السبت، 31 أغسطس 2024

படித்தல் திறன் (சிறுகதை)

                                                        ஊர் மரியாதை.


      


        நெடுங்காலத்திற்கு முன்பு கழுதையை வண்டியில் பூட்டி ஓட்டிவந்தனர். 


         அந்த ஊரின் தலைவரிடமும் ஒரு கழுதை வண்டி இருந்தது.அதில் அவர் செல்லும்போது, ஊரில் இருக்கும் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் அவருக்கு குனிந்து வணங்கினர்.அந்த கழுதையோ, ஊர் மக்கள் தன்னைத்தான் வணங்கி, மரியாதை செய்கின்றனர் என்று எண்ணிக்கொண்டது.


              ஊர்த் தலைவரின் வீட்டில் நாய், மாடுகள், குருவிகள் வளர்க்கப்பட்டன.ஒரு நாள் அவற்றிடம் கழுதை, "என்னை இந்த ஊர் மக்கள் அனைவருமே வணங்குகின்றனர்.இந்த ஊர் மரியாதை உங்களில் எவருக்கேனும் கிடைத்திருக்கிறதா?" என்று கேட்டது.


         மாடுகள் " இல்லை " என்றன.

      குருவிகள்  " இல்லை " என்றன.

      நாய்  எதுவும் பேசாமல் படுத்திருந்தது.


          " நீ என்ன சொல்ல விரும்புகிறாய்? " என்று கேட்டது கழுதை.நாய் சிரித்துக்கொண்டே, "அந்த மரியாதை உனக்கு அல்ல.நீ சுமந்து செல்லும் தலைவருக்கானது" என்றது.


           கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது. "நாளையே நான் தனியாக ஊரைச் சசுற்றி வந்து, மக்களின் மரியாதை பற்றி நிரூபித்துக் காட்டுகிறேன்" என்று கூறியது.மறுநாள் கழுதை தலைவர் இல்லாமல்  ஊருக்குள் வலம் வந்தது.ஆனால் பரிதாபம், யாரும் கழுதையைக் கண்டுகொள்ளவே இல்லை.


            இதுநாள் வரை கிடைத்து வந்த மரியாதை நமக்கானது அல்ல என்கிற உண்மை கழுதைகக்கு அப்போதுதான் தெரிந்தது.


           

الجمعة، 30 أغسطس 2024

விடுகதை !!! (கண்டுபிடி)

                                                     விடுகதை  !!!  


1.ஆழங்குழித் தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அன்னார்ந்துப் பார்த்தால் தொண்ணூறு முட்டை.அது என்ன?

             


2.பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்.அது என்ன?

              


3.ஒரு குப்பிக்குள் இரண்டு தைலம்.அது என்ன?

             


4.காலாலே நீர் குடித்து தலையாலே நீர் தரும்.அது என்ன?

           


5.கொக்கு கருகுவதற்கு குளம் வற்றுகிறது.அது என்ன?

              


6.கோண கோண புளியங்காய் உங்க நாட்டிலிருந்து எங்க நாட்டுக்கு வருது.அது என்ன?

          




7.உறிச்ச கோழி ஊருக்கு போகுது.அது என்ன?

           


8.எலும்பு இல்லாத மனிதன் கிளையிலே ஏறுகிறான்.அது என்ன?

           


9.அம்மா புடவையை மடிக்க முடியாது.அப்பா காசை எண்ண முடியாது.அது என்ன?

           


10.பறவையின் காது நீண்டு கால் போகும்.கிடைப்பது கேக்கு. 3 எழுத்து சொல்.அது என்ன?

         





விடைகள் :


 1. தென்னைமரம்.

2 .வெண்டைக்காய் .

3 .முட்டை .

4. இளநீர் .

5. விளக்குத்திரி .

6. சாலை .

7. தேங்காய் .

8. பேன் .

9 .வானம்,நட்சத்திரம்.

10. கொக்கு.

