@ சொற்றொடர் அமைப்பு முறை @
சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது.
எழுவாய் :
எழுவாய் விளக்கம் :
ஒரு தொடரில் யார்?, எது?, எவை?, யாவர்? என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாயாக அமையப்பெறும். எப்போதும் இவை பெயர் சொல்லாகவே இருக்கும்.
" எழுவாய் என்பது பெயர்ச்சொல்."
எடுத்துக்காட்டு :
1. கவிதா பாடல் பாடினாள்.(யார்)
2. மாணவர்கள் ஓவியம் வரைந்தனர்.(யாவர்)
3.புலி மானைத் துரத்தியது.(எது)
4. குருவிகள் தானியங்களைத் தின்றன.(எவை)
இத்தொடர்களில் கவிதா,மாணவர்கள்,புலி,குருவிகள் என்பது எழுவாய். அதாவது வாக்கியத்தின் முதலில் வரக்கூடியது . அதுவும் பெயராக அமையப்பெறும்.
செயப்படுப்பொருள் :
செயப்படுபொருள் விளக்கம் :
ஒரு தொடரில் யாரை?, எதனை?, எவற்றை? என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே செயல்படு பொருள்.
( " எதனை" என்பது ஒருமையில், "எதை" என்னும் கேள்விக்கு நிகரான ஒரு மரியாதை வடிவமாகவும், "எவற்றை" என்பது பன்மையில் "எதை" என்பதற்கு நிகரான ஒரு மரியாதை வடிவமாகவும் பயன்படுத்தப்படுகிறது.)
எடுத்துக்காட்டு :
1.புலி ராமனைத் துரத்தியது. (யாரை)
2. தருண் காற்றை சுவாசித்தான்.(எதை)
3. குருவிகள் தானியங்களைத் தின்றன. ( எதனை)
இத்தொடர்களில் ராமனை, காற்றை, தானியங்களை - என்றச் சொற்கள் செயப்படுபொருளாக வருகிறது.
பயனிலை :
பயனிலை விளக்கம் :
ஒரு தொடரை முழுமை பெறச் செய்யும் சொல்லையே பயனிலை என்கிறோம்.
எடுத்துக்காட்டு :
1. கவிதா பாடல் பாடினாள்.
2.மாணவர்கள் ஓவியம் வரைந்தனர்.
3. புலி மானைத் துரத்தியது.
4. குருவிகள் தானியங்களைத் தின்றன.
இத்தொடர்களில் பாடினாள், வரைந்தனர், துரத்தியது, தின்றன என்றச் சொற்கள் பயனிலையாக வருகிறது.
# எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் ஒரு தொடரின் பகுதிகள் ஆகும்.
# எழுவாயோ, செயப்படுபொருளோ வெளிப்படையாக இல்லாமலும் தொடர் அமையும் .
எடுத்துக்காட்டு :
1. நடனம் ஆடினாள் - இத்தொடரில் எழுவாய் இல்லை.
2. தென்றல் ஆடினாள் - இத்தொடரில் செயல்படுபொருள் இல்லை.
# தொடரானது எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமல் அமையலாம். ஆனால் பயனிலை இல்லாமல் அமையாது.
சொற்றொடர்:
1. மாதவி சித்திரம் தீட்டினாள்.
மாதவி - எழுவாய் .
சித்திரம் - செயப்படுபொருள்.
தீட்டினாள் - பயனிலை.
2. இளங்கோடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
இளங்கோவடிகள் - எழுவாய்.
சிலப்பதிகாரம் - செயல்படு பொருள்.
இயற்றினார் - பயனிலை .
3. அன்பழகன் மிதிவண்டி ஓட்டினான்.
அன்பழகன் - எழுவாய்
மிதிவண்டி - செயல்படு பொருள்.
ஓட்டினான் - பயனிலை.
4. கிளி பழம் தின்றது .
கிளி - எழுவாய் .
பழம் - செயல்படு பொருள்
தின்றது - பயனிலை.
Sponsorship :
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping
#buymoteeapplication"