வெள்ளி, 18 ஏப்ரல், 2025

கட்டுரை எழுதும் முறைகள் ! Article Writing Methods and two model article writting method

       

கட்டுரை எழுதும் முறைகள் :


  கட்டுரை விளக்கம் :


     கட்டுரை என்பது கட்டு + உரை # கட்டுரை. நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பிற்கு ஏற்றவாறு உரைகள்  அமைகின்ற முறை தான் கட்டுரை.


கட்டுரை பின்வரும் முறையில் அமைக்கப்பட்டிருப்பின் சிறப்பானதாக அமையும்.

         



எழுதும் முறைகள் :


         1. கட்டுரை எழுத தொடங்கும் முன் கட்டுரையின் தலைப்பினை படிப்பவர்களுக்கு நன்றாக புரியும் வகையில் தெளிவான மொழி நடையில் அமைத்தல் வேண்டும்.


         2.கட்டுரையின் ஆரம்பத்தில் முன்னுரை அமைய வேண்டும். இந்த முன்னுரையானது தலைப்பை எடுத்து விளக்கும்படியாக ஐந்து வரிகளுக்கு மிகாமல் கட்டுரை தலைப்பினை பார்ப்பவர் எவருக்கும் எளிதில் புரிய வைக்கும்படி அமைத்தல் வேண்டும்.


          3.அடுத்ததாக பொருளுரை அமைய வேண்டும் . பல சிறிய தலைப்புகளில் கட்டுரை தலைப்போடு தொடர்பு கொண்டதாக அமைதல் வேண்டும் .


            4. கட்டுரையின் பொருளுரையில் சில இடங்களில் அறிஞர்களின் பொன்மொழிகள், திருக்குறள், தமிழ் பாடல்கள் போன்றவை பொருத்தமான இடங்களில் மேற்கோள்களாக காட்டுவது மிகச் சிறந்ததாக அமையும்.


              5. கட்டுரையின் நடுவே குறிப்பிடப்படும் அரிய கருத்துக்கள் மேற்கோள்கள் காட்டி(" ") அதனை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும்.


               6. கட்டுரையின் இறுதியில் முடிவுரை அமைதல் வேண்டும்கட்டுரையின் முடிவுரை 5 முதல் 10 வரிகளுக்கு உட்பட்டு அமைத்தல் சிறப்பு.


               7.கையெழுத்து மிக அழகாகவும், தெளிவாகவும் இருத்தல் வேண்டும்.


                8 .  கட்டுரை எழுதும் முன் கட்டுரை தலைப்பினை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டு தலைப்பிற்கு ஏற்ற மாதிரியான கட்டுரையை எழுத வேண்டும்.


              9 . கட்டுரைகள் எழுதிய பின்பு அதனைப் படித்துப் பார்க்க வேண்டும். எழுத்துப்பிழை , வாக்கியப்பிழை , இலக்கணப் பிழை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் . கட்டுரைகள் இரண்டு அல்லது மூன்று பாகங்கள் பக்கங்களுக்கு மிகாமல் எழுதுதல் வேண்டும்.


             10. நாம் எழுதும் கட்டுரை படிப்பவர்களின் மனதை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும். கட்டுரையை ஆர்வமாக படிக்கும் படியாக எழுத வேண்டும்.

மாதிரிக் கட்டுரை 1 :

       சிறப்பான வாழ்க்கைக்கு சிறுசேமிப்பு !

           


 முன்னுரை :

        ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழ அவசியம் செய்ய வேண்டியது சிறுசேமிப்பு. சேமிப்பு இல்லாதவன் வாழ்க்கை , கால்களால் நடப்பதற்கு பதில் தலையால் நடப்பதற்கு ஒப்பாகும். சேமிப்பின் பெருமையை பற்றி இக்கட்டுரையில் காணலாம் . 

சிக்கனம் தேவை :

       நாம் அன்றாடம் உழைத்து சம்பாதிக்கிறோம். சம்பாதிப்பதில் எதிர்காலத்திற்காக சிறிதளவாவது சேமித்து வைக்க வேண்டும் . இன்றைய காலகட்டத்தில் கல்விச் செலவு , பயணச் செலவு , மருத்துவச் செலவு , திருமண செலவு மற்றும் திடீர் செலவு என பல வகையான செலவுகள் நம்மை நோக்கி வருகின்றன. அவற்றையெல்லாம் சமாளிக்க சேமிப்பு மிகவும் அவசியமாகும் . 

