சனி, 6 செப்டம்பர், 2025

இந்தியாவின் பொறியியல் அதிசயங்களில் ஒன்றான ராமேஸ்வர பாம்பன் பாலம்! Rameshwara Pamban Bridge, one of India's engineering wonders !

      ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம்!

அதிசய பாலம் :

         


     இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்று ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் . இது ராமேஸ்வரம் தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கிறது . இந்தியாவில் கடலின்குறுக்கே கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முதல் பாலம் பாம்பன் பாலம்.

தொடக்கம் :

      பாம்பன் இரயில் பாலம் கட்டுவதற்கு முயற்சிகள் 1820 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு வர்த்தக இணைப்பை விரிவுபடுத்த எண்ணியது. அதனால் இது அதிகாரப்பூர்வமாக 1914 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நீளமான பாலம் :

      இந்தியாவின் முதல் கடல் பாலம் இந்த பாம்பன் பாலம் தான் . 2010 ஆம் ஆண்டு வரைக்குமே இதுதான் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும்.

இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் :

      


       மும்பையின் பாந்த்ரா வொர்லி கடல் பாலம் கட்டிய பிறகு இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆனது பாம்பன் பாலம் .

சிறப்பு :

        # இந்த பாம்பன் ரயில் பாலம் 90 டிகிரி கோணத்தில் மேல் நோக்கி திறக்கும்.

         #  பாலத்தின் குறுக்கே கடக்கும் கப்பல் இயக்கத்தை அனுமதிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

          # பாம்பன் பாலம் இரயில் பயணத்தின் போது அரபிக் கடலின் நீலப் பரப்பின் மீது நீர் கொட்டும் காட்சிகள் வியக்க வைக்கிறது .

          #  1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை கடுமையாக பாதித்த கடும் புயல், பெரிய சுறாவளிகளில் இருந்து இந்த ரயில் பாலம் த தப்பியது வியப்பிற்குரியது.

         # வளைகுடாவின் மீது கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான பாலமாக கருதப்படும் பாம்பின் பாலம் 1988 ஆம் ஆண்டு வரை ராமேஸ்வரத்திற்கும் பிரதான நிலப்பகுதிக்கும் இடையிலான ஒரே இணைப்பாக இருந்தது. 

     

புதிய நவீன பாம்பன் பாலம் :

      புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட பாம்பன் பாலம், ஏப்ரல் 6, 2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ராமநவமி அன்று இந்த பாலத்தை திறந்து வைக்கப்பட்டது.

     இது 110 ஆண்டுகள் பழமையான பழைய பாம்பன் பாலத்திற்கு பதிலாக கட்டப்பட்டுள்ளது.

       இந்த புதிய பாம்பன் பாலம் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டு இந்தியாவின் முதல் செங்குத்து மின் தூக்கி ரயில்வே கடல் பாலமாக உள்ளது. புதிய பாலம் சுமார் 2.2 கிலோ மீட்டர் நீளம் உடையது. இந்த நடுப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 22 மீட்டர் உயரத்திற்கு உயர்த்த முடியும்.


Sponsorship :

    


"This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994077196.

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"


ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

வினைச்சொல் – விளக்கம், வகைகள் மற்றும் பட விளக்கத்துடன் உதாரணங்கள்! Verbs explanation and Types of verbs are examples with pictures!

 #  வினைச்சொல், விளக்கம் மற்றும் வகைகள்! #


# வினைச்சொல் என்றால் என்ன?

          ​வினைச்சொல் என்பது ஒரு செயலை அல்லது ஒரு நிலையை குறிக்கும் சொல். அதாவது, ஒரு வாக்கியத்தில் ஒரு நபர் அல்லது ஒரு பொருள் என்ன செய்கிறது என்பதை இது தெரிவிக்கிறது.அதாவது, யாராவது ஒருவர் ஏதாவது செய்கிறார் என்பதை உணர்த்தும் சொல்.
      தமிழ் இலக்கணத்தில் வினைச்சொல் என்பது செயலைக் குறிக்கும் சொல் ஆகும்.


வினைச்சொல்லின் முக்கியத்துவம் :

     ஒரு செயல் அல்லது நிகழ்வை உணர்த்துவதாக அமையும். ஒரு வாக்கியத்தின் அத்தியாவசியமான பகுதியாக அமையப் பெறுகிறது. ஒரு வாக்கியம் வினைச்சொல்லின்றி நிறைவு பெறாது.

