الخميس، 26 يونيو 2025

அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் முறைகள் பத்து ! 10 Health (Hygienic) Systems to adhere to everyday life !

 

            அன்றாட வாழ்வில் சுகாதாரம் !

1 . நிலம் :


        காய்ந்த தரையில் வசிப்பது எப்பொழுதும் நமது உடலுக்கு நன்மையை விளைவிக்கும் . ஈரத் தரையில் வசித்தால் நமது சுவாசப்பையை கெடுத்து காசநோய் , விஷ ஜுரம், வயிற்றில் கட்டி, விஷ பேதி, சீத பேதி முதலிய நோய்களை உண்டாக்கும். மேட்டுப்பங்கான நிலப்பகுதி சாதாரண உடல்நலத்தை அளிக்கக்கூடியது. ஈரநிலைகளில் வாழ்வது நமக்கு ஏற்றதல்ல. ஈரம் இல்லாத இடங்களில் மரங்கள் அதிகமாக அடர்ந்திருந்து காற்றோட்டத்தை தடுத்தால் அது நமக்கு கெடுதலை உண்டாக்கும்.

         


 தற்போது நாம் இருக்கும் நகர வாழ்க்கையில் கட்டிடங்கள் உயர்ந்து இப்படித்தான் உள்ளது.


2. நீர் :


      நமக்குப் போதிய நீர் கிடைக்காததாலும், கிடைக்கும் நீர் அசுத்தமாக இருப்பதாலும் நமக்கு உண்டாகும் வியாதிக்கு அளவே இல்லை. நீரின் குணம் அதை தேக்கி வைக்கும் வகைகளையும் நாம் பரிசோதிக்க வேண்டும் .நீர் அருந்த, உணவு சமைக்க,துணிகளை துவைக்க, பாத்திரங்களை கழுவ, விலங்குகளை குளிப்பாட்ட, வாகனங்களின் வெப்பத்தை குறைக்க என பலவகைகளில் பயன்படுத்தி கழிவு நீராக ஓரிடத்தில் தேங்கிறது.

            


       
      இவை துற்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு நில மாசுபாடு,நீர் மாசுபாடு,காற்று மாசுபாட்டினை ஏற்படுத்துகிறது.


     மாசுபட்ட நீரைக் குடிப்பதால் வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுகின்றன. மற்றும் மாசடைந்த நீரில் குளிப்பதால் தோல் நோய்கள் ஏற்படுகிறது.


  நாம் குடிக்கும் குடிநீரானது,


           1.  யாதொரு கசடும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
           2. நீரில் மணமும், ருசியும் இல்லாமல் இருக்க வேண்டும்.
           3.  பருப்பு எளிதில் வேகக் கூடியதாக இருக்க வேண்டும் .
           4. பிராணவாயு அதில் கலந்து இருக்க வேண்டும்.

        



             குடிநீரை கொதிக்க வைத்து உபயோகப்படுத்துவதால் அதில் உள்ள கெடுதல் விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. எனவே காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.


3. காற்று :


     சாக்கடையில் இருந்து விஷ காற்று உண்டாகாத வண்ணம் சுத்திகரிக்கப்பட வேண்டும் .வாழை மட்டைகள், எச்சிலைகள் மற்றும் வீட்டு கழிவுகளை. ஓரிடத்தில் குவிக்காமல் அவை உடனடியாக உரிய முறையில் அகற்றப்பட வேண்டும். மாட்டு கொட்டகை, குதிரை இலாயங்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
        சுவாசத்திற்கு போதுமான நற்காற்று இல்லாவிடில் ஜீரண சக்தி சிறிது சிறிதாக குறையும். சுவாசம் பாதிக்கப்பட்டால் சுவாசக் குழலில் பிரச்சனை, காசநோய்  உண்டாகலாம். கெட்ட காற்றை சுவாசிப்பதால் முதலில் தேகம் வெளுக்கும். பசி எடுக்காது. தேகம் பலம் குன்றும். மனதில் உற்சாகம் குறையும்.