          ' உங்கள் முதல் செலவே சேமிப்பு ' என்று ஒரு வங்கி கூறுகிறது . நமது சம்பளத்தில் 20% சேமிப்பு செய்தோம் என்றால் நம் எதிர்காலத்தில் பயமில்லா வாழ்க்கை வாழ முடியும் . மாதம் மாதம்  ஒருவர் சேமித்துக் கொண்டே வந்து அப்பணத்தை செலவு செய்து விட்டு வெறும் கையாக இருந்தால். நாளைக்கு அவசர தேவைக்கு என்ன செய்வது? யோசிக்கவும் . 

           சிக்கனமாக செலவு செய்தால் கடன் வாங்காமல் வாழலாம் . சிலர்  தேவையில்லாமல் செலவு செய்து விட்டு பின் கடன் வாங்கி பாதிக்கப்படுகின்றன . இந்த நிலை வராமல் இருக்க சிக்கனம் அவசியமாகிறது . 

எவ்வாறு சேமிக்கலாம் ?

       வாங்குகிற சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்குமே பற்றவில்லை , எங்கிருந்து சேமிப்பது ? என்று பலர் புலம்புவதை காணலாம். இது தேவையற்ற புலம்பல். முதலில் நமக்குள் ஒரு வைராக்கியமான எண்ணம் இருக்க வேண்டும் . எதிர்கால நல்வாழ்விற்கு சேமிக்க வேண்டும் என்ற கருத்தை நமக்குள் விதைத்துக் கொள்ள வேண்டும் . 10 ரூபாய் சம்பாதிக்கிறோம் என்றால் ஒரு ரூபாய் சேமிப்பிற்காக எடுத்து வைத்து விட வேண்டும். மீதி ஒரு ரூபாயில் தான் செலவுகள் செய்ய வேண்டும் .                                

         அன்றாடம் செய்யும் செலவுகளை அவசியம் எழுதி வைக்க வேண்டும் . இது முக்கியமானது . நமது தேசப்பிதா பைசா செலவு என்றாலும் எழுதி வைப்பாராம். நமது செலவுகளை எழுதி வைத்து பார்த்தால் நமக்கு எது தேவையான செலவு ? எது தேவையில்லாத செலவு ? என்று தெரிந்துகொண்டு  தேவையில்லாத செலவுகளை நீக்கிவிட முடியும் .

       இன்று மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று ஆடம்பர செலவுகளை அதிகம் செய்துவிட்டு கடன் மேல் கடன் வாங்கி கஷ்டப்படுகின்றன. கடன் தொல்லையால் தற்கொலைக்குக் கூட செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. இந்நிலைக்கு ஆளாகாமல் சேமிக்க பழகுங்கள். 

சேமிக்கும் வழிமுறைகள்:

          இன்று அரசாங்கம் வங்கிகள் , எல்ஐசி போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தபால் அலுவலகங்கள் என அரசு நிறுவனங்களில் சேமிக்க பல வழிகள் இருக்கின்றன. தற்போது  SIP சேமிப்பு முறையும் உள்ளது. இவைகளை அந்தந்த நிறுவனங்களில் கேட்டு அறிந்து கொள்வது நல்லது. குறைந்த வட்டி என்றாலும் நமது பணத்திற்கு பாதுகாப்பு. சில தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் அதிக வட்டி தருகிறோம் என்று கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவார்கள். மக்களும் ஏமாந்து இன்றும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இதை புரிந்து செயல்பட வேண்டும் . இல்லை யெனில் நான் கட்டிய பணம் பைசா கூட நமக்கு கிடைக்காது! 

சிறுசேமிப்பின் பயன்கள்:

         மழைக்காலத்தில் வேண்டிய உணவுகளை எறும்புகள் வெயில் காலத்திலேயே சேமித்து வைக்கிறது.. நமது சீரான வாழ்க்கைக்கு சிறு சேமிப்பு அவசியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால் சிறு சேமிப்பின் பயன்களை உணரலாம் . அவசர தேவைக்கும் பல வகையான செலவுகளுக்கும் சேமிப்பு நமக்கு உதவும். 