# உதாரணங்கள்:

@ குழந்தை விளையாடுகிறது.

     இதில் விளையாடுகிறது என்பது வினைச்சொல்.

     





@ அப்பா வேலை செய்கிறார்.

        இதில் செய்கிறார் என்பது வினைச்சொல்.

      





@ பறவை பறக்கிறது. 

      இதில் பறக்கிறது என்பது வினைச்சொல்.

      





  @  அம்மா சமைக்கிறார்.

      இதில் சமைக்கிறார் என்பது வினைச்சொல்.

        








# வினைச்சொல் வகைகள் :

1. நேர்முக வினை :

      பொருளுடன் நேரடியாகச் சேர்ந்துச் செயலைக் காட்டும் வினைச்சொல் நேர்முக வினைச் சொல்லாக வரும்.

 @ மாணவி பாடம் படிக்கிறான்.

      





@ ராம் பழம் சாப்பிடுகிறான்.

     






2. அநேக வினை :

     பொருளுடன் நேரடியாக இணைக்காமல் செயலைக் காட்டும் வினை அனேக வினைச் சொல்லாக வரும்.

 @ மயில் ஆடுகிறது.





@ மழை பெய்கிறது.

    






3. வினைமுற்று (Finite Verb):

       காலத்துடன் (வரையறுக்கப்பட்ட) வரும் வினைச்சொற்கள் வினைமுற்றுச் சொல்லாக வரும்.

@ அவர் வருகிறார்.

    





@ நான் சென்றேன்.

     


     



4. வினையடை (Non-finite Verb)

        முற்று இல்லாமல் வரும் வினைச்சொற்கள் வினையடைச் சொல்லாக வரும்.

@ சென்று வேலை பார்த்தார். 

   





@ கொடுத்து சென்றார்.

    








# வினைச்சொல், உதாரணங்கள், அட்டவணை:

@@@செயல், வினைச்சொல், உதாரணம் :


1.சாப்பிடுதல்
சாப்பிடு
குழந்தை பழம் சாப்பிடுகிறது.


2.ஓடுதல்
ஓடு
மாணவன் வேகமாக ஓடுகிறான்.


3.பேசுதல்
பேசு
அவர்கள் தமிழ் பேசுகிறார்கள்.


4.படித்தல்
படி
அவள் புத்தகம் படிக்கிறாள்.


5. கேட்டல் 

கேள் 

அவன் பாடல் கேட்கிறான்.


     வினைச்சொற்கள் இல்லாமல் எதையும் சொல்ல இயலாது.
அவை செயலைக் குறிக்கும் உயிருள்ள சொற்கள்.
தமிழ் இலக்கணத்தில் வினைச்சொல் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

       வினைச்சொற்கள் பெயர்ச்சொல்லை அடுத்து வரக்கூடியது. ஒரு வாக்கியத்தில் மிக முக்கிய பங்கினை வகிக்கும்.


   Sponsorship:



"This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994077196.

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"



ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

மரபுச் சொற்களில் ஒலி மரபுச் சொற்கள்: கேட்பது ஒரு கலை! Listening to sound traditional words in traditional words is an art!

          @@@ ஒலி மரபுச் சொற்கள் @@@

       நமது தமிழ் மொழியில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு தனி அழகு உண்டு. அதுவும் உயிரினங்கள் அல்லது பொருட்களின் ஒலிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கள், அந்த ஒலியின் தன்மையை அப்படியே நம் மனதில் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை கொண்டவை. இந்தச் சொற்கள்தான் ஒலி மரபுச் சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.

       ​ஒரு பறவையின் ஒலியை வெறும் 'சத்தம்' என்று சொல்வதற்குப் பதிலாக, அதன் தன்மையைப் பொறுத்து நாம் பல சொற்களைப் பயன்படுத்துகிறோம். 

உதாரணமாக, 

      குயில் 'கூவும்', 

       


            காகம் 'கரையும்'. 

       


      இது போன்ற நுட்பமான வேறுபாடுகளை அறிந்திருப்பது, நம் மொழியின் செழுமையைப் புரிந்துகொள்ள உதவும்.


