ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

எதிர்கால சந்ததியினரை காக்கும் அரிதாகி வரும் பனைமரம்! Palm tree that is rare to protect future generations!

 

                   #  பனைமரம் #


         பனை மரம் என்பது ஆங்கிலத்தில் "palm tree" என்று அழைக்கப்படும்.


      பொது வழக்கில் மரம் என்று வழங்கப்படினும்  இது மர வகையைச் சார்ந்தது அல்ல.இது புல் இனத்தைச் சார்ந்தது.


பனையின் வளர்ச்சி :


         பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றி நேராக சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

         பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமென கருதப்படுகிறது.

 
தூக்கணாங்குருவி :

        



        இதில் தூக்கணாங்குருவிகளின் இருப்பிடமாக இருப்பதைப் பார்க்கலாம். இதன் ஓலைகளில் தூக்கணாங்குருவிகளின் தொங்கும் கூடுகள் பார்க்கும் பொழுது அவ்வளவு அழகாக இருக்கும்.


சல்லிவேர்களின் 

அதிசயம் :


         ஒரு 5 வருடங்கள் வளர்ந்த பனை மரத்தில்  1000- 1500 சல்லி வேர்கள் இருக்கும் .மழைக்காலங்களில் மழை பெய்யும் பொழுது இந்த 1500 சல்லி வேர்களின் வழியாக மழைநீர் பூமிக்கு அடியில் ஒரு பெரிய பைப்பில் தண்ணீர் போவது போல் சென்று கொண்டே இருக்கும்.

        





        ஒரு இடத்தில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் இருந்தால் இந்த சல்லி வேர்களின் வழியாக செல்லும் மழை  நீர் ஒரு பெரிய குளம் போல் பூமிக்கு அடியில் தேங்கி நிற்கும். நிலத்தடி நீர்மட்டம் உயர வழி வகுக்கும்.


       ஒரு வளர்ந்த பனைமரம், 15,000-20,000 லிட்டர் தண்ணீரை மழை காலத்தில் பூமிக்கு அடியில் சேர்த்து வைக்கும் திறன் கொண்டது.


        எனவே நாம் நடும் பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பனை மரங்கள் வளரும் பொழுது ,ஒரு பெரிய குளம் போல் /ஏரி போல் பூமிக்கு அடியில் தண்ணீரை சேர்த்து வைக்கும்.

     எனவே, உங்கள் ஊரில் உள்ள நீர்நிலைப் பகுதிகளில்,குளம் குட்டைகளில் வயல்களில், வரப்புகளில், ஆற்றங்கரை ஓரங்களில் நிறைய நிறைய பனை விதைகளை நட்டு அடுத்த தலைமுறைக்கு நிலத்தடி நீர் பெருக,மண் வளம், மழை வளம் பெருக உதவுங்கள்.


பனையின் வகைகள் :

      



         பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. 

அவை,


1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை.


காணப்படும் இடங்கள் :


       ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன.தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.


பயன்கள் :

         



1. நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கிழங்கு , பனம்பழம், பனங்கற்கண்டு , பனங்கற்பட்டி நுங்கு ஜுஸ் போன்ற உணவுப் பொருட்கள் கிடைக்கிறது.

         



2. கூரை வேய பனை ஓலைகள், கைவினைப் பொருள்கள், நுங்கு வண்டி, விசிறி,வேலி அமைத்தல்  என பல பயன்கள் உள்ளன. 

3. மேலும் பனை மரங்கள் மரச்சட்டங்கள் செய்ய பயன்படுகின்றன. 

4. பதநீர் செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.பதநீர் உடல் சூட்டை தணிக்கிறது, வயிற்றுப் புண்களை குணப்படுத்துகிறது.

5. பனங்கற்கண்டு தொண்டைப் புண்களை குணப்படுத்துகிறது, உடல் சூட்டை தணிக்கிறது.

Sponsorship :

"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

வியாழன், 24 ஏப்ரல், 2025

My feedback about SBO!

      My feedback about SBO!

The SBO Online Job Company has an opportunity to exclude a certain time from all grade people in the house.
sbo is the genuine online job company .it's give to chance improve our digital knowledge and also we earn that platform.it is one of the best online job company. it is confident in digital marketing.

      

#SBO #SBOTVM #SBOGROUP #BUYMOTE #EDUQUEST #SBOFAKE #SBOSCAM #SBOFRAUD #SBOCHEATING #SBODIGITALMARKETING

Buymote:https://play.google.com/store/apps/details?id=com.Buymote.buymas&pcampaignid=web_shareEduquest :https://eduquest.courses/.