              



        இயற்கையான மரங்களை நம்மைச் சுற்றிலும் வளர்ப்பதன் மூலம் சுத்த காற்றினை சுவாசிக்கலாம் . வீடு நல்ல காற்றோட்டம் உள்ளதாக இருக்கும். இயற்கையான காற்று உள்ளே வருவதும் செல்வதுமாக இருந்தால்  நோய்களை தவிர்க்கலாம். அதனால் இயற்கை வளம் காக்க வேண்டும்.


4. உணவு :


   
உணவு சுகாதாரம், தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். 

         



      @  சமைக்கும் பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
        @  சமையல் அறையை நல்ல வெளிச்சம் உள்ளதாக மற்றும் காற்றோட்டம் உள்ளதாக  வைத்துக் கொள்ள வேண்டும்.
         @ சாப்பிடும் முன்னரும் பின்னரும் கைகளை கழுவ வேண்டும்.
           @ உணவை மென்று உண்ண வேண்டும். பேசிக் கொண்டே உண்ணக்கூடாது .
      @ சாப்பிடும் போது அளவுக்கு அதிகமான நீரை குடிக்கக்கூடாது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    @ உணவு  சுவையாக இருக்கிறது என்பதால் அதிகமான உணவை உண்டு  அவஸ்தை கொல்லக்கூடாது.


5. குளித்தல் :


           ஒவ்வொருவரும் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து பல் துலக்கி விட்டு குளித்து விட வேண்டும்.  குளிர்ந்த நீரில் குளிப்பதால் சருமத்தில் இருக்கும் ரத்தம் உள்நோக்கி வேகமாக ஓடி ஒருவித சுத்தத்தை உண்டு செய்கிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெந்நீரில் குளிக்கலாம். அவர்கள் குளிர்ந்த நீரில் குளிக்க கூடாது.

           



       
வெந்நீரில் குளிப்பதால் மேல் உள்ள அசுத்தம் வெளியேறினாலும் குளிர்ந்த நீரில் குளிப்பதை போல் அவ்வளவு ஆரோக்கியம் இருக்காது. இதில் அதிக உஷ்ணத்தால் ரத்தம் நமது சருமத்திடம் வந்து சேர்ந்து வியர்வை குழாயில் உள்ள  அதிக அசுத்தத்தை வெளியேற்றுகிறது. வெந்நீரில் குளித்தவுடன் அதிக வியர்வை உண்டாகிறது அல்லவா?    அந்த சந்தர்ப்பங்களில் குளிர் காற்று நம் உடலில் பட்டால்  பலவிதமான நோய்களை உண்டாக்குகிறது. இவ்வாறு வெந்நீரில் குளித்தால் குளிர்காற்றுப்  படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் வெதுவெதுப்பான நீர் நல்ல ஆரோக்கியத்தை தரும்.


    @  சாப்பிட்ட உடன் குளிக்கக் கூடாது.  
    @ அதிகம் களைப்படைந்து இருந்தாலும் , நோய் வாய்ப்பட்டு இருந்தாலும் குளிக்க கூடாது.
    @ கடல் குளியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


         6. மோருக்கு மிகுந்த நற்குணங்கள் உண்டு.

          


 இரத்தக்குழாய்களில் மண் சம்பந்தப்பட்ட அசுத்த பண்டங்களையும் மோரிலுள்ள புளிப்பானது எளிதில் கரைத்து விடுகிறது எனவே மோர் அருந்துவது உடலுக்கு நல்லது.


          7. சூரிய ஒளியும் மனிதனது தேக நிலையும் :

         



       சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து சூரிய உதயம் நம் உடலில் படும்படி நாம் அதிக நேரம் வெயிலில் நமது பணிகளை செய்ய வேண்டும். அப்போதுதான் சூரிய சக்தி நமது உடலுக்குள் கிடைத்து எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

     8. ஆடைகள் தூய்மையானதாக இருக்க வேண்டும். " கந்தையானாலும் கசக்கிக் கட்டு" என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். உடுத்திய ஆடைகளையே மீண்டும் மீண்டும் உடுத்தாமல் நல்ல தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும் . குளிர்கால, கோடை காலத்திற்கு என காலத்திற்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டும்.