       கடன் வாங்குவது சுலபம்.ஆனால் திருப்பி செலுத்துவது மிகவும் கடினம். கல்விச் செலவு, மருத்துவச் செலவு ,திருமண செலவு  மற்றும் வீடு கட்டும் செலவு போன்ற அவசிய செலவுகளுக்கு சேமிப்பு நமக்கு பக்கபலமாய் இருக்கும்.

 முடிவுரை :

         நாளைய நமது நல்வாழ்க்கைக்கு இன்றைய சேமிப்பு மிகவும் உதவும் என்பதை உணர்ந்து ஒருவரும் செயல்பட்டால் நமது வாழ்க்கையில் எந்த துன்பமும் இருக்காது. வாழ்க்கையை என்றும் ஒளிமயமாக அமைத்துக் கொள்ள நாம் தான் காரணமாக அமைய வேண்டும்.

மாதிரி கட்டுரை 2 : (கையெழுத்து)

மழை தன் வரலாறு கூறுதல் :

         


               



Sponsorship :

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"





      


திங்கள், 7 ஏப்ரல், 2025

உறவுமுறை கடிதங்கள் எழுதும் முறைகள் ! Relationship Letters Writing Methods !

 

        @ உறவுமுறை கடிதங்கள் @


உறவுமுறைக் கடிதங்கள் எழுதும் முறைகள் :

 
1 . உறவுமுறை கடிதங்கள் , குடும்ப உறுப்பினர்கள் , உறுப்பினர் அல்லாமல் உறவு முறைகளிலும் ,  நண்பர்களுக்கும்  எழுதும் கடிதம் ஆகும்.

         


 
2 . கடிதத்தின் வலது பக்க ஓரத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருந்து எழுதுகிறீர்கள் அதாவது நீங்கள் இருக்கும் இடத்தின் பெயரை எழுத வேண்டும் காற்புள்ளி இடவேண்டும் (,).
எ.கா :    
                                             
கும்பகோணம்.



3 .  அதன் கீழ் கடிதம் எழுதும் நாள் இடம் பெற வேண்டும் . இறுதியில் நிறுத்துக்குறி இடவேண்டும் .
எ.கா :
                                                        

                                                       கும்பகோணம்

                                                      07.04.2025.


4 . அதன் கீழ் இடது பக்க ஓரத்திலிருந்து  கடிதத்தின்உறவு முறையை  " அன்புள்ள அம்மா "  "அன்பான தங்கை "  என்று எழுத வேண்டும் .
எ.கா :
அன்புள்ள அம்மா,


5 . கடிதத்தில் கருவின் ஆரம்பத்தில் உடல் நலம் விசாரிக்கும் படியாக எழுத வேண்டும் . பின்பு நாம் எழுத இருக்கும் செய்தியை எளிதில் புரியும் படியாக எழுத வேண்டும். முன்பு கடிதம் எழுதியிருந்தால்  அக்கடிதத்திற்கான பதிலினையும்  விளக்கமாக எழுத வேண்டும் .


6. கடிதத்தின் இறுதியில் வலது பக்க ஓரத்தில் அன்புள்ள மாமா , அன்புள்ள தம்பி , அல்லது அன்பபுள்ள மகள் என உறவுமுறை குறிப்பிட்டு எழுதி அதன் கீழ் கையெழுத்திட வேண்டும்.
எ.கா :
                                            அன்புள்ள மகள்
                                            ( கையொப்பம்)

 
7 . கடித உறைமேல் அனுப்ப வேண்டியவரின் முகவரி எழுதப்பட வேண்டும்.
எ.கா :
          ச.சரண்யா ,
          க/பெ ப.முத்துசாமி ,
           கதவு எண் :16, செந்தில் நகர்,
           திருவிடைமருதூர் தாலுக்கா ,
           கும்பகோணம் வட்டம்,
            தஞ்சாவூர் மாவட்டம்-612602.)



மாதிரி கடிதம் 1 :

 

பள்ளி ஆண்டுவிழா பற்றி அம்மாவுக்கு 

கடிதம் : 

                                             கும்பகோணம்.

                                                  07.04.2025.