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

கட்டுரை எழுதும் முறைகள் ! Article Writing Methods and two model article writting method

       

கட்டுரை எழுதும் முறைகள் :


  கட்டுரை விளக்கம் :


     கட்டுரை என்பது கட்டு + உரை # கட்டுரை. நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பிற்கு ஏற்றவாறு உரைகள்  அமைகின்ற முறை தான் கட்டுரை.


கட்டுரை பின்வரும் முறையில் அமைக்கப்பட்டிருப்பின் சிறப்பானதாக அமையும்.

         



எழுதும் முறைகள் :


         1. கட்டுரை எழுத தொடங்கும் முன் கட்டுரையின் தலைப்பினை படிப்பவர்களுக்கு நன்றாக புரியும் வகையில் தெளிவான மொழி நடையில் அமைத்தல் வேண்டும்.


         2.கட்டுரையின் ஆரம்பத்தில் முன்னுரை அமைய வேண்டும். இந்த முன்னுரையானது தலைப்பை எடுத்து விளக்கும்படியாக ஐந்து வரிகளுக்கு மிகாமல் கட்டுரை தலைப்பினை பார்ப்பவர் எவருக்கும் எளிதில் புரிய வைக்கும்படி அமைத்தல் வேண்டும்.


          3.அடுத்ததாக பொருளுரை அமைய வேண்டும் . பல சிறிய தலைப்புகளில் கட்டுரை தலைப்போடு தொடர்பு கொண்டதாக அமைதல் வேண்டும் .


            4. கட்டுரையின் பொருளுரையில் சில இடங்களில் அறிஞர்களின் பொன்மொழிகள், திருக்குறள், தமிழ் பாடல்கள் போன்றவை பொருத்தமான இடங்களில் மேற்கோள்களாக காட்டுவது மிகச் சிறந்ததாக அமையும்.


              5. கட்டுரையின் நடுவே குறிப்பிடப்படும் அரிய கருத்துக்கள் மேற்கோள்கள் காட்டி(" ") அதனை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும்.


               6. கட்டுரையின் இறுதியில் முடிவுரை அமைதல் வேண்டும்கட்டுரையின் முடிவுரை 5 முதல் 10 வரிகளுக்கு உட்பட்டு அமைத்தல் சிறப்பு.


               7.கையெழுத்து மிக அழகாகவும், தெளிவாகவும் இருத்தல் வேண்டும்.


                8 .  கட்டுரை எழுதும் முன் கட்டுரை தலைப்பினை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டு தலைப்பிற்கு ஏற்ற மாதிரியான கட்டுரையை எழுத வேண்டும்.


              9 . கட்டுரைகள் எழுதிய பின்பு அதனைப் படித்துப் பார்க்க வேண்டும். எழுத்துப்பிழை , வாக்கியப்பிழை , இலக்கணப் பிழை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் . கட்டுரைகள் இரண்டு அல்லது மூன்று பாகங்கள் பக்கங்களுக்கு மிகாமல் எழுதுதல் வேண்டும்.


             10. நாம் எழுதும் கட்டுரை படிப்பவர்களின் மனதை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும். கட்டுரையை ஆர்வமாக படிக்கும் படியாக எழுத வேண்டும்.

மாதிரிக் கட்டுரை 1 :

       சிறப்பான வாழ்க்கைக்கு சிறுசேமிப்பு !

           


 முன்னுரை :

        ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழ அவசியம் செய்ய வேண்டியது சிறுசேமிப்பு. சேமிப்பு இல்லாதவன் வாழ்க்கை , கால்களால் நடப்பதற்கு பதில் தலையால் நடப்பதற்கு ஒப்பாகும். சேமிப்பின் பெருமையை பற்றி இக்கட்டுரையில் காணலாம் . 

சிக்கனம் தேவை :

       நாம் அன்றாடம் உழைத்து சம்பாதிக்கிறோம். சம்பாதிப்பதில் எதிர்காலத்திற்காக சிறிதளவாவது சேமித்து வைக்க வேண்டும் . இன்றைய காலகட்டத்தில் கல்விச் செலவு , பயணச் செலவு , மருத்துவச் செலவு , திருமண செலவு மற்றும் திடீர் செலவு என பல வகையான செலவுகள் நம்மை நோக்கி வருகின்றன. அவற்றையெல்லாம் சமாளிக்க சேமிப்பு மிகவும் அவசியமாகும் . 