     9. தூக்கம் என்பது நம் உடலுக்கு மிகப்பெரிய ஓய்வு . ஓய்வினை கெடுக்கும் பொழுது நமது உடலுக்கு பல்வேறு நோய்கள் உண்டாகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் நன்றாக தூங்கினால் நம் உடலுக்கு நல்லது. நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் தூங்க வேண்டும்.


     
10. அன்றாடம் எளிய உடற்பயிற்சிகளை செய்வதும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது .


      இவற்றை கடைபிடித்தால் நம் சுகாதார வாழ்வினை வாழலாம்.


Sponsorship :

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


    

الأحد، 22 يونيو 2025

அன்றாட கழிவு பொருட்களை நம் வாழ்க்கையில் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுதல்! To make everyday waste products useful in our lives!

 

       @ கழிவுப் பொருள்களை அகற்றுதல் @

          இன்றைய நவீன காலகட்டத்தில் தூக்கி எறியப்படும் கழிவு பொருட்கள் அதிகமாக உள்ளது . " எங்கும் குப்பை எதிலும் குப்பை"  என்ற நிலை வந்து விட்டது. இவற்றை உரிய முறையில் அகற்றப்படாவிட்டால் அதனால் ஏற்படும் பலவித துன்பங்களுக்கு நாம் தான்  ஆளாக நேரிடும்.


        நகரங்களில் கழிக்கப்படும் சிறுநீர்  பரவலாக நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

       பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் உள்ளே நுழையும் பொழுதே அங்கு சிறுநீர் கட்டிட அருகில் அல்லது சாலை ஓரங்களிலிருந்து துர்நாற்றம் தாங்க முடியவில்லை. இந்நிலை மாறப்பட வேண்டும்.அவ்விடங்களில் அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.


       கிராமங்களில் பெரும்பாலும் நகரங்களைப் போல பொருட்கள் அதிகளவில்  பயன்படுத்தப்படுவதில்லை . அவை எளிதில் மக்கக் கூடியதாக அமைந்து எருவாக மாற்றப்பட்டு பயன்டுத்தப்படுகிறது.


      நகரங்களில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் மற்றும் இடப் பற்றாக்குறையும் இருப்பதால் எளிதில் கழிவுகளை பொட்டலமாகக் கட்டி வெளியில் தூக்கி எறிந்து விடுகின்றன. அரசாங்க முன்னெடுத்துள்ள சுகாதாரப் பணியாளர்கள் வீட்டு வாசலுக்கே வருகின்றனர். இவர்களிடம் மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து அனுப்புவதிலும் குறை ஏற்படுகிறது. இதனாலேயே கழிவுகள் சேர்ந்து நம்  சுகாதாரம் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்படுகிறது.


      அரசாங்கம் கழிவுகளை வெளியில் தூக்கிப் போடும் மக்களுக்கு கடுமையாக வரி விதிப்புச் சட்டங்களை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும்.


மாடித்தோட்டம் :

         



     மட்கும் காய்கறி மற்றும் இதர  கழிவுகளை வீட்டிற்குள்ளேயே துற்நாற்றமின்றி எளிய முறையில்  உரமாகத் தயாரித்து , மாடி தோட்டங்கள் அமைத்து அதன் மூலம்  பலன்களைப் பெறலாம்.


மாடிக்கூரை :

           



        மாடிக்கு பந்தல் அமைத்து கொடி வகைகளை போடுவதன் மூலம்  வெயிலை கக்கும் சீட் வகைகளுக்கு  பதிலாக இயற்கையான முறையில் கூரை அமைத்துக் கொள்ளலாம்.செலவும் குறைவு.நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
     
       பெரும்பாலும் நகரங்களில் சாக்கடை கழிவுநீர் ஆறாக ஊற்றெடுக்கும் நிலை ஏற்படுகிறது . இதிலிருந்து பலவித தீமை செய்யும் உயிரினங்கள் ஏற்பட்டு  நோய்களை உண்டு பண்ணுகிறது . கழிவு நீரை குழாய்கள் மூலமாக நகரத்திற்கு அப்பால் சுத்திகரித்து வெளியேற்றப்பட வேண்டும்.