الخميس، 29 أغسطس 2024

படித்தல் திறன் (சிறுகதை)

                                      சிறுவனின் நற்குணம்.

                   


   சரவணன்  ஐந்தாம் வகுப்புப் படிக்கிறான். சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பதால் தனது அப்பாவின் சைக்கிளை ஓட்டப் பழகி வந்தான். சாலை வளைவில் திரும்பும் போது எதிரில் வந்த பலூன் வியாபாரியை அவன் கவனிக்கவில்லை.அவர் மீது மோதிவிட்டான்.

               

            

             அவர்  கீழே விழுந்து, அவர் கையில் வைத்திருந்த பலூன்கள் அருகில் இருந்த முள்வேலியில் பட்டு வெடித்து விட்டன.அந்த வியாபாரி  சிறுவன் சரவணனை சிறிதும் திட்டவில்லை.மாறாக சைக்கிளை கவனமாகப் பார்த்து ஓட்டச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

            ஆனால் சரவணனுக்கு மனம் தளவில்லை. வெடித்த பலூன்களின் மதிப்பு எப்படியும் 500 ரூபாய் இருக்கும்.அதைக் கொடுத்து விடுவதுதான் சரி என நினைத்தான்.

          

     

            அதற்காக உண்டியலை உடைத்து    விடுவதுதான் சரி  என நினைத்தான். உண்டியலை உடைத்தான்.பணம் போதுமானதாகஇல்லை.   நடந்ததை  அம்மா,அப்பாவிடம் சொல்லவும் துணிச்சல் இல்லை.அதனால் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த வியாபாரியின் வீட்டுக்குச் சென்றான்.அவர் இவனை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.வரவேற்று உபசரித்தார்.

        சரவணன் தயங்கிக்கொண்டே, "எங்கிட்ட இவ்வளவு காசுதான் இருக்கு.உடைஞ்ச பலூன்களுக்குப் பதிலாக வச்சிக்கோங்க" என்றான்.

       "எனக்கு நஷ்டம் ஆகக் கூடாதுன்னு பணம் கொடுக்கத் தோன்றியதே அதுவே போதும்.பணம் எல்லாம் வேணாம்"என்று மறுத்தார்.

     "இல்லை.....என்னால் தான் பலூன்கள் உடைஞ்சது". என்றான் சரவணன்.

     "பரவாயில்லை.ஐந்தாறு பலூன்கள்தான் வெடிச்சது.பலூன்கள் மொத்த விலைக்கு வாங்கினதால 100 ரூபாய்தான் இழப்பு.அதையும் நீ எனக்குத்தர வேணாம்."என்றார்.

      " இல்ல.....100ரூபாயாவது வாங்கிக்கோங்க" என்றான் சரவணன்.

     "சரி.....வாங்கிக்கிறேன் என்று வாங்கிய பலூன் வியாபாரி, அந்த தொகைக்கும் மேலாக பலூன்களை சரவணனுக்குக் கொடுத்தார்.

      "இது என் அன்புப் பரிசு.மறுக்கக் கூடாது" என்றார்.சரவணனும் ஏற்றுக்கொண்டான்.


الثلاثاء، 27 أغسطس 2024

சுரைக்காய்

                                                            @*சுரைக்காய்*@


           


        சுரைக்காய் வெப்பமண்டலப் பகுதிகளில்வளரக்கூடியது.  பார்ப்பதற்கு குடுவையைப் போல இருக்கும்.தொடக்கக் காலத்தில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடுவையாக (நீர்க்கலன்) இதனை மக்கள் பயன்படுத்தினர். பின்னாளிலேயே உணவுக்காக பயன்படுத்தத் தொடங்கினர்.உலகில் மனிதரால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று. 

                            சுரைக்குடுவை



           இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள்    உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இதன்  பூர்வீகம் தென்னாப்பிரிக்கா.