          ' உங்கள் முதல் செலவே சேமிப்பு ' என்று ஒரு வங்கி கூறுகிறது . நமது சம்பளத்தில் 20% சேமிப்பு செய்தோம் என்றால் நம் எதிர்காலத்தில் பயமில்லா வாழ்க்கை வாழ முடியும் . மாதம் மாதம்  ஒருவர் சேமித்துக் கொண்டே வந்து அப்பணத்தை செலவு செய்து விட்டு வெறும் கையாக இருந்தால். நாளைக்கு அவசர தேவைக்கு என்ன செய்வது? யோசிக்கவும் . 

           சிக்கனமாக செலவு செய்தால் கடன் வாங்காமல் வாழலாம் . சிலர்  தேவையில்லாமல் செலவு செய்து விட்டு பின் கடன் வாங்கி பாதிக்கப்படுகின்றன . இந்த நிலை வராமல் இருக்க சிக்கனம் அவசியமாகிறது . 

எவ்வாறு சேமிக்கலாம் ?

       வாங்குகிற சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்குமே பற்றவில்லை , எங்கிருந்து சேமிப்பது ? என்று பலர் புலம்புவதை காணலாம். இது தேவையற்ற புலம்பல். முதலில் நமக்குள் ஒரு வைராக்கியமான எண்ணம் இருக்க வேண்டும் . எதிர்கால நல்வாழ்விற்கு சேமிக்க வேண்டும் என்ற கருத்தை நமக்குள் விதைத்துக் கொள்ள வேண்டும் . 10 ரூபாய் சம்பாதிக்கிறோம் என்றால் ஒரு ரூபாய் சேமிப்பிற்காக எடுத்து வைத்து விட வேண்டும். மீதி ஒரு ரூபாயில் தான் செலவுகள் செய்ய வேண்டும் .                                

         அன்றாடம் செய்யும் செலவுகளை அவசியம் எழுதி வைக்க வேண்டும் . இது முக்கியமானது . நமது தேசப்பிதா பைசா செலவு என்றாலும் எழுதி வைப்பாராம். நமது செலவுகளை எழுதி வைத்து பார்த்தால் நமக்கு எது தேவையான செலவு ? எது தேவையில்லாத செலவு ? என்று தெரிந்துகொண்டு  தேவையில்லாத செலவுகளை நீக்கிவிட முடியும் .

       இன்று மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று ஆடம்பர செலவுகளை அதிகம் செய்துவிட்டு கடன் மேல் கடன் வாங்கி கஷ்டப்படுகின்றன. கடன் தொல்லையால் தற்கொலைக்குக் கூட செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. இந்நிலைக்கு ஆளாகாமல் சேமிக்க பழகுங்கள். 

சேமிக்கும் வழிமுறைகள்:

          இன்று அரசாங்கம் வங்கிகள் , எல்ஐசி போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தபால் அலுவலகங்கள் என அரசு நிறுவனங்களில் சேமிக்க பல வழிகள் இருக்கின்றன. தற்போது  SIP சேமிப்பு முறையும் உள்ளது. இவைகளை அந்தந்த நிறுவனங்களில் கேட்டு அறிந்து கொள்வது நல்லது. குறைந்த வட்டி என்றாலும் நமது பணத்திற்கு பாதுகாப்பு. சில தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் அதிக வட்டி தருகிறோம் என்று கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவார்கள். மக்களும் ஏமாந்து இன்றும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இதை புரிந்து செயல்பட வேண்டும் . இல்லை யெனில் நான் கட்டிய பணம் பைசா கூட நமக்கு கிடைக்காது! 

சிறுசேமிப்பின் பயன்கள்:

         மழைக்காலத்தில் வேண்டிய உணவுகளை எறும்புகள் வெயில் காலத்திலேயே சேமித்து வைக்கிறது.. நமது சீரான வாழ்க்கைக்கு சிறு சேமிப்பு அவசியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால் சிறு சேமிப்பின் பயன்களை உணரலாம் . அவசர தேவைக்கும் பல வகையான செலவுகளுக்கும் சேமிப்பு நமக்கு உதவும். 

       கடன் வாங்குவது சுலபம்.ஆனால் திருப்பி செலுத்துவது மிகவும் கடினம். கல்விச் செலவு, மருத்துவச் செலவு ,திருமண செலவு  மற்றும் வீடு கட்டும் செலவு போன்ற அவசிய செலவுகளுக்கு சேமிப்பு நமக்கு பக்கபலமாய் இருக்கும்.