             



       வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவு நீரை தோட்டத்திற்கு பாய்ச்சி அதன் மூலம் இயற்கை முறை காய்கறிகளைப் பெற்று பயனடையலாம்.தோட்டத்தில் நமது கவனம் செல்லும் போது மன அழுத்தம் குறையும்.

         


       


       அல்லது முறைப்படி குழிகள் அமைத்து நிலத்திற்குள் கழிவுநீரை அனுப்பலாம்.


பயோ செப்டிக் டேங்க் :


       தற்போது மனித கழிவுகளை கூட உரமாக மாற்றும் முறை  வந்துவிட்டது.கழிவுகளை திட உரமாக மாற்றி வேளாண்மைக்கு பயன்படுத்தலாம்.ஆனால் இம்முறையைப் பயன்படுத்த யாரும் முற்படுவதில்லை.

      



     அதற்கு மாற்றாக
பயோடெக்செட் வந்துள்ளது. இயற்கைக்கு ஊறு விளைவிக்காத வகையில் கழிவுகள் முற்றிலுமாக உள்ளேயே நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் செரிக்கப்பட்டு நல்ல நீராக வெளியேற்றப்படுகிறது. ஒரே ஒரு முறை மட்டும் செலவு.இதன் பயன்பாடுகளை உணர்ந்து நாம் அதனை பயன்படுத்த முற்பட வேண்டும்.தற்போது பிரபலமாகி வருகிறது.


எரிபொருளாக மாற்றம் :

            


( இம்முறை நம் தமிழகத்திற்கும் வந்துவிட்டது.)


         வீட்டுக் காய்கறிக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள்உணவு கழிவுகள் என எந்த கழிவானாலும் (பிளாஸ்டிக் அல்ல) அதனை பயன்படுத்தி நாம் எரிபொருளாக பயன்படுத்தும் முறையும் வந்துவிட்டது. கழிவுகளை பெரிய பீப்பாயில் நாம் கொட்டினால் அதிலிருந்து வெளியேறும் வாயுக்களை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.இதனையும் உணர்ந்து நாம் எல்லாவற்றையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தோமேயானால் கழிவுகளால் நமக்கு எந்த நோய்களும் அண்டாது.

       இது போன்று இயற்கையோடு இயைந்து கழிவுகளை அன்றாடம் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டால் நம் வாழ்க்கை மிக மகிழ்ச்சியானதாக மாற்றப்படும்.நாமும் ,நம் சுற்றத்தாரும் சுகாதாரமான,மகிழ்ச்சியான  வாழ்க்கையை வாழ முடியும்.


Sponsorship :

     "This Content Sponsored by Buymote Shopping app


BuyMote E-Shopping Application is One of the Online Shopping App


Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)


Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8


Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

الأحد، 15 يونيو 2025

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

     

@ சொற்றொடர் அமைப்பு முறை @


        சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

எழுவாய் :


எழுவாய் விளக்கம் :


    ஒரு தொடரில் யார்?, எது?, எவை?, யாவர்? என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாயாக அமையப்பெறும். எப்போதும் இவை பெயர் சொல்லாகவே இருக்கும்.


   " எழுவாய் என்பது பெயர்ச்சொல்."


எடுத்துக்காட்டு :


1. கவிதா பாடல் பாடினாள்.(யார்)

              



2. மாணவர்கள் ஓவியம் வரைந்தனர்.(யாவர்)

            



3.புலி மானைத் துரத்தியது.(எது)

           



4.  குருவிகள் தானியங்களைத் தின்றன.(எவை)

            



        இத்தொடர்களில்  கவிதா,மாணவர்கள்,புலி,குருவிகள்  என்பது எழுவாய். அதாவது வாக்கியத்தின் முதலில் வரக்கூடியது . அதுவும் பெயராக அமையப்பெறும்.

 
செயப்படுப்பொருள் :


செயப்படுபொருள் விளக்கம் :


    ஒரு தொடரில் யாரை?, எதனை?, எவற்றை? என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே செயல்படு பொருள்.


( " எதனை" என்பது ஒருமையில், "எதை" என்னும் கேள்விக்கு நிகரான ஒரு மரியாதை வடிவமாகவும், "எவற்றை" என்பது பன்மையில் "எதை" என்பதற்கு நிகரான ஒரு மரியாதை வடிவமாகவும் பயன்படுத்தப்படுகிறது.)