 அன்புள்ள அம்மா ,

                 நான் நலம் அதுபோல். அங்கு வீட்டில் அம்மா, அப்பா. தங்கை அனைவரும் நலமா ? தற்போது பள்ளி ஆண்டு இறுதி விழா நடைபெற உள்ளதால் எங்கள் பள்ளியில் 09.04.2025 அன்று பள்ளி ஆண்டு விழா நடைபெறுவதாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதில் எனக்கு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான பரிசுகளும் மற்றும் கவிதை ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும் .

             மேலும் அன்று நடைபெற உள்ள கலை நிகழ்ச்சிகளில் நானும் பங்கேற்கிறேன். ஆதலால் நீங்கள் அப்பாவுடன் ஆண்டு விழாவிற்கு வந்து என்னுடைய திறமைகளை நேரில் கண்டு களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

                                            அன்புள்ள மகள்

                                                 க. அபிராமி.

உறைமேல் முகவரி :


            ச.சரண்யா ,

          க/பெ ப.முத்துசாமி ,
           கதவு எண் :16, செந்தில் நகர்,
           திருவிடைமருதூர் தாலுக்கா ,
           கும்பகோணம் வட்டம்,
            தஞ்சாவூர் மாவட்டம்-612602.


மாதிரிக் கடிதம் : 2

      



Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping
#buymoteeapplication"





          
     
         

சனி, 5 ஏப்ரல், 2025

நீர் நிலைகளில் வாழும் நண்டுகள் ! Crabs that live in water bodies !

 

                   # நண்டுகள் ( CRABS ) #


               முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் நண்டு பற்றிய சுவாரசியமான செய்திகளை இதில் காணலாம். ஜப்பானிய கடலில் மிகப்பெரிய நண்டுகள் வாழ்கின்றன.

         நண்டுகள் பிரபலமான கடல் உணவு ஆகும்.நன்னீர், உவர்நீர் இரண்டிலும் வாழும் தன்மையுடையவை.


நண்டுகளின் வகைகள் :

1 . தேங்காய் நண்டு.
2 . குளுவான் நண்டு.
3 . நீலக்கால் நண்டு.
4 . குதிரைலாட நண்டு


உலகின் மிகப்பெரிய நண்டு :


      ஜப்பானிய சிலந்தி நண்டு, 13 அடி (4 மீட்டர்) க்கும் அதிகமான கால் இடைவெளியை அடையும் திறன் கொண்டது.


இருப்பிடம் :

         



           பொதுவாக நண்டுகள் ஆறு , குளம்கடல் இவற்றின் தரைகளிலும் வயல் வரப்புகளிலும் காணக் கிடைக்கின்றன.

        



உடலமைப்பு :


         நண்டுகளுக்கு கனமான மேல் ஓடு இருக்கும் . இது ஓட்டு மீன் இனத்தைச் சார்ந்தது.


        நண்டின் தலையும் , மார்பும் ஒன்றாக இணைந்து மேல் ஓட்டினால் மூடப்பட்டிருக்கும்.


        உடலின் பின் பகுதியாக இருப்பது வயிறு.


கண்கள் :

          



         கூட்டுக் கண்கள் இரண்டினைக் கொண்டவை. நண்டின் கண்கள் , காம்பு போன்ற சிறு உறுப்புகளின் நுனியில் அமைந்துள்ளன . இந்த காம்புகள் உயர்த்தி மடக்கி வைத்துக் கொள்ளக் கூடியவை . மற்ற நேரங்களில் மேலோட்டின் விளிம்பில் உள்ள இரு பள்ளங்களில் காம்புகளை மடித்து வைத்துக் கொள்ளும்

        ஆண்டுக்கு ஒருமுறை மேலோடு கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன.


      பெண் நண்டுகள் ஆண் நண்டுகளை விட பார்க்க அகலமான வயிற்றுப் பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் முட்டைகளைக் கொண்டுள்ளன.


கால்கள் :


       நண்டுக்கு 10 கால்கள் உள்ளன . இவற்றில் முன் பக்கத்தில் உள்ள இரு கால்கள் மிகப் பெரியதாகவும் நுனியில் வலுவான பெரிய இடுக்கி உடையதாகவும் இருக்கும். இவை இரையைப் பிடிக்கின்றன . மற்ற எட்டு கால்களும் நடக்க உதவுகின்றன.