 முடிவுரை :

         நாளைய நமது நல்வாழ்க்கைக்கு இன்றைய சேமிப்பு மிகவும் உதவும் என்பதை உணர்ந்து ஒருவரும் செயல்பட்டால் நமது வாழ்க்கையில் எந்த துன்பமும் இருக்காது. வாழ்க்கையை என்றும் ஒளிமயமாக அமைத்துக் கொள்ள நாம் தான் காரணமாக அமைய வேண்டும்.

மாதிரி கட்டுரை 2 : (கையெழுத்து)

மழை தன் வரலாறு கூறுதல் :

         


               



Sponsorship :

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"





      


திங்கள், 7 ஏப்ரல், 2025

உறவுமுறை கடிதங்கள் எழுதும் முறைகள் ! Relationship Letters Writing Methods !

 

        @ உறவுமுறை கடிதங்கள் @


உறவுமுறைக் கடிதங்கள் எழுதும் முறைகள் :

 
1 . உறவுமுறை கடிதங்கள் , குடும்ப உறுப்பினர்கள் , உறுப்பினர் அல்லாமல் உறவு முறைகளிலும் ,  நண்பர்களுக்கும்  எழுதும் கடிதம் ஆகும்.

         


 
2 . கடிதத்தின் வலது பக்க ஓரத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருந்து எழுதுகிறீர்கள் அதாவது நீங்கள் இருக்கும் இடத்தின் பெயரை எழுத வேண்டும் காற்புள்ளி இடவேண்டும் (,).
எ.கா :    
                                             
கும்பகோணம்.



3 .  அதன் கீழ் கடிதம் எழுதும் நாள் இடம் பெற வேண்டும் . இறுதியில் நிறுத்துக்குறி இடவேண்டும் .
எ.கா :
                                                        

                                                       கும்பகோணம்

                                                      07.04.2025.


4 . அதன் கீழ் இடது பக்க ஓரத்திலிருந்து  கடிதத்தின்உறவு முறையை  " அன்புள்ள அம்மா "  "அன்பான தங்கை "  என்று எழுத வேண்டும் .
எ.கா :
அன்புள்ள அம்மா,


5 . கடிதத்தில் கருவின் ஆரம்பத்தில் உடல் நலம் விசாரிக்கும் படியாக எழுத வேண்டும் . பின்பு நாம் எழுத இருக்கும் செய்தியை எளிதில் புரியும் படியாக எழுத வேண்டும். முன்பு கடிதம் எழுதியிருந்தால்  அக்கடிதத்திற்கான பதிலினையும்  விளக்கமாக எழுத வேண்டும் .


6. கடிதத்தின் இறுதியில் வலது பக்க ஓரத்தில் அன்புள்ள மாமா , அன்புள்ள தம்பி , அல்லது அன்பபுள்ள மகள் என உறவுமுறை குறிப்பிட்டு எழுதி அதன் கீழ் கையெழுத்திட வேண்டும்.
எ.கா :
                                            அன்புள்ள மகள்
                                            ( கையொப்பம்)

 
7 . கடித உறைமேல் அனுப்ப வேண்டியவரின் முகவரி எழுதப்பட வேண்டும்.
எ.கா :
          ச.சரண்யா ,
          க/பெ ப.முத்துசாமி ,
           கதவு எண் :16, செந்தில் நகர்,
           திருவிடைமருதூர் தாலுக்கா ,
           கும்பகோணம் வட்டம்,
            தஞ்சாவூர் மாவட்டம்-612602.)



மாதிரி கடிதம் 1 :

 

பள்ளி ஆண்டுவிழா பற்றி அம்மாவுக்கு 

கடிதம் : 

                                             கும்பகோணம்.

                                                  07.04.2025.

 அன்புள்ள அம்மா ,

                 நான் நலம் அதுபோல். அங்கு வீட்டில் அம்மா, அப்பா. தங்கை அனைவரும் நலமா ? தற்போது பள்ளி ஆண்டு இறுதி விழா நடைபெற உள்ளதால் எங்கள் பள்ளியில் 09.04.2025 அன்று பள்ளி ஆண்டு விழா நடைபெறுவதாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதில் எனக்கு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான பரிசுகளும் மற்றும் கவிதை ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும் .

