ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

தமிழ்-ஒரு சொல் பல பொருள்.

            ஒரு சொல் பல பொருள்!!!


    தமிழில் உள்ள சொற்களில் சில சொற்கள் ஒரு பொருளைக் கொண்டோ அல்லது பல பொருட்களைக் கொண்டவையாக அமைந்திருக்கும்.

பல பொருளில் அமையும் சொற்களில் சில:

  1. ஆறு -

     


நதி .



வழி .



                            இளைப்பாறல் .

             

                      எண்ணின் பெயர்.


2. திங்கள் - மாதம்,  நிலவு,  கிழமை.

3. இசை - சம்மதித்தல், சங்கீதம்.

4. மதி -அறிவு, நிலவு, மதித்தல்.

5. ஆரம் - மாலை, சந்தனம்.

6. உடுக்கை - ஆடை, இசைக்கருவி.

7. மாலை -

             

             

                                                      மாலைப்பொழுது.

         


                                   .பூமாலை.


8. நகை - புன்சிரிப்பு, அணிகலன்.

9. மெய் - உண்மை, உடம்பு.

10. அன்னம் - சோறு, பறவை.

11. நாண் - கயிறு, வெட்கப்படுதல்.

12. வேங்கை - புலி, ஒரு வகை மரம்.

13. வேழம் -

            


யானை.



                                     கரும்பு.

        


                                   மூங்கில்.


14 .ஞாயிறு - கிழமை, சூரியன்.

15. அறை - சொல், அடி, திரை, வீட்டின் பகுதி.

16. ஓடு - நத்தையின் ஓடு, ஓடுதல்.

17. ஆழி -கடல், சக்கரம், வட்டம், மோதிரம்.

18. படி - படித்தல், மாடிப்படி.

19. ஆடி -

         


                                    கண்ணாடி.

                   


                                       மாதம்.



                                     அசைந்து.


20. அளி- வண்டு, மது, அன்பு, கொடு.

21. ஆலம் - நஞ்சு, கடல், நீர், மழை, ஆலமரம், அம்புக்கூடு.




சனி, 28 செப்டம்பர், 2024

சிறுகதை-மரியாதை ராமனின் தீர்ப்பு.

     

                படித்தல் திறன்-சிறுகதை.

               மரியாதை ராமனின் தீர்ப்பு.

      


          நான்கு  திருடர்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு ஏராளமானப் பொருட்களைச் சேர்த்தனர்.பின்னர் திருந்தி வாழ எண்ணினர்.

           


          தங்களிடமிருந்த பொருட்களை எல்லாம் ஒரு தவலையில் போட்டு மூடி தாங்கள் தங்கியிருந்த கிழவியிடம் பாதுகாக்கக் கூறி ஒப்படைத்து, "பாட்டி நாங்கள் நால்வரும் சேர்ந்து வந்து கேட்டால் மட்டுமே இதைக் கொடுக்க வேண்டும் " என்று கூறினர்.

              ஒரு நாள் நால்வரும் வெளியில் திண்ணையில் சூதாடிக் கொண்டிருக்கையில் ஒருவர் மோர் விற்றுக் கொண்டு வந்தார்.மோர் வாங்க தவலை வேண்டும் என்பதால் தங்களுள் ஒருவனை தவலையை வாங்கி வர உள்ளே அனுப்பினர்.

           


    உள்ளே சென்றவனுக்கு திருட்டு எண்ணம் குடிகொண்டது.அவன் பாட்டியிடம்,"நாங்கள் கொடுத்து வைத்திருக்கும் தவலையை நண்பர்கள் கேட்கிறார்கள்" என்றான்.பாட்டியும் உள்ளிருந்தபடியே,உங்களில் ஒருவன் தவலையைக் கேட்கிறான், கொடுக்கட்டுமா? என்றுக் கேட்க, கொடுத்து அனுப்புங்கள்" என்று கத்தினார்கள்.

