சனி, 18 ஜனவரி, 2025

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் உருவாக்கிய பலவகையான அழகியக் கோட்டைகள் - பகுதி 1.Tamil Nadu Forts Part 1.

                 தமிழக கோட்டைகள் ( பகுதி-1)

          தமிழகத்தை மன்னர் பல சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளனர் . அவர்களுள் சேரர், சோழர் , பாண்டியர் , பல்லவர் , நாயக்கர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.                                

          சோழர்கள் , பாண்டியர்கள் , நாயக்கர்கள் ஆகியோர் தமிழகத்தில் அற்புதமான கோட்டைகளைக் கட்டினார்கள். டச்சு,  பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் போன்ற அயல் நாட்டினரும் நமது நாட்டிற்குள் நுழைந்து கோட்டைகளைக் கட்டியுள்ளனர்.

            



       அக்கால கட்டடக்கலையின் நினைவுச் சின்னங்களாக கோட்டைகள் விளங்குகின்றன. வரலாற்று இடங்களாகவும் பாதுகாக்கப்படுகிறது. அக்கால கோட்டைகளில் சில கோட்டைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன .


கோட்டைகளின் வகைககள் :


தமிழ்நாட்டில் உள்ள கோட்டைகள் , 

       அ. சங்ககாலக் கோட்டைகள், 

       ஆ. பேரரசுக் கோட்டைகள், 

       

       இ. சிற்றரசர்களின் கோட்டைகள்,

        ஈ.  பாளையக் காரர்களின் கோட்டைகள்,

         உ.  ஐரோப்பிய/ சேதுநாட்டுக் கோட்டைகள் 

      எனப்  பல வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. 

       எல்லைப்புறங்களில் காடுகளில் படைப்பற்று அல்லது படைவீடு என அழைக்கப்படும் கோட்டைகள் அமைக்கப்பட்டன. 
செலவுக்காக மக்களிடம் "கோட்டைப் பணம்" என்று வரி வசூலிக்கப்பட்டது.

    கருங்கற்களால் ஆன கோட்டைகள்,

    மண்ணால் ஆன கோட்டைகள்,

    மலையால் ஆன மலைக்கோட்டைகள்,

    செங்கற்களால் ஆன கோட்டைகள் என கோட்டைகள் பலவாறாக அமைக்கப்பட்டிருந்தது.

         தமிழகத்தில் பல பகுதிகளில் பழைய கோட்டைகள் உள்ளன . தமிழக சுற்றுலாக்களின் முக்கிய இடங்களாக விளங்குகின்றன . அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

 
1.புனித ஜார்ஜ் கோட்டை :


              இந்தியாவில் பிரித்தானியர்களின்  முதலாவது கோட்டையாகும்.
        இந்த கோட்டை சென்னை கடற்கரை பகுதியில் உள்ளது . இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் 1639 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ல் கட்டப்பட்டது .

          



     ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், அமைச்சர் அலுவலகங்கள்,

 சட்டமன்றம்   ஆகியவை உள்ளன.


      கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றிலும்  அகழி உள்ளதை இன்றும் காணலாம். இவை தவிர புனித மேரி கிறித்தவ ஆலயம்கிளைவ் மாளிகை, மற்றும் கோட்டை அருங்காட்சியகம் ஆகிய மூன்று முக்கியக் கட்டடப் பகுதிகள் இங்கு உள்ளன.


2 . புனித டேவிட் கோட்டை :


      இந்தியாவின் சோழ மண்டலக் கடற்கரைப் பகுதியில் உள்ளது.தமிழகத்தில்  கடலூர் நகரத்திற்கு அருகில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.

         



    இக்கோட்டை1650 ஆம் ஆண்டு மராட்டியரிடம் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் வாங்கப்பட்டது. 1756 ஆம் ஆண்டு ராபர்ட் கிளைவ் புனித டேவிட் கோட்டையின் ஆளுனராகப் பதவி வகித்தார்.


    கோட்டை, மற்றுமுள்ள இடங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்காக விநோதமான வழிமுறை கையாளப்பட்டது.  கோட்டையில் இருந்து வானை நோக்கி ஒரு பீரங்கிக் குண்டு சுடப்பட்டு, அந்த பீரங்கிக் குண்டு விழுந்த இடம் வரை கோட்டைக்குச் சொந்தமான பகுதியாக கைக்கொள்ளப்பட்டது. இன்றும் அந்தக் கிராமங்கள் ‘பீரங்கிக்குண்டு கிராமங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன.

         



     இது ஒரு பிரிட்டீஷ் கோட்டையாகும்.தற்போது பராமரிப்பின்றி வெள்ளி கடற்கரைக்கு அருகில் உள்ளது.

3. வேலூர் கோட்டை :


       வேலூர் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் 1566 ஆம் ஆண்டு  விஜய நகர பேரரசு காலத்தில் நாயக்கர் மன்னரான  இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்முன நாயக்கரால்   கட்டப்பட்டு தற்போது வரைப் பயன்பாட்டில் உள்ளது.ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை  133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

       



        தமிழ்நாட்டின் கோட்டைகளில் வேலூர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக கருதப்படுகிறது. கருங்கற்களால் கட்டப்பட்ட அழகியக் கோட்டையாகும்.


        191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளதுஇந்த அகழி ஆயிரக்கணக்கான முதலைகளைக் கொண்டிருப்பதால் படையெடுப்பவர்கள் இதனைக் கண்டு அஞ்சினர்.


       வேலூர் கோட்டை ராணுவ கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் . இது இரட்டை கோட்டைகளாக உருவாக்கப்பட்டுள்ளது.     1799 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானிய குடும்பம் ஆங்கிலேயர்களால் இங்கு சிறை வைக்கப்பட்டது . 1806 ஆம் ஆண்டில் வேலூர் கோட்டையில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் கிளர்ச்சி இங்குதான் நடைபெற்றது.

           


        வேலூர் கோட்டைக்கு புகழ் பெற்ற ஜலகண்டேஸ்வரர் ஆலயம் , தேவாலயம் , மசூதி , அருங்காட்சியகம் மற்றும் பல அரசு அலுவலகங்கள் உள்ளன. வேலூர் கோட்டையின் உள்ளே ஹைதர் மஹால்,  திப்பு மஹால் , பேகம் மஹால் , கண்டி மஹால் , பாதுஷா மஹால் என ஐந்து முக்கியமான மஹால்கள் காணப்படுகின்றன.

      இக்கோட்டை வரலாற்று சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.இக்கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறித்தவ தேவாலயம், பள்ளிவாசல் ஆகியவை உள்ளன.


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...