பஞ்சகவ்யம்.
பஞ்சகவ்யம் பெயர்காரணம் :
பஞ்சகவ்யா - பஞ்ச + கவ்யா.
பஞ்ச என்பது ஐந்து ஆகும். பசுவிலிருந்து கிடைக்கும் சாணம்,கோமியம்,பால்,தயிர் மற்றும் நெய் ஆகிய ஐந்து வகையான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவதால் இப்பெயர் பெற்றது.
பஞ்சகவ்யம் :
@ பஞ்சகவ்யம் ஆன்மிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
@ பஞ்சகவ்யம் அல்லது பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு நீர்மக்கலவை.
பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.
இந்துக்களின் வழிபாடு :
பஞ்சகவ்யம் அபிசேகப் பொருள்களில் ஒன்றாக தெய்வச் சிலைகளுக்கு அபிசேகம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. அதன் பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.. இதனை பக்தர்கள் உட்கொள்கிறார்கள்.
சுவாமி சிலைக்கு பஞ்சகவியத்தால் அபிசேகம் செய்யப்படும் போது வெளிப்படும் கதிர்கள் உடல் மற்றும் மனநோயைப் போக்கும் என இந்துக்கள் நம்புகின்றனர்.
இயற்கை வேளாண்மை :
இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் பொருளாகவும்(உரம்) பயன்படுத்தப்படுகிறது.
பயன்படுத்தும் முறை :
ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் கைத்தெளிப்பான் கொண்டு பயிர்களுக்கு தெளிக்கலாம்.
மருத்துவ முக்கியத்துவம்:
* தூய்மைப்படுத்தல்: பஞ்சகவ்யம் நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே, பஞ்சகவ்ய விளக்கு ஏற்றுவது சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும்.
* தோல் நோய்கள்: பஞ்சகவ்ய விளக்கின் புகை தோல் நோய்களை குணப்படுத்தும் என நம்பப்படுகிறது.
* மன அமைதி: பஞ்சகவ்ய விளக்கின் புகை மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியைத் தரும் என நம்பப்படுகிறது.
பஞ்சகவ்யத்தின் நன்மைகள் :
1 . பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
2 . பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.
3 . பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும் உள்ளது.
4.சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் இயற்கை வழியில் மிகவும் பயனுள்ளது.
5 . பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.
6 . ஆயுர் வேத வைத்தியத்தில் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
7.மண்ணுக்கு ஊட்டமளிக்கிறது.
பஞ்ச கவ்ய விளக்கு :
கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி போன்ற சிறப்பான நாட்களிலோ, வெள்ளிக் கிழமையிலோ பஞ்ச கவ்ய விளக்கு ஏற்றினால் சிறப்பான பலனைப் பெறலாம்.இவ்விளக்கு ஏற்றுவதால்...
1 . தீய சக்திகள் நம்மை விட்டு அகலும்.
2. வீட்டின் எதிர்மறை ஆற்றல் அகலும்.
3.ஹோமம் செய்த பலன் உண்டு.
4. பணப்புழக்கம் அதிகரிக்கும்.
5.லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
6. கடன் பிரச்சினைக்கு தீர்வு விரைவில் உண்டாகும்.
என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவுகிறது.
SPONSORSHIP :
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"