    பாட்டியும் தவலையைக் கொடுத்து விட்டார்.அதை எடுத்துக்கொண்டு அவன் ஓடிவிட்டான்.சிறிது நேரத்திற்குப் பிறகுதான் நண்பனின் செய்கை தெரிந்தது.

       பாட்டியிடம் நஷ்டம் கேட்டனர்.பாட்டியின் மீது வழக்கினையும் பதிவு செய்தனர்.நீதிபதியிடம் பாட்டி அழுதாள். "நான் ஏழை.அவ்வளவு பொருளிற்கு எங்கே போவேன்?" என்றாள்.

         நீதிபதி மரியாதை ராமன் வழக்கின் தன்மையை ஆராய்ந்தார்.பாட்டியின் மீது எவ்வித் தவறும் இல்லை என்பதை உணர்ந்தார்.

      அவர்கள் மூவரையும் அழைத்து, "நீங்கள் என்ன சொல்லிப் பொருளை ஒப்படைத்தீர்கள்?" என்றுக் கேட்க "நாங்கள் நால்வரும் வந்துக் கேட்டால் தான் தவலையைக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தோம்" என்றனர்.

         நீதிபதி மரியாதை ராமன்,  "இப்போது நீங்கள் மூன்று பேர் தானே இருக்கிறீர்கள்? நான்கு பேருமாக சேர்ந்து வந்து கேளுங்கள்.அப்போது பாட்டி தவலையைக் கொடுப்பார் என்று தீர்ப்பு கூறினார்.

        பதில் ஒன்றும் கூற முடியாமல் மூன்று பேரும் விழித்தனர்.



திங்கள், 23 செப்டம்பர், 2024

படித்தல் திறன்-சிறுகதை.

                                          

முல்லாவின் பயணம் .


          


        ஓர் ஊரில் முல்லா என்ற சோம்பேறி இருந்தான். எந்த வேலையும் செய்ய மாட்டான். அவனைத் திருத்துவதற்காக அவனின் தந்தை ஒரு தந்திரம் செய்தார்.

      " மகனே, அந்தக் காட்டில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு ஒரு வேலையும் செய்யாமல்பணக்காரராகும் வழித் தெரியும்" என்றார் தந்தை. உடனே அவரைச் சந்திக்க முல்லா புறப்பட்டான்.
  
          காட்டுக்குச் செல்லும் போது பலா மரம் ஒன்றைப் பார்க்கிறான். அம்மரம்,  " நீ எங்கே செல்கிறாய்?" என்று கேட்டது. முல்லா தான் செல்லும் நோக்கத்தைக் கூறினான்.
            "என் மரத்தில் பூக்கள் பூத்ததுமே, கருகிக் கீழே விழுந்து விடுகின்றன. இதற்கு என்ன தீர்வு எனக் கேட்டு வருவாயா?" என்றது பலாமரம். முல்லாவும் சரி என்றுக் கூறித் தொடர்ந்து நடந்தான்.

               

             பின்னர் தொடர்ந்து செல்லும் வழியில் எதிரில் வந்த ஓநாய் முல்லாவின் நோக்கத்தை அறிந்து கொண்டு " எனக்கு அடிக்கடி வயிறு வலிக்கிறது. அதற்கு என்ன தீர்வு என்று அவரிடம் கேட்டு வருவாயா?" என்றது ஓநாய். முல்லாவும் சரி என்று கூறி தொடர்ந்து நடந்தான்.

       கடைசியில், தந்தையின் நண்பரைச் சந்தித்தான். பணக்காரர் ஆவதற்குச் சில வழிகளை அவர் கூறினார். முல்லா பலாமரம்,ஓநாய் ஆகியவற்றின் பிரச்சினைகளையும் எடுத்துக் கூறினான்.

        "பலா மரத்தின் கீழே உள்ள புதையலை எடுத்து விட்டால் பூக்கள் கருகாது".ஒரு சோம்பேறியைக் கடித்துத் தின்றால் ஓநாயின் வயிற்று வலி சரியாகிவிடும்" என்றார் அவர்.
          திரும்பி வந்த முல்லா, பலா மரத்திடம் புதையல் பற்றிக் கூறினார். பலாமரம், நீயே அந்தப் புதையலை எடுத்துக்கொள்" என்றது. அவன், "என்னை வேலை வாங்கப் பார்க்கிறாயா?" என்று திட்டிவிட்டுச் சென்றான்.