              2 அடி நீளம் மற்றும் 3 அங்குலம் விட்ட அளவில் வளரக்கூடியது.இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்பு, இரும்புச்சத்து, புரோட்டீன், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது.


                                                          நன்மைகள் :

           

  1. மனித உடலில் கொழுப்பைக் குறைக்க உதவும்.
  2. சிறுநீரகங்களைப் பாதுகாக்க உதவும்.
  3. அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்குப் பயன்படுத்தலாம்.
  4. வெப்பத்தினால் வரும் தலைவலிக்கு இதன் சதைப் பகுதியைப் பற்றுப் போடலாம்.
  5. உடல் சூடு தணியும்.
  6. காமாலை நோயைக் கட்டுப்படுத்தும்.
  7. சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து உடலை வலுப்படுத்தும்.
                                                தீமை:

             

1.பச்சையாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உண்டாகும்.

الأحد، 25 أغسطس 2024

படித்தல் திறன் (சிறுகதை)

          தமிழ் சிறுகதை (படித்தல் திறன்)

                                                        ஒற்றுமையே பலம்.


         



               ஒரு கிராமத்தில் அண்ணன்,தம்பிகள் நான்கு பேர் இருந்தனர்.அந்த நால்வரும் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர்.அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த அவர்களின் தாத்தா ஒரு வழியை யோசித்தார். 

         இந்த வழி சிறிய வயதில் கேட்ட ஒரு கதையில்  இருந்து அவர் கற்றுக்கொண்டது.ஒரு நாள் தன் பேரப் பிள்ளைகளிடம் அடுப்பு எரிக்கப் பயன்படுத்தும் ஒரு கட்டு சுள்ளிக் கட்டைகளை வாங்கி வரக்கூறினார்.

       அந்த சுள்ளிக்கட்டை ஒவ்வொரு பேரனிடமும் கொடுத்து,அதை இரண்டு துண்டுகளாக உடைக்கும்படிக் கூறினார்.பேரன்கள் நால்வரும் தனித்தனியாக முயன்றும் சுள்ளிக்கட்டை உடைக்க முடியவில்லை.

    பின் அந்தச் சுள்ளிக்கட்டை அவிழ்த்து,ஆளுக்கு ஒரு சுள்ளிக் குச்சிகளைக் கொடுத்து ஒடிக்கக் கூறினார்.அவர்கள் சுலபமாக ஒடித்துவிட்டனர்.

      "நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருந்தால் உங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது.  தனித்தனியே பிரிந்து இருந்தால் பாதிப்படைவீர்கள்" என்றார்.

     கடைசிப் பேரன் குமார் கேட்டான்,"தாத்தா,என்னோடு படிக்கின்ற சரவணன்,எனது நண்பன்.ஆனால் அவனோடு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லையே .....அப்போ என்ன செய்யுறது?"

     உடன் பிறந்தவர் இல்லை என்றால் என்ன?"நீ தான் நட்பாக இருக்கிறாயே! உன் போன்ற  நண்பர்களைப் பிரியாமல் இருந்தாலே பலம்தான்" என்றார் தாத்தா.



الخميس، 22 أغسطس 2024

ENGLISH (GRAMMAR)

           PRONOUN (subjective pronoun).

               பிரதிப் பெயர்ச்சொல்.

1st PERSON -    (singular)   I.          நான். 

                           (plural)     WE.   நாம் /  நாங்கள்.


2nd PERSON-  (singular) YOU.     நீ.

                           (plural)     YOU.     நீங்கள்.


3rd PERSON -  (singular)  HE.    அவன்.

                                              SHE.  அவள்.

                                                IT.    அது.

                        (plural)  THEY.அவர்கள்/ அவைகள்


Some examples in sentences:



1.Sunflower is a beautiful flower.  (It)





2.Students are doing science exercise. (They)



3.Saran sits in the garden. (He)




4.The sun rises in the east.  [It]e east. (It)




5.We are getting some activities. 










