ஞாயிறு, 15 ஜூன், 2025

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

     

@ சொற்றொடர் அமைப்பு முறை @


        சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

எழுவாய் :


எழுவாய் விளக்கம் :


    ஒரு தொடரில் யார்?, எது?, எவை?, யாவர்? என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாயாக அமையப்பெறும். எப்போதும் இவை பெயர் சொல்லாகவே இருக்கும்.


   " எழுவாய் என்பது பெயர்ச்சொல்."


எடுத்துக்காட்டு :


1. கவிதா பாடல் பாடினாள்.(யார்)

              



2. மாணவர்கள் ஓவியம் வரைந்தனர்.(யாவர்)

            



3.புலி மானைத் துரத்தியது.(எது)

           



4.  குருவிகள் தானியங்களைத் தின்றன.(எவை)

            



        இத்தொடர்களில்  கவிதா,மாணவர்கள்,புலி,குருவிகள்  என்பது எழுவாய். அதாவது வாக்கியத்தின் முதலில் வரக்கூடியது . அதுவும் பெயராக அமையப்பெறும்.

 
செயப்படுப்பொருள் :


செயப்படுபொருள் விளக்கம் :


    ஒரு தொடரில் யாரை?, எதனை?, எவற்றை? என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே செயல்படு பொருள்.


( " எதனை" என்பது ஒருமையில், "எதை" என்னும் கேள்விக்கு நிகரான ஒரு மரியாதை வடிவமாகவும், "எவற்றை" என்பது பன்மையில் "எதை" என்பதற்கு நிகரான ஒரு மரியாதை வடிவமாகவும் பயன்படுத்தப்படுகிறது.)

   
எடுத்துக்காட்டு :

1.புலி  ராமனைத் துரத்தியது. (யாரை)

        



2. தருண் காற்றை சுவாசித்தான்.(எதை)

         



3. குருவிகள் தானியங்களைத் தின்றன.            ( எதனை)


     இத்தொடர்களில் ராமனை, காற்றை, தானியங்களை - என்றச் சொற்கள் செயப்படுபொருளாக வருகிறது.

பயனிலை :

பயனிலை விளக்கம் :


     ஒரு தொடரை முழுமை பெறச் செய்யும் சொல்லையே பயனிலை என்கிறோம்.


எடுத்துக்காட்டு :


1. கவிதா பாடல் பாடினாள்.

2.மாணவர்கள் ஓவியம் வரைந்தனர்.

3. புலி மானைத் துரத்தியது.

4. குருவிகள் தானியங்களைத் தின்றன.


     இத்தொடர்களில் பாடினாள், வரைந்தனர், துரத்தியது, தின்றன என்றச் சொற்கள் பயனிலையாக வருகிறது.


     # எழுவாய், பயனிலை,  செயப்படுபொருள் ஆகிய மூன்றும் ஒரு தொடரின் பகுதிகள் ஆகும்.


      # எழுவாயோ, செயப்படுபொருளோ வெளிப்படையாக இல்லாமலும் தொடர் அமையும் .


எடுத்துக்காட்டு :


        1. நடனம் ஆடினாள் -  இத்தொடரில் எழுவாய் இல்லை.


         2.  தென்றல் ஆடினாள் - இத்தொடரில் செயல்படுபொருள் இல்லை.


      # தொடரானது எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமல் அமையலாம். ஆனால் பயனிலை இல்லாமல் அமையாது.


சொற்றொடர்:


1. மாதவி சித்திரம் தீட்டினாள்.
       மாதவி - எழுவாய் .
       சித்திரம் - செயப்படுபொருள்.
       தீட்டினாள் -  பயனிலை.


2. இளங்கோடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
      இளங்கோவடிகள் - எழுவாய்.
      சிலப்பதிகாரம் - செயல்படு பொருள்.
        இயற்றினார் - பயனிலை .


3. அன்பழகன் மிதிவண்டி ஓட்டினான்.
          அன்பழகன் - எழுவாய்
         மிதிவண்டி - செயல்படு பொருள்.    
         ஓட்டினான் - பயனிலை.


4. கிளி பழம் தின்றது .
              கிளி - எழுவாய் .
               பழம் - செயல்படு பொருள்
             தின்றது - பயனிலை.

 

Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping
#buymoteeapplication"

 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...