வீணை ஒரு நரம்புக் கருவி . இது பலா மரத்தினால் செய்யப்படுகிறது. உலோக கம்பிகளில் நான்கு தந்திகள் வாசிப்பதற்கும், மூன்று தந்திகள் சுருதி மற்றும் தாளத்திற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.
வீணை சுமார் நான்கரை அடி அகலம் கொண்டிருக்கும் இது நடை சுமார் ஏழு கிலோ முதல் ஒன்பது கிலோ கிராம் வரை இருக்கும்.
பயன்படுத்தும் முறை :
தரையில் அமர்ந்து கொண்டு மடியில் வைத்து வலது தொடையில் தாங்கிக் கொண்டு வீணை மீட்டப்படும் அழகே தனி. வீணை கருவிகளை இடது கைவிரல்களால் அழுத்தி தேய்த்து ஸ்வரங்களை எழுப்புவர் . தனியாகப் பக்கத்திலுள்ள மூன்று கம்பிகள் தாளக்கம்பிகள் எனப்படும் . அவற்றை வலது கை சுண்டு விரலாலும் நெளி அல்லது மீட்டு எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்தும் மீட்டுவர்.
வீணையின் அமைப்பு :
தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு.
ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் , குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர்.
வீணையின் வகைகள் :
வீணையில் சரஸ்வதி வீணை , ருத்ர வீணை , விசித்திரவீணை, மகாநாடக வீணை , அன்சவீணை , நவசித்திர வீணை, சாத்வீக வீணை எனப் பல வகைகள் உள்ளன.
புகழ்பெற்ற வீணை இசை கலைஞர்கள் :
1. காரைக்குடி சாம்பசிவ ஐயர்.
2. வீணை சிட்டிபாபு.
3. எஸ் . பாலச்சந்தர்.
4. வீணை தனம்மாள்.
5. வீணை காயத்ரி .
6. ஆர் பிச்சுமணி ஐயர்.
7.ஈமணி சங்கர சாஸ்திரி.
செவ்வியல் இசையில் வீணையின் பங்கு முக்கியமானது . உலக அளவில் புகழ்பெற்ற பல வீணை கலைஞர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் வீணை புகழ்பெற்றது . இங்கு கைவினைஞர்கள் பல தலைமுறைகளாக வீணைகளை செய்து வருகின்றனர். தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீட்டு முத்திரையை பெற்றுள்ளது.
Sponsorship :
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக