‏إظهار الرسائل ذات التسميات மூளைக்கு வேலை!!!. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات மூளைக்கு வேலை!!!. إظهار كافة الرسائل

الثلاثاء، 1 أكتوبر 2024

மூளைக்கு வேலை!!

   

               கண்டுபிடி!!! கண்டுபிடி!!!

                   மூளைக்கு வேளை!!!


1. ஒரு பெரிய கனரக வாகனம் ஒன்று பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டது.உயரம் இடித்தது. எவ்வளவு முயன்றும் வாகனத்தை வெளியே எடுக்க முடியவில்லை. அப்போது ஒரு வயதான முதியவர் ஒருவர் உதவிக்கு வந்தார். அவர் சொன்ன யோசனைப்படி செய்தவுடன் வண்டி பாலத்தின் அடியில் இருந்து வெளியே வந்துவிட்டது, அப்படி அவர் என்ன யோசனை சொல்லிருப்பார்?

            

2..பாலாஜி விமலின் மகன், அருண் கமலாவின் மகன். பாலாஜி கீதாவை கல்யாணம் கொள்கிறான். கீதா கமலாவின் மகள் அப்படியென்றால் அருண் பாலாஜிக்கு என்ன உறவு ?

      




3. எட்டு, எட்டுகளை கொண்டு 1000 கூட்டுத்தொகை பெறுவது எப்படி?


         


4.ஒரு யானை தண்ணீர் குடிக்க ஆற்றுக்குச் சென்றது. அந்த ஆற்றுக்குள் 5 வரிக்குதிரைகளும்,, 5 ஒட்டகச்
சிவிங்கிகளும் இருந்தன. அப்படியானால் மொத்தம் எத்தனை மிருகங்கள் ஆற்றுக்கு சென்றன?

      

       





விடைகள் :


1. அவர் வாகனத்தின் டயர்களில் இருக்கும் காற்றை பிடுங்க சொன்னார். காற்றை பிடிங்கியவுடன் வண்டியின் உயரம் குறைந்தது. வாகனமும் எளிதாக வெளியே வந்தது.


2. மைத்துனர்.


3.   888 + 88 + 8 + 8 + 8 = 1000.


4. யானை மட்டும் தான் ஆற்றுக்கு சென்றது. மற்ற மிருங்கங்கள் அங்கே தான் இருந்தன.

                  
        



எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...