உழவனின் நண்பன் மண்புழு!
மண்புழு உலகமெங்கும் காணப்படுகிறது.மண்புழுவில் பல வகைகள் உண்டு. ஆங்கிலத்தில் இதன் பெயர் EARTHWORM. மழைக்காலம் தொடங்கிவிட்டால் அதிகமாக ஊர்ந்து செல்லும் மண்புழுக்களைக் காணலாம். பொதுவாக இவை வளைத்தசை உருளைப் புழுக்களின் தொகுதியின் கீழ் அமைகிறது.
மண்புழுக்கள் விவசாயிகளின் நண்பனாகக் கருதப்படுகிறது.
ஊட்டச்சத்து :
ஒரு மண்புழு அதன் ஊட்டச்சத்தை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிலிருந்து பெறுகிறது.
உடல் உறுப்பு :
மண்புழுக்களுக்கு நுரையீரல் கிடையாது.
இவை தோல் வழியாக சுவாசிக்கின்றன. மண்புழுவின் உடல் முழுவதும் ஒளிபுகக்கூடிய மெல்லிய தோல் மூடி இருக்கும் . அதன் வழியாகவே மண்புழு சுவாசிக்கும். அதன் தோல் எப்போதும் ஈரமாகவே இருக்கும் . தோல் உலர்ந்து போனால் அதனால் சுவாசிக்க முடியாமல் இறந்துவிடும் . மண்புழுவால் நீருக்குள்ளேயும் வாழ முடியாது. எனவே தான் மழைக்காலத்தில் இது தரைக்கு மேலே வந்து விடுகிறது.
மண்புழுவிற்கு கண்கள் இல்லை. எனவே ஒளி மற்றும் தொடுதலை உணர அவற்றின் தோளில் உள்ள ஏற்பிகளைப் பயன்படுத்துகின்றன.
மண்புழுவிற்கு காதுகள் கிடையாது. எனினும் ஒளியையும், அதிர்ச்சியையும் உணரும் ஆற்றல் இதற்கு உண்டு. உடலின் அடிப்புறத்திலுள்ள சிறு சுனைகளின் உதவியால் ஊர்ந்து செய்கிறது.
மண்புழுவின் இடப்பெயர்வு :
இ
( மண்புழு நீரை விட்டு வேகமாக தரை நோக்கிச் செல்லும் வீடியோ)
ஒற்றை அடுக்குக் கொண்ட இதன் புறத்தோல், வளைத் திசுக்களால் ஆனது. அதன் கீழ் நீண்ட தசைநார்களால் உள்ளன. இந்த தசைநார்கள் சுருங்கும் போது, மண்புழு அளவில் சிறியதாகி, உடல் பருத்து விடும். வளைத்திசுக்கள் சுருங்கும் போது, மண்புழுவின் உடல் நீண்டு விடும். இப்படி மாறி மாறி நார்தசைகள் இயங்குவதால், மண்புழு இடம் பெயருகிறது.
தோல்முடி :
பெருந்தொகையான நுண்ணிய தோல்முடிகள், இந்த இயக்கத்திற்கு துணைப் புரிகின்றன.வளைத்திசுக்கள் சுருங்கும் போது, இந்த முடிகள் உடலின் பின்பகுதியை அசையாது பிடித்துக்கொள்கிறது. இதனால் உடலின் முன்நுனி நீள்கிறது. அதேபோல, முன்நுனியின் முடிகள் பிடித்துக் கொள்ளும் போது, பின்பக்க உடல், முன்னே இழுக்கப்படுகிறது.
செரிமானம் :
உடலின் முன்நுனியிலுள்ள வாய்ப்பகுதி மண்ணை விழுங்கி, உடலின் இறுதிவரை அனுப்பும் போது செரிமானம் நடைபெறுகிறது.
மண்புழு உரம் :
திட கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மண்புழு மண்ணைக் குடையும் முறையே மிக அழகாக இருக்கும். அது மண்ணை குடையும்போது அதன் வாய் திறந்திருக்கும். அதன் வழியாக மண் உள்ளே செல்லும். அந்த மண்ணில் உள்ள சிறு உயிர்களும் முக்கிய தாவரச் சத்துக்களும் இதற்கு உணவாகின்றன. எஞ்சிய மண் வால்புறமாக வெளியே வந்துவிடும்.
மண்புழு இயற்கையின் இலை, தழை, விவசாய மற்றும் இதர கழிவுகளை உட்கொண்டு எச்சங்களாக சிறுசிறு உருண்டைகளை வெளியேற்றுகின்றன. இதனையே மண்புழு உரமாகக் கொள்கிறோம். இதில் தலைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய சத்துக்கள் கிடைக்கின்றன. 45 முதல் 60 நாட்களில் மண்புழு உரம் உற்பத்தி ஆகிவிடும் . இந்தியாவில் உள்ள 384 மண்புழு வகைகளில் 6 வகையான மண்புழுக்கள் உரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
மண்புழுவின் பயன்கள் :
# செரிமானக் கழிவால் அதன் வாழிட மண்ணை வளப்படுத்துகிறது.
# மண் மிருதுவாக மாறுவதால் மண்ணில் காற்றோட்டமும் , நீரும் அதிகம் தங்கி தாவர வேர்களுக்கு நன்கு ஊட்டமளிக்கிறது .
# மண்புழு உரம் பயன்படுத்துவதால் மண்ணின் தரம் உயரும் .
# விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கும்.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"