            ஓநாயிடம், "ஒரு சோம்பேறியைத் தின்றால் உன் வயிற்று வலிப் போய்விடும்" என்றான்.உடனே ஓநாய், "நீ சோம்பேறிதானே.....உன்னையே தின்றுவிடுகிறேன்" என்றது.

            " நான் சோம்பேறி இல்லை....." என்று அலறினான் முல்லா. "நான் நம்ப மாட்டேன்" என்றது ஓநாய்.
           முல்லா தான் சோம்பேறி இல்லை என்பதனை நம்ப வைப்பதற்கு, நூறு தென்னை மரங்களில் ஏறித் தேங்காய்களைப் பறித்துப் போட்டான்.சோம்பேறி இல்லை என்பதை நிரூபித்து தப்பித்து வீட்டிற்குச் சென்றான்.அதிலிருந்து தொடர்ந்து உழைத்து வந்தான்.அதைப் பார்த்து தந்தை மகிழ்ச்சிக் கொண்டார்.

வியாழன், 19 செப்டம்பர், 2024

READING SKILL (STORY)-DON'T BE AFRAID!!!

       

                DON'T BE AFRAID (STORY)


           


                All the rabbits living in that forest gathered together for a discussion.

              " we are constantly hunted.Humans, lions, tigers eagles, etc.Try to catch and kill us.we have to live in fear all day.we would rather die." said a rabbit.

            " yes, that's right.let's all jump into the lake and die" said another rabbit. All the rabbits accepted it and went towards the lake. 

               


             On seeing this some frogs on the bank, jumped into the lake, scared of the rabbits.

         Seeing this, a rabbit said, "stop, my friends!  Due to fear of others, we have come to die, but these frogs are afraid of us. This is life. We will fight and win without fear. Come ; let's go back." 

           " Yes " said all the rabbits and went back to the forest.

புதன், 18 செப்டம்பர், 2024

SIMPLE PRESENT TENSE (GRAMMAR)

 

       SIMPLE PRESENT TENSE (GRAMMAR)

     

               It denotes general truths and habitual actions which take place daily / weekly / monthly / yearly.

     இந்த காலத்தில் பொது உண்மைகள், அன்றாடம் (தினம் / வாரம் / மாதம் / வருடம்)  செய்யும் பழக்க வழக்கங்களைக் குறிப்பதாக அமையும்.

Key words :

 Usually - வழக்கமாக

Generally - பொதுவாக

Regularly - ஒழுங்காக

Often , Rarely - அரிதாக

Frequently - அடிக்கடி

Always - எப்பொழுதும்

Now a days - தற்காலத்தில்

Once - ஒரு முறை

Daily,  Everyday. -தினமும்

* Third person singular HE,SHE,IT ற்கு VERB உடன் "S" சேர்க்க வேண்டும்.

   மற்றவைகளுக்கு VERB அப்படியே வரும்.

Example. :

I drink.

We drink.

You drink.

 He drinks.

She drinks.

It drinks.

They drink.


Formula :

 SUBJECT + MAINVERB +Etc.


More picture examples :


          1.   I like milk.

          


     2.   We like the garden.

        


3. The sun rises in the east.

(3rd person singular.so add verb+s)

      



4.Saran sits in the garden. (He)

(3rd person singular.so add verb+s)







5. You see the photos.


6.He paints well.
(3rd person singular.so add verb+s)



7.parrot looks beautiful.
(3rd person singular.so add verb+s)








சனி, 14 செப்டம்பர், 2024

படித்தல் திறன் (சிறுகதை)

            

                                                   சிறுகதை.

                    சேமிப்பின் அவசியம்.

            


         உயிரினங்களில் எறும்புகள் சிறியவை.அவை எப்போதும் சோம்பிக் கிடப்பதில்லை.எப்போதும் சுறுசுறுப்புடன் தமக்கு வேண்டிய உணவை சேமிக்கும் பழக்கம் உள்ளவை.