6. You see the photos.

الأحد، 18 أغسطس 2024

READING SKILL-STORY.

                                    THE KING OF THE CITY

       


           The lion in the forest wanted to visit the city.Lion bravely came out of the forest.At that time,two men came in front.On seeing them,the lion hesitated.The men saw the lion and ran screaming in fear.

           Seeing them run,the lion got courage and walked bravely,showing a threatening look on everyone.

          Seeing the lion,everyone got scared and ran and hid.Goats,cows and dogs all run hurriedly.No one ever came out in the city.The lion walked majestically.

         "Nobody in this city has the guts to even stand in front of me.All are cowards.I am the king of this city,"he said loudly.

         He ate the meat from a local butcher shop.

         The loin thought that this city was more comfortable for him than the jungle,Then, a  big net fell on it.He tried a lot but he could not move.

        It was a net thrown by hunters in that city.The lion was tranquilized by the hunters.An anesthetic needle was inserted into the gun and fired at the lion.

      The needle was injected  into the leg of the lion and in no time the lion fainted.

      When the lion was back to his consciousness,it was locked in a cage and in a cart.It was worried that I who was free in the forest would get stuck like this.

     Afer a while the vehicle stopped and  the lion peered through the window.The forest department  officials caught the poachers and dragged them away.Another officer drove the vehicle.The officer went into the forest,stopped the cart and opened the cage.

    The lion ran into the forest saying,"oh....A  grate escape,"


الثلاثاء، 13 أغسطس 2024

Find it.how many triangles?

 FIND IT.கண்டுபிடி.


HOW MANY TRIANGLES? FIND IT.

முக்கோணங்கள் எத்தனை?

Commentல் விடையளியுங்கள்.
உங்கள் திறமைக்கு சவால்.

الاثنين، 12 أغسطس 2024

வள்ளுவர் கோட்டம் :

 

   வள்ளுவர் கோட்டம் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பண்பாட்டுக் கட்டிடம் ஆகும்.இது 1976ல் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. இது தமிழ் கவிஞர் திருவள்ளுவருக்கு dedicated ஆக இருக்கிறது. இந்த கட்டிடம் திருவள்ளுவரின் மாபெரும் சிலை மற்றும் ஒரு அரங்கத்தை கொண்டுள்ளது, மேலும் இது தமிழ் இலக்கியம் மற்றும் தத்துவத்திற்கு உரிய மரியாதையை செலுத்துகிறது.

   தேருக்கு முன்புறம் 200 அடி நீளம்,100 அடி அகலம் கொண்ட பெரிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.ததூண்களே இல்லாத இந்த மாண்டபம் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது.

    இம்மண்டபத்தில் 'குறள்மணி மாடம்'  மிக அழகாக புத்தகத்தினை திறந்து வைத்துப்பார்த்தால் எப்படி இருக்குமோ அதுபோல கற்பலகைகள் வரிசையாகப் பொருத்தப்பட்டு  1330 திருக்குறள்களும் செதுக்கப்பட்டுள்ளன.

   மண்டபத்தின் முன்புறத்தில் அறம்,பொருள்,இன்பம் என்னும் முப்பால்களைக் குறிக்கும் கலைச்சிறப்புடன் கலைச்சிறப்பாக மூன்று வாயில்கள் உள்ளன.

   இத்தேரில் திருவள்ளுவர் சிலை அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இரு யானைகள் இழுத்துச்செல்வது போல் தேரைச்சுற்றி 133 அதிகாரங்களை நினைவூட்டும் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

 

الأحد، 11 أغسطس 2024

Basic english

LEARNING SKILLS ; 

 1.Listening

2.Speaking

3.Reading

4.Writting.

  These four skills are based important skills in primary.  

short form of LSRW.


SENTENCE ;

 English is a language is to express our thoughts and feelings.

we speak a language by making sentence.

 A group of words is called ''sentence''.

A sentence have three important things.they are...

 1.subject

 2.verb

 3.object.




எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...