             மேலும் அன்று நடைபெற உள்ள கலை நிகழ்ச்சிகளில் நானும் பங்கேற்கிறேன். ஆதலால் நீங்கள் அப்பாவுடன் ஆண்டு விழாவிற்கு வந்து என்னுடைய திறமைகளை நேரில் கண்டு களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

                                            அன்புள்ள மகள்

                                                 க. அபிராமி.

உறைமேல் முகவரி :


            ச.சரண்யா ,

          க/பெ ப.முத்துசாமி ,
           கதவு எண் :16, செந்தில் நகர்,
           திருவிடைமருதூர் தாலுக்கா ,
           கும்பகோணம் வட்டம்,
            தஞ்சாவூர் மாவட்டம்-612602.


மாதிரிக் கடிதம் : 2

      



Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping
#buymoteeapplication"





          
     
         

சனி, 5 ஏப்ரல், 2025

நீர் நிலைகளில் வாழும் நண்டுகள் ! Crabs that live in water bodies !

 

                   # நண்டுகள் ( CRABS ) #


               முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் நண்டு பற்றிய சுவாரசியமான செய்திகளை இதில் காணலாம். ஜப்பானிய கடலில் மிகப்பெரிய நண்டுகள் வாழ்கின்றன.

         நண்டுகள் பிரபலமான கடல் உணவு ஆகும்.நன்னீர், உவர்நீர் இரண்டிலும் வாழும் தன்மையுடையவை.


நண்டுகளின் வகைகள் :

1 . தேங்காய் நண்டு.
2 . குளுவான் நண்டு.
3 . நீலக்கால் நண்டு.
4 . குதிரைலாட நண்டு


உலகின் மிகப்பெரிய நண்டு :


      ஜப்பானிய சிலந்தி நண்டு, 13 அடி (4 மீட்டர்) க்கும் அதிகமான கால் இடைவெளியை அடையும் திறன் கொண்டது.


இருப்பிடம் :

         



           பொதுவாக நண்டுகள் ஆறு , குளம்கடல் இவற்றின் தரைகளிலும் வயல் வரப்புகளிலும் காணக் கிடைக்கின்றன.

        



உடலமைப்பு :


         நண்டுகளுக்கு கனமான மேல் ஓடு இருக்கும் . இது ஓட்டு மீன் இனத்தைச் சார்ந்தது.


        நண்டின் தலையும் , மார்பும் ஒன்றாக இணைந்து மேல் ஓட்டினால் மூடப்பட்டிருக்கும்.


        உடலின் பின் பகுதியாக இருப்பது வயிறு.


கண்கள் :

          



         கூட்டுக் கண்கள் இரண்டினைக் கொண்டவை. நண்டின் கண்கள் , காம்பு போன்ற சிறு உறுப்புகளின் நுனியில் அமைந்துள்ளன . இந்த காம்புகள் உயர்த்தி மடக்கி வைத்துக் கொள்ளக் கூடியவை . மற்ற நேரங்களில் மேலோட்டின் விளிம்பில் உள்ள இரு பள்ளங்களில் காம்புகளை மடித்து வைத்துக் கொள்ளும்

        ஆண்டுக்கு ஒருமுறை மேலோடு கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன.


      பெண் நண்டுகள் ஆண் நண்டுகளை விட பார்க்க அகலமான வயிற்றுப் பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் முட்டைகளைக் கொண்டுள்ளன.


கால்கள் :


       நண்டுக்கு 10 கால்கள் உள்ளன . இவற்றில் முன் பக்கத்தில் உள்ள இரு கால்கள் மிகப் பெரியதாகவும் நுனியில் வலுவான பெரிய இடுக்கி உடையதாகவும் இருக்கும். இவை இரையைப் பிடிக்கின்றன . மற்ற எட்டு கால்களும் நடக்க உதவுகின்றன.

           



       கடலில் நீந்தி வாழும் நண்டுகளுக்கு பின்னங்கால்கள் தொகுப்பு போல தட்டையாக இருக்கும்.

           



        நண்டுகள் எப்போதும் பக்கவாட்டிலேயே நடக்கக் கூடியவை

சுவாசம் :


       நண்டுகள் செவுள்களால் சுவாசிப்பவை . மேல் ஓட்டின் பக்கங்களில் இச்செவுள்கள் உள்ளன .

        சிறு பூச்சி , புழுபாசி ஆகியவை நண்டின் உணவாகும்.


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #application.



எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...