      கோடைக்காலத்தில் எறும்புகள் சென்று கொண்டிருப்பதைக் கண்ட வெட்டுக்கிளி,  "வெயிலில் அலைவது கஷ்டமாக இல்லையா?" என்றது.

       அதற்கு எறும்புகள், "கஷ்டத்தைப் பார்க்க முடியுமா? மழைக்காலம் வந்துவிட்டால் வெளியில் வர முடியாது.அதனால் இப்போதே உணவைச் சேகரிக்கிறோம்" என்றன.

       வெட்டுக்கிளி வரப்போகும் மழைக்காலத்துக்காக இப்போதே ஆர்ப்பாட்டம் செய்கின்றன என்று தனக்குள் எண்ணியது.மழைக்காலம் வந்துவிட்டது.தொடர் மழை பெய்து கொண்டிருந்தது.

      அதனால் நடுங்கும் குளிர் ஏற்பட்டது.எந்த உயிரினமும் வெளியில் தலை காட்ட முடியவில்லை.எறும்புகள் தம் புற்றுக்குள்ளேயே சேமித்து வைத்த உணவைக் கொண்டு காலங் கழித்து வந்தன.

     வெட்டுக்கிளியின் நிலை தர்ம சங்கடமாகியது.அதனால் வெளியில் பறக்க முடியவில்லை.உணவும் கிடைக்கவில்லை.நீண்ட நாள் பட்டினி கிடந்தது.

       அப்போதுதான் அதற்கு எறும்புகளின் நினைவு வந்தது.அந்த புற்றுக்கு அருகில் சென்று "அன்று ஏளனம் செய்தேன்! அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன்.பசியால் துடிக்கிறேன்" என்றது.

      எறும்புகள் பரிதாபப்பட்டு தங்கள் சேமிப்பிலிருந்து சிறிதளவு உணவைக் கொடுத்தன.வெட்டுக்கிளி மகிழ்ச்சியுடன் உண்டது.சேமிப்பின் அவசியத்தை உணர்ந்தது.

வியாழன், 12 செப்டம்பர், 2024

கலங்கரை விளக்கம்.

                                    @  கலங்கரை விளக்கம்  @

                                               (Light house - வெளிச்ச வீடு)

     


    

          கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள்  அமைக்கப்பட்ட உயர்ந்த கோபுரமே கலங்கரை விளக்கம். இதை வெளிச்சவீடு எனவும் அழைப்பார்கள்.

          முற்காலத்தில் இக்கலங்கரை விளக்கங்களில் தீச்சுவாலை விளக்குகள் ஒளி மூலங்களாகப் பயன்பட்டன.பின்னர் மெழுகு வர்த்திகளும் பயன்படுத்தப்பட்டது.பிற்காலங்களிலேயே கலங்கரை விளக்கங்களில்,  மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

       கலங்கரை விளக்குகள், ஆபத்தான கரைப் பகுதிகளையும், பவளப் பாறைகள் நிறைந்த இடங்களைக் குறித்துக் காட்டுவதற்காகவும், துறைமுகங்களுக்கான பாதுகாப்பான நுழை வழிகளைக் குறிப்பதற்காகவும் பயன்பட்டன. 


கோடியக்கரை கலங்கரை விளக்கம் :

           


          பண்டைய காலத்தில் தமிழர் கப்பல் போக்குவரத்திற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்கங்களைக் கட்டியுள்ளார்கள். சோழர் காலத்து கலங்கரை விளக்கத்தை நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் உள்ளது.

       "இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்" (சிலப்பதிகாரம் 6: 141) எனும் அடிகளால் பழந்தமிழ் நாட்டிலும் கலங்கரை விளக்கங்கள் இருந்ததென்பதை அறியலாம்.

           தற்போது பல கருவிகள் பெருகி வந்துள்ள நிலையில், செயற்படும் கலங்கரை விளக்கங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...