***​விலங்குகளின் ஒலி மரபுகள்***

     ​ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு தனிப்பட்ட ஒலி உண்டு. அதை நம் முன்னோர்கள் மிகத் துல்லியமான சொற்களால் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


1. ​குரங்கு அலப்பும்: குரங்கின் சத்தம் ஒருவிதமான 'அலப்பு' ஒலி.

       


2. ​யானை பிளிறும்: யானையின் கம்பீரமான ஒலியை 'பிளிறல்' என்று குறிப்பிடுவோம்.

       


3. ​மயில் அகவும்: மயிலின் அழகிய ஒலியை 'அகவுதல்' என்று சொல்வது மரபு.

         


4. ​புலி உறுமும்: புலியின் பயங்கரமான ஒலியை 'உறுமுதல்' என்று சொல்வோம்.

       


5. ​நாய் குரைக்கும்: நாயின் எச்சரிக்கை ஒலியை 'குரைத்தல்' என்று அழைப்போம்.

       


6. சிங்கம் முழங்கும் : சிங்கம் ஒலி எழுப்புவதை முழங்கும்.

      


7. ​பாம்பு சீறும்: பாம்பின் ஒலி 'சீறுதல்'.

        


8. ​ஆடு கத்தும்: ஆட்டின் ஒலி 'கத்துதல்'.

      




***​பறவைகளின் ஒலி மரபுகள்***

விலங்குகளைப் போலவே, பறவைகளுக்கும் தனித்துவமான ஒலி மரபுகள் உள்ளன.

1. ​ஆந்தை அலறும்: இரவில் ஆந்தையின் ஒலியை 'அலறுதல்' என்று கூறுவோம்.

2. ​குயில் கூவும்: குயிலின் இனிமையான ஒலி 'கூவுதல்'.

3. கோழி கொக்கரிக்கும்: கோழியின் விடியற்கால ஒலியை 'கொக்கரித்தல்' என்பது வழக்கம்.

4. ​காகம் கரையும்: காகத்தின் ஒலி 'கரைதல்'.

5. ​சேவல் கூவும்: சேவலின் விடியற்கால ஒலி 'கூவுதல்'.

6. ​கிளி பேசும்: கிளியின் ஒலி 'பேசுதல்' அல்லது 'கொஞ்சுதல்'.

***​பொருட்களின் ஒலி மரபுகள்***

உயிரினங்களுக்கு மட்டுமல்ல, பொருட்களுக்கும் ஒலி மரபுகள் உள்ளன.

1. ​மழை பொழியும்: மழையின் ஒலியை 'பொழிதல்' என்று சொல்வது வழக்கம்.

2. ​மின்னல் மின்னும்: மின்னலின் ஒலியை 'மின்னல்' என்று சொல்வது மரபு.

3. ​இடி இடிக்கும்: இடியின் ஒலியை 'இடித்தல்' என்று கூறுவோம்.

4. ​வண்டு முரலும்: வண்டின் ஒலி 'முரலுதல்'./ரீங்காரமிடுதல்.

5. ​சங்கு ஒலிக்கும்/முழங்கும் : சங்கின் ஒலி 'ஒலித்தல்'./ முழங்குதல்.

​       இந்த ஒலி மரபுச் சொற்கள் வெறும் ஒலிக்குறிப்புகள் அல்ல. அவை அந்த ஒலியின் தன்மை, சூழல், மற்றும் உணர்வு ஆகியவற்றை நமக்கு உணர்த்துகின்றன. இதுபோன்ற மரபுச் சொற்களைப் பயன்படுத்துவது நம் மொழியின் அழகையும் ஆழத்தையும் அதிகரிக்கும்.

​இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் .

       ​இன்றைய தலைமுறையினர் நம் மரபுச் சொற்களைக் கற்றுக்கொள்வதும், பயன்படுத்துவதும் மிகவும் அவசியம். இதன் மூலம், நம் மொழியின் பாரம்பரியம் தொடர்ந்து வாழும்.


   @ Sponsorship @ :



"This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994077196.

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"

😋 சுவையான பீர்க்கங்காய் கூட்டு: எளிய முறையில் சமைக்கும் ரகசியம்! Yummy Birkankai Compound: The Secret to Easy Cooking!

                    😋பீர்க்கங்காய் கூட்டு 😋        சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை எனப் பலவற்றுடனும் அருமையாகச் சேரும் பீர்க்கங்காய் கூட்டு...