الأحد، 15 يونيو 2025

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

     

@ சொற்றொடர் அமைப்பு முறை @


        சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

எழுவாய் :


எழுவாய் விளக்கம் :


    ஒரு தொடரில் யார்?, எது?, எவை?, யாவர்? என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாயாக அமையப்பெறும். எப்போதும் இவை பெயர் சொல்லாகவே இருக்கும்.


   " எழுவாய் என்பது பெயர்ச்சொல்."


எடுத்துக்காட்டு :


1. கவிதா பாடல் பாடினாள்.(யார்)

              



2. மாணவர்கள் ஓவியம் வரைந்தனர்.(யாவர்)

            



3.புலி மானைத் துரத்தியது.(எது)

           



4.  குருவிகள் தானியங்களைத் தின்றன.(எவை)

            



        இத்தொடர்களில்  கவிதா,மாணவர்கள்,புலி,குருவிகள்  என்பது எழுவாய். அதாவது வாக்கியத்தின் முதலில் வரக்கூடியது . அதுவும் பெயராக அமையப்பெறும்.

 
செயப்படுப்பொருள் :


செயப்படுபொருள் விளக்கம் :


    ஒரு தொடரில் யாரை?, எதனை?, எவற்றை? என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே செயல்படு பொருள்.


( " எதனை" என்பது ஒருமையில், "எதை" என்னும் கேள்விக்கு நிகரான ஒரு மரியாதை வடிவமாகவும், "எவற்றை" என்பது பன்மையில் "எதை" என்பதற்கு நிகரான ஒரு மரியாதை வடிவமாகவும் பயன்படுத்தப்படுகிறது.)

   
எடுத்துக்காட்டு :

1.புலி  ராமனைத் துரத்தியது. (யாரை)

        



2. தருண் காற்றை சுவாசித்தான்.(எதை)

         



3. குருவிகள் தானியங்களைத் தின்றன.            ( எதனை)


     இத்தொடர்களில் ராமனை, காற்றை, தானியங்களை - என்றச் சொற்கள் செயப்படுபொருளாக வருகிறது.

பயனிலை :

பயனிலை விளக்கம் :


     ஒரு தொடரை முழுமை பெறச் செய்யும் சொல்லையே பயனிலை என்கிறோம்.


எடுத்துக்காட்டு :


1. கவிதா பாடல் பாடினாள்.

2.மாணவர்கள் ஓவியம் வரைந்தனர்.

3. புலி மானைத் துரத்தியது.

4. குருவிகள் தானியங்களைத் தின்றன.


     இத்தொடர்களில் பாடினாள், வரைந்தனர், துரத்தியது, தின்றன என்றச் சொற்கள் பயனிலையாக வருகிறது.


     # எழுவாய், பயனிலை,  செயப்படுபொருள் ஆகிய மூன்றும் ஒரு தொடரின் பகுதிகள் ஆகும்.


      # எழுவாயோ, செயப்படுபொருளோ வெளிப்படையாக இல்லாமலும் தொடர் அமையும் .


எடுத்துக்காட்டு :


        1. நடனம் ஆடினாள் -  இத்தொடரில் எழுவாய் இல்லை.


         2.  தென்றல் ஆடினாள் - இத்தொடரில் செயல்படுபொருள் இல்லை.


      # தொடரானது எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமல் அமையலாம். ஆனால் பயனிலை இல்லாமல் அமையாது.


சொற்றொடர்:


1. மாதவி சித்திரம் தீட்டினாள்.
       மாதவி - எழுவாய் .
       சித்திரம் - செயப்படுபொருள்.
       தீட்டினாள் -  பயனிலை.


2. இளங்கோடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
      இளங்கோவடிகள் - எழுவாய்.
      சிலப்பதிகாரம் - செயல்படு பொருள்.
        இயற்றினார் - பயனிலை .


3. அன்பழகன் மிதிவண்டி ஓட்டினான்.
          அன்பழகன் - எழுவாய்
         மிதிவண்டி - செயல்படு பொருள்.    
         ஓட்டினான் - பயனிலை.


4. கிளி பழம் தின்றது .
              கிளி - எழுவாய் .
               பழம் - செயல்படு பொருள்
             தின்றது - பயனிலை.

 

Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping
#buymoteeapplication"

 
  

الأحد، 8 يونيو 2025

கிராமப்புற கலைகளில் ஒன்றான கும்மியாட்டம்! - Kummiyatam is one of the rural arts!

                 @ கும்மியாட்டம் @

    கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நடனக் கலை ஆகும்.

          


       பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தம் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து.

    திருவிழாக்களின் போது பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்த்து இருப்போம். அவற்றில் கும்மியாட்டமும் ஒன்று. எந்த ஊர் இசைக்கருவியும் இல்லாமல், வட்டமாகக் கைதட்டிக் கொண்டு சுற்றி வந்து ஆடும் நடனக் கலை தான் கும்மி.

