الخميس، 31 أكتوبر 2024

இந்தியக் குகைகள் (INDIAN CAVES) : மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள எலிஃபெண்டா குகைகள்,அஜந்தா குகைகள்,எல்லோராக் குகைகள்,கர்லா குகைகள்)

               இந்தியக் குகைகள்.

               


           இந்திய குகைகள் மலைகளில் அறை போன்று இயற்கையாகவே அமைந்திருக்கும் பகுதிகள் குகைகளாகும்.பழங்கால மனிதர்கள் குகைகளை இருப்பிடமாகப் பயன்படுத்தினர்.சில விலங்குகளும் குகைகளில் வாழும் குணமடையவை. மனிதர்கள் சிலர் குகைக் கோவில்களை உருவாக்கவும் செய்துள்ளனர். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான மஹாராஷ்டிர மாநிலத்தில்உள்ள நான்கு குகைககளைப் பற்றி இங்கு காணலாம்.

இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள குகைகள்:

1.எலிஃபெண்டா குகைகள் :

       



        காலம் : கி.பி. 5-10 ஆம் நூற்றாண்டு.
  
                மும்பை துறைமுகத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கராபுரி எலிஃபண்டா தீவில் இக்குகைக் கோயில்கள் அமைந்துள்ளன. இக்குகைகள் முழுவதும் சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இக்குகைகள் யுனெஸ்கோவால் 1987-ல் 
பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

        இது ஒரு குடைவரைக் கோயில். இக்கோயில் தொகுதி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில், அழகிய புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பாறைகளில்  குகைகள் குடையப்பட்டுள்ளன.

2 . அஜந்தா குகைகள் :

        

          காலம் : கி.பி. 2 ஆம் நூற்றாண்டு.

                    அஜந்தா குகைகளில் புத்த மத சிற்பங்களும் ,ஓவியங்களும் காணப்படுகிறது.குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும். மராட்டிய மாநிலம் ஔரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமமாக அஜந்தா காணப்படுகிறது

           இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடமாக இக்குகைக் கோவில் அமையப்பட்டுள்ளது.
        இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.
        குகைகளை முன்பு மழைக்காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக புத்தபிட்சுகள் பயன்படுத்தியிருக்கின்றனர். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன.
            1983 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

3 . எல்லோராக் குகைகள் :

              


         காலம் : கி.பி. 5-10 ஆம் நூற்றாண்டு.

         இக்குகை ஒரு தொல்லியற் களமாகும். இது அவுரங்காபாத், மகாராட்டிரம் நகரிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது. ராஷ்டிரகூட மரபினரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது.இது புகழ் பெற்ற குடைவரைகளைக் கொண்டு விளங்குகிறது. இக்குகைகளிலே பௌத்தஇந்து மற்றும் சமணக் கோயில்களும், துறவு மடங்களும் அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை.

   இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டச் சின்னமாகும்.தனித்துவமான கட்டடக் கலைக்காக உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.

4. கர்லா குகைகள் :

            


           காலம் : கி.பி. 5-ஆம் நூற்றாண்டு.

            பண்டைய இந்தியாவின் பௌத்த,சமய குடைவரை குகைக்கோயில் ஆகும். மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோனோவாலாவிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் கர்லா கிராமத்தின் மலையில் அமைந்துள்ளது.  

         பௌத்த பாறை வெட்டுக்களுக்கும் , பெரிய தூண்களைக் கொண்ட பிரார்த்தனை மண்டபத்திற்கும் கரலாக்குகைகள் புகழ்பெற்றவர் ஆகும்.    இக்குகைகளை இந்திய தொல்லியல் ஆய்வகம் பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவு சின்னங்களாக பராமரிக்கிறது.


SPONSORSHIP :

    "This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal".








الاثنين، 21 أكتوبر 2024

அறிவோம் பாலைவனம்,விளக்கம் மற்றும் பாலைவன அமைவிடங்கள்.-We know the desert,explanation and build a desert.

                   பாலைவனம்-DESERT.

          மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறும் இடங்களையே பாலைவனம் என்கிறோம். பொதுவாக ஆண்டுக்கு 250 மி. மீ. க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன. 

           புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் மிகுந்தும் இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். பாலைவனங்கள் மனிதவாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதில்லை.


            உலகில் வேறு வகையான பாலைவனங்களும் உள்ளன.


பாலைவன வகைகள் :


1.சூடான வறண்ட பாலைவனங்கள் :

                  

                   சஹாரா  பாலைவனம் .

* ஆப்பிரிக்காவின் வடக்கில் அமைந்துள்ள சஹாரா பாலைவனம் உலகின் பெரிய வெப்பமான பாலைவனங்களில் ஒன்று.
* நைல் என்னும் நதி இந்த பாலைவனத்திற்கு இடையில் ஓடுகிறது.
*  ஆண்டு முழுவதும் வெப்பநிலை சூடாகவும் வறண்டதாகவும் இருக்கும்.
*  ஒட்டகங்கள் இங்கு அதிக அளவில் காணப்படும்.


2. அரை வறண்ட பாலைவனங்கள் :

                

              
                   கோபி பாலைவனம் .

      


* கோபி பாலைவனம் இது வட