   
எடுத்துக்காட்டு :

1.புலி  ராமனைத் துரத்தியது. (யாரை)

        



2. தருண் காற்றை சுவாசித்தான்.(எதை)

         



3. குருவிகள் தானியங்களைத் தின்றன.            ( எதனை)


     இத்தொடர்களில் ராமனை, காற்றை, தானியங்களை - என்றச் சொற்கள் செயப்படுபொருளாக வருகிறது.

பயனிலை :

பயனிலை விளக்கம் :


     ஒரு தொடரை முழுமை பெறச் செய்யும் சொல்லையே பயனிலை என்கிறோம்.


எடுத்துக்காட்டு :


1. கவிதா பாடல் பாடினாள்.

2.மாணவர்கள் ஓவியம் வரைந்தனர்.

3. புலி மானைத் துரத்தியது.

4. குருவிகள் தானியங்களைத் தின்றன.


     இத்தொடர்களில் பாடினாள், வரைந்தனர், துரத்தியது, தின்றன என்றச் சொற்கள் பயனிலையாக வருகிறது.


     # எழுவாய், பயனிலை,  செயப்படுபொருள் ஆகிய மூன்றும் ஒரு தொடரின் பகுதிகள் ஆகும்.


      # எழுவாயோ, செயப்படுபொருளோ வெளிப்படையாக இல்லாமலும் தொடர் அமையும் .


எடுத்துக்காட்டு :


        1. நடனம் ஆடினாள் -  இத்தொடரில் எழுவாய் இல்லை.


         2.  தென்றல் ஆடினாள் - இத்தொடரில் செயல்படுபொருள் இல்லை.


      # தொடரானது எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமல் அமையலாம். ஆனால் பயனிலை இல்லாமல் அமையாது.


சொற்றொடர்:


1. மாதவி சித்திரம் தீட்டினாள்.
       மாதவி - எழுவாய் .
       சித்திரம் - செயப்படுபொருள்.
       தீட்டினாள் -  பயனிலை.


2. இளங்கோடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
      இளங்கோவடிகள் - எழுவாய்.
      சிலப்பதிகாரம் - செயல்படு பொருள்.
        இயற்றினார் - பயனிலை .


3. அன்பழகன் மிதிவண்டி ஓட்டினான்.
          அன்பழகன் - எழுவாய்
         மிதிவண்டி - செயல்படு பொருள்.    
         ஓட்டினான் - பயனிலை.


4. கிளி பழம் தின்றது .
              கிளி - எழுவாய் .
               பழம் - செயல்படு பொருள்
             தின்றது - பயனிலை.

 

Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping
#buymoteeapplication"

 
  

الأحد، 8 يونيو 2025

கிராமப்புற கலைகளில் ஒன்றான கும்மியாட்டம்! - Kummiyatam is one of the rural arts!Its our village culture!

                 @ கும்மியாட்டம் @

    கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நடனக் கலை ஆகும்.

          


       பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தம் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து.

    திருவிழாக்களின் போது பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்த்து இருப்போம். அவற்றில் கும்மியாட்டமும் ஒன்று. எந்த ஊர் இசைக்கருவியும் இல்லாமல், வட்டமாகக் கைதட்டிக் கொண்டு சுற்றி வந்து ஆடும் நடனக் கலை தான் கும்மி.

        திருவிழாக்களின் போது உரிய கடவுள் சிலையை நடுவில் வைத்து கும்மியடிப்பார்கள்.

      ஒரு சில இடங்களில் அறுவடை செய்த தானியங்களை கூடையினுள் வைத்து அதை சுற்றி கும்மியடிப்பார்கள்.      

         முளைப்பாரி, குத்துவிளக்கு போன்ற பொருட்களை மையத்தில் வைத்து கும்மியடிக்கும் பழக்கமும் இருக்கின்றது.

       கும்மியடிக்கும் போது பாடும் பாடல் எளிமையானதாக இருக்கும். கும்மி பாடலை ஒரு பெண் ஒவ்வொரு அடியாக பாட மற்றவர்கள் அந்த பாட்டை பின்பற்றி சேர்ந்து பாடி ஆடுவார்கள்.