           



       கடலில் நீந்தி வாழும் நண்டுகளுக்கு பின்னங்கால்கள் தொகுப்பு போல தட்டையாக இருக்கும்.

           



        நண்டுகள் எப்போதும் பக்கவாட்டிலேயே நடக்கக் கூடியவை

சுவாசம் :


       நண்டுகள் செவுள்களால் சுவாசிப்பவை . மேல் ஓட்டின் பக்கங்களில் இச்செவுள்கள் உள்ளன .

        சிறு பூச்சி , புழுபாசி ஆகியவை நண்டின் உணவாகும்.


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #application.



ஞாயிறு, 30 மார்ச், 2025

விண்ணப்பக் கடிதம் எழுதும் முறை ! The method of writing the application letter in tamil

 

          விண்ணப்பக் கடிதம் எழுதுதல் .

          கடிதம் எழுதுதலில் விண்ணப்பக் கடிதம், புகார் கடிதம் ,  வியாபார கடிதம் ,  உறவு முறை கடிதம் என்று பலவாறு  எழுதப்படுகிறது . அதில் விண்ணப்பம் கடிதம் எழுதும் முறை பற்றி இதில் காணலாம்.

        



        பொதுவாக விண்ணப்பக் கடிதம் அலுவலகம் சார்ந்த இடங்களுக்கு  எழுதப்படுவதாகும்.

     பள்ளிப் பருவத்திலேயே நாம் கடிதம் எழுதிப் பழகிக் கொண்டால் எந்த ஒரு அலுவலகம் சார்ந்த இடத்திலும் விண்ணப்பக் கடிதம் எழுத நேரிட்டால் நாம் பிறர் துணை நாட வேண்டிய அவசிய இருக்காது.


விண்ணப்பக் கடிதம் எழுதும் முறை :


1.அனுப்புநர் :


           கடிதத்தின் ஆரம்பத்தில் அனுப்புநர் முகவரி முழுவதும் சரியாக எழுதப்பட வேண்டும்.


2.பெறுநர் :


         யாருக்கு நாம் கடிதம் அனுப்புகிறோமோ அவருடைய பெயர் அல்லது அவர் வசிக்கும் வசிப்பிடத்தின்  முகவரி மிகத் தெளிவாக எழுதப்பட வேண்டும் .


3 . பொருள் :


        நாம் எந்த காரணத்திற்காக கடிதம் எழுத இருக்கின்றோமோ அந்த காரணத்தை மட்டும் ஒரு வரியில் எழுத வேண்டும் . இதில் குறிப்பிடப்படும்  பொருள் கடிதத்தை படிப்பவர் சுருக்கமாக  கடிதம் முழுவதையும் படிப்பதுப் போன்று இருக்க வேண்டும் .


        4 . அடுத்ததாக கடிதத்தில் நாம் சொல்லவரும் செய்திகள் எழுதும் முன்பு மேலே " மதிப்பிற்குரிய ஐயா " என்ற மரியாதைக்குரிய வாக்கியம் இடம் பெற  வேண்டும் .


          5. செய்திகள் 8 முதல் 10 வரிகளுக்குள் இருப்பது நல்லது . மிகத் தெளிவாக கடிதத்தின் கருத்தை மட்டும் வலியுறுத்தும் படி அமைத்தல் வேண்டும் .


          6 . செய்திகள் முடித்த பின்பு "நன்றி"   இடம் பெற வேண்டும்.


           7.  நன்றி முடித்த பின்பு கடிதத்தின் வலது பக்க ஓரத்தில் "தங்கள் உண்மையுள்ள " 

என குறிப்பிட்டு அதன் கீழ் உங்கள்  கையொப்பம் இட வேண்டும்.மற்றும் உங்கள் பெயரையும் தெளிவாக அதன் கீழ் குறிப்பிட வேண்டும்.


           8 . பின் கடிதத்தின் இடது பக்க ஓரத்தில் கடிதம் எழுதுபவரின் இடம் பெயரும் அதன் கீழ் கடிதம் எழுதும் நாள் குறிப்பிடப்பட வேண்டும்.

        9. மாதிரி விண்ணப்பக் கடிதம் :

      


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #application".


        

செவ்வாய், 25 மார்ச், 2025

FAQ

 

                       FAQ.


1.What about this Blogger?
  This is for education for primary level.