        திருவிழாக்களின் போது உரிய கடவுள் சிலையை நடுவில் வைத்து கும்மியடிப்பார்கள்.

      ஒரு சில இடங்களில் அறுவடை செய்த தானியங்களை கூடையினுள் வைத்து அதை சுற்றி கும்மியடிப்பார்கள்.      

         முளைப்பாரி, குத்துவிளக்கு போன்ற பொருட்களை மையத்தில் வைத்து கும்மியடிக்கும் பழக்கமும் இருக்கின்றது.

       கும்மியடிக்கும் போது பாடும் பாடல் எளிமையானதாக இருக்கும். கும்மி பாடலை ஒரு பெண் ஒவ்வொரு அடியாக பாட மற்றவர்கள் அந்த பாட்டை பின்பற்றி சேர்ந்து பாடி ஆடுவார்கள்.

         இந்தியாவில் கும்மியாட்டம் தமிழகத்தை தவிர்த்து கேரளாவிலும் ஆடப்படுகிறது.

 ஆடப்படும் நிகழ்வுகள் :

      அறுவடை திருவிழாவான பொங்கல், ஆடிப்பெருக்கு போன்ற பண்டிகை காலங்களில் கும்மி நடனம் நிகழ்த்தப்படுகிறது .

     திருமணம், குழந்தை பிறப்பு, மஞ்சள் நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களின் போதும் கும்மியாட்டம் ஆடப்படுகிறது.

 கும்மிகளின் வகைகள் :

          * குலவை கும்மி .

           * தீபக் கும்மி .

            * முளைப்பாரி கும்மி.

             *  வள்ளி கும்மி .

         உள்ளிட்ட பலவகை கும்மிகள் உள்ளன.

           பெண்களுடன் சிறுமிகளும் கும்மியில் கலந்து கொள்வதுண்டு தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் ஆண்களும் ஒரு வகை கும்மி அடிக்கிறார்கள் இதற்கு உயிர் கும்மி என்று பெயர்.


குலவை கும்மியாட்டம் :

      


     குலவை கும்மியாட்டம் தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று. இது பெண்களால் ஆடப்படும் ஒரு குழு நடனம். குலவை என்பது ஒரு வகை பறவையின் ஒலியைக் குறிக்கிறது, மேலும் கும்மி என்பது ஒரு வகை தாள இசைக்கருவி. இந்த நடன வடிவம் பொதுவாக திருவிழாக்கள் மற்றும் மங்கள நிகழ்வுகளில்ழ்வுகளில் நிகழப்பெறும்.

தீபக் கும்மியாட்டம் :

         


      "தீபக் கும்மி" என்பது ஒரு வகையான கும்மி நடனம். "தீபக் கும்மி" கும்மி நடனத்தின் ஒரு வகை. இது கும்மி நடனத்தில் காணப்படும் ஒரு வகை நடன வடிவம். அது வள்ளிக் கும்மி போன்ற பிற கும்மி நடன வடிவங்களிலிருந்தும் வேறுபட்டது.

முளைப்பாரிக் கும்மியாட்டம் :

     

       முளைப்பாரி செய்த பின்னர், அதை எடுத்து ஊர்வலமாகச் சென்று, கும்மி அடித்து பாடுவது முளைப்பாரி கும்மி ஆகும்.

      நிறைய பேர் சேர்ந்து, மகிழ்ச்சியாக ஆடிப்பாடி, அந்த நிகழ்வை கொண்டாடுவர். 

       


        முளைப்பாரி செய்ததன் மூலம் கிடைக்கும் பயிர்கள், தானியங்கள், உணவு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் உணவை போற்றும் ஒரு நிகழ்வாக இது அமைகிறது. 

         


         இது கிராமப்புறங்களில், மகிழ்ச்சியாகவும், கலைநயத்துடனும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு ஆகும். 

வள்ளிக் கும்மியாட்டம் :

     


        வள்ளி கும்மி என்பது கொங்கு நாட்டு (கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர்) பகுதியில், முருகன் மற்றும் வள்ளியின் வாழ்க்கை, திருமணம், பிறப்பு போன்ற செய்திகளை பாடி, கும்மி அடித்து ஆடும் ஒரு பாரம்பரிய கலையாகும். இது பண்டை காலத்தில், அனைத்து தரப்பு மக்களும் ரசித்துப் பார்த்த ஒரு கலை ஆகும். 

      ஒரே சீருடை அணிந்து வயது, சாதி, பாலின வேறுபாடின்றி ஆடுவதுதான்  இதன் தனிச்சிறப்பு. 


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping
#buymoteeapplication"














எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...