         இந்தியாவில் கும்மியாட்டம் தமிழகத்தை தவிர்த்து கேரளாவிலும் ஆடப்படுகிறது.

 ஆடப்படும் நிகழ்வுகள் :

      அறுவடை திருவிழாவான பொங்கல், ஆடிப்பெருக்கு போன்ற பண்டிகை காலங்களில் கும்மி நடனம் நிகழ்த்தப்படுகிறது .

     திருமணம், குழந்தை பிறப்பு, மஞ்சள் நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களின் போதும் கும்மியாட்டம் ஆடப்படுகிறது.

 கும்மிகளின் வகைகள் :

          * குலவை கும்மி .

           * தீபக் கும்மி .

            * முளைப்பாரி கும்மி.

             *  வள்ளி கும்மி .

         உள்ளிட்ட பலவகை கும்மிகள் உள்ளன.

           பெண்களுடன் சிறுமிகளும் கும்மியில் கலந்து கொள்வதுண்டு தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் ஆண்களும் ஒரு வகை கும்மி அடிக்கிறார்கள் இதற்கு உயிர் கும்மி என்று பெயர்.


குலவை கும்மியாட்டம் :

      


     குலவை கும்மியாட்டம் தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று. இது பெண்களால் ஆடப்படும் ஒரு குழு நடனம். குலவை என்பது ஒரு வகை பறவையின் ஒலியைக் குறிக்கிறது, மேலும் கும்மி என்பது ஒரு வகை தாள இசைக்கருவி. இந்த நடன வடிவம் பொதுவாக திருவிழாக்கள் மற்றும் மங்கள நிகழ்வுகளில்ழ்வுகளில் நிகழப்பெறும்.

தீபக் கும்மியாட்டம் :

         


      "தீபக் கும்மி" என்பது ஒரு வகையான கும்மி நடனம். "தீபக் கும்மி" கும்மி நடனத்தின் ஒரு வகை. இது கும்மி நடனத்தில் காணப்படும் ஒரு வகை நடன வடிவம். அது வள்ளிக் கும்மி போன்ற பிற கும்மி நடன வடிவங்களிலிருந்தும் வேறுபட்டது.

முளைப்பாரிக் கும்மியாட்டம் :

     

       முளைப்பாரி செய்த பின்னர், அதை எடுத்து ஊர்வலமாகச் சென்று, கும்மி அடித்து பாடுவது முளைப்பாரி கும்மி ஆகும்.

      நிறைய பேர் சேர்ந்து, மகிழ்ச்சியாக ஆடிப்பாடி, அந்த நிகழ்வை கொண்டாடுவர். 

       


        முளைப்பாரி செய்ததன் மூலம் கிடைக்கும் பயிர்கள், தானியங்கள், உணவு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் உணவை போற்றும் ஒரு நிகழ்வாக இது அமைகிறது. 

         


         இது கிராமப்புறங்களில், மகிழ்ச்சியாகவும், கலைநயத்துடனும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு ஆகும். 

வள்ளிக் கும்மியாட்டம் :

     


        வள்ளி கும்மி என்பது கொங்கு நாட்டு (கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர்) பகுதியில், முருகன் மற்றும் வள்ளியின் வாழ்க்கை, திருமணம், பிறப்பு போன்ற செய்திகளை பாடி, கும்மி அடித்து ஆடும் ஒரு பாரம்பரிய கலையாகும். இது பண்டை காலத்தில், அனைத்து தரப்பு மக்களும் ரசித்துப் பார்த்த ஒரு கலை ஆகும். 

      ஒரே சீருடை அணிந்து வயது, சாதி, பாலின வேறுபாடின்றி ஆடுவதுதான்  இதன் தனிச்சிறப்பு. 


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping
#buymoteeapplication"














😋 சுவையான பீர்க்கங்காய் கூட்டு: எளிய முறையில் சமைக்கும் ரகசியம்! Yummy Birkankai Compound: The Secret to Easy Cooking!

                    😋பீர்க்கங்காய் கூட்டு 😋        சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை எனப் பலவற்றுடனும் அருமையாகச் சேரும் பீர்க்கங்காய் கூட்டு...