2 .how this blogger used for?
Help students and teachers in elementary education.


3..How to help students to read ?
Simple sentences can be read as stories.


4.In any other way to help students?
There is about a particular subject and grammar is given in a simple way.


5.In which way it is useful ?
It is clearly given to the picture to make sense.


6.All of these are associated with elementary education ?
Yes.


7.How can this help teachers ?
This can be taken to make it easier for students.


8.In any language ?
Tamil and English.

ஞாயிறு, 23 மார்ச், 2025

போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் சின்னங்கள் / விதிகள் ! The symbols or rules used in transport !

 போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் சின்னங்கள் / விதிகள் :


# இடது பக்கம் செல்க :

            



      இந்திய நாட்டின் சாலை விதிகளின் அடிப்படையானது " இடது பக்கம்செல்ல வேண்டும் என்ற விதி தான் ". போவோர் தங்களது இடது பக்கமும் வருவோர் தங்களது இடது பக்கமும் பயணம் செய்யும்போது ஒருவர் மீது ஒருவர் மோதும் வாய்ப்பு இல்லை. அப்போது விபத்து நடக்கவும் வாய்ப்பு இல்லை.


# முந்துதல் :

          



        ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்த வேண்டிய அவசியம் நேரிடின்  வாகன நெரிசல் இல்லாத இடத்தில் தான் முந்த வேண்டும். வாகன நெரிசல் உள்ள இடத்தில் முந்தினால் விபத்து ஏற்படும்.


# சாலையை ஒரு விளையாட்டு மைதானமாக பயன்படுத்தக் கூடாது .


# சாலையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

 
# ஒருவர் பொது சாலையில் வாகனம் ஓட்ட வேண்டுமானால் அவர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் . ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் . அந்த வாகனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் . மேலும் அந்த வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


# போக்குவரத்து சமிக்ஞை பலகைககள் :


   @ சமிக்ஞைகள் மூன்று வகைப்படும்.  1.உத்தரவு சின்னங்கள். 2.எச்சரிக்கை சின்னங்கள். 3.தகவல் சின்னங்கள் . இவற்றில் எச்சரிக்கை பலகை உயிரினும் மேலானது. அவை விளம்பர சுவரொட்டிகளால் மறைக்கப்படும் போது வாகன ஓட்டிகள் பேரிடருக்குஆளாகின்றனர். தரைக்கு வந்த மீனைப் போல தவிக்கின்றனர்  அல்லது விபத்துக்குள்ளாகின்றனர். விளம்பரங்களை ஒட்டுபவர்கள் இவற்றையெல்லாம் சிந்தித்து இத்தகைய தவறுகளை தவிர்க்க வேண்டும் . இது தண்டனைக்குரிய குற்றமாகும் . இவற்றை பார்க்கும் தொண்டு நிறுவனங்கள் இவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.


1 . உத்தரவு சின்னங்கள் :

         








2 . எச்சரிக்கை சின்னங்கள் :

           

 





3 . தகவல் சின்னங்கள் :

         


# சாலை சமிக்ஞை விளக்குகள் :


      பாதுகாப்பாக சாலையில் சென்று திரும்பவே ஓட்டுநர் மற்றும் பாதசாரிகளுக்காக சாலை சமிக்ஞை விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன . சிகப்பு , ஆரஞ்சு மற்றும் பச்சை நிற விளக்குகள் சமிக்ஞை விளக்குகளாக பயன்படுத்தப்படுகின்றன.  விளக்கு சமநிலை எரியும்போது ஓட்டுநர்களும் பாதசாரிகளும் கீழ்க்கண்ட படத்தினைப்  பின்பற்றி நடக்க  வேண்டும்.

         


# போக்குவரத்து காவலர் கை சமிக்ஞைகள் :

 
        நெரிசலானப் போக்குவரத்து  சந்திப்புகளில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறையினரால் கை சமிக்ஞைகள் காண்பிக்கப்படுவதை  ஓட்டுநர்கள் சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

     



Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #application".


செவ்வாய், 11 மார்ச், 2025

மனிதனின் உயிர் காக்கும் தலைக்கவசம்! The life -saving helmet of man!

             

                         தலைக்கவசம்  (Helmet)

பழங்காலத்திலிருந்து தலைக்கவசம்:


         மன்னர்கள் ஆட்சி காலங்களில் போர்கள் நடைபெறும் போது வீரர்களின் உடல் உடலில் காயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு கவசம் அணிவது வழக்கம். அவர்கள் தலையைக் காக்க உலோகத் தலைக்கவசம் அணிந்தனர். அதிலிருந்து தோன்றியதுதான் வாகன ஓட்டுநர் தலைக்கவசம்.

          



        தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதுதான் பாதுகாப்பானது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கீழே உள்ள நேரிடும் போது அதிக வேகமாக தரையில் மோதுவது  தலைதான். தலையில் அடிபட்டு மூக்கு, காது, வாய் வழியாக இரத்தம் வெளியேறினால் அவர் பிழைப்பது மிகவும் கடினம்.

உயிர்சேதம் வேண்டாம் :


          தலையில் அடிபட்டவர் உயிர் போகலாம். நினைவற்ற நிலைக்கும்(Coma stage) வரலாம்.

        



         மனித செயல்களைக் கட்டுப்படுத்துவது மூளை( பெருமூளை, சிறுமூளை, முகுளம்). இவை தலையில்தான் உள்ளன. மேலும் கண், காது, மூக்கு, வாய் ஆகிய மிக முக்கிய உறுப்புகளும் தலையில்தான் உள்ளன. இவை அனைத்தும் அடிபடாமல் காக்கப்பட வேண்டும்.


        " எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் " என்ற பழமொழிக்கு மேற்கண்ட கருத்துக்களையே வலியுறுத்துகின்றன. விபத்தின் போது தலையில் அடிபடாமல் காக்கப்பட வேண்டும் எனில் தலைக்கவசம் அணிய வேண்டும்.


            முதன் முதலாக 1885 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிளை உருவாக்கியவர் ஜெர்மனியைச் சேர்ந்த " கோட்டிலெப் டெய்ம்ளர் " என்பவராவார் . அப்போதே தலைக்கவசம் தேவை என வலியுறுத்தப்பட்டது.

        



           இருசக்கர வாகனம் ஓட்டுபவர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் எனும் சட்டம் இன்னும் கடுமையாக  அமல்படுத்தப்பட வேண்டும் .

இயற்கையிலிருந்தும் பாதுகாப்பு :


    
மேலும் வெயில்,மழை , பனி, குளிர் தூசி இவற்றில் இருந்து தலையைக் காத்துக் கொள்ளவும் தலைக்கவசம் பயன்படுகிறது.


       
தலைக்கவசம் அணிந்தால் தான் இருசக்கர வாகன இயந்திரம் செயல்படத் துவங்கும் என்ற இயந்திர அமைப்பை பாங்காங் நகரில் உருவாக்கி உள்ளனர். (ஆதாரம் தினமலர் நாள் 21- 11 -2005 )

அதிகரித்து வரும் இரு சக்கர வாகனங்கள் :


           
மீப காலத்தில் நடக்கும் சாலை விபத்துகளில் அதிகமான உயிரிழப்பவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளே . இரு சக்கர வாகனங்கள்எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனால் அதிக விபத்துகள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது.அவர்கள் தலைக்கவசம் அணிந்து இருந்தால் உயிரிழக்க வாய்ப்பு இல்லை .


        1970 இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் கனடாவிலும் ஹெல்மெட் விதிகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டன. தற்போது நமது நாட்டிலும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது.


        
தற்காப்புக்காக பலர் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்வதை காண்கின்றோம். சட்டத்திற்காக தலைக்கவசம் அணிய வேண்டாம். தற்காப்புக்காக தலைக்கவசம் அணிய வேண்டும் . தற்காலத்தில் விண்வெளி வீரர்கள் , சிறந்த தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள், நீரில் மூழ்குவார்கள், கட்டிட தொழிலாளர்கள், கனரக தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் ஆகியவர்கள் தலைக்கவசம் அணிகின்றனர்.


         
மேல் நாடுகளில் தலைக்கவச சங்கம் செயல்பட்டு வருகின்றன. சேலத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது .


    
" ஹெல்மெட் விபத்தை தடுக்காது... ஆனால் உயிர்சேதத்தைத் தவிர்க்கும்....


Sponsorship :

 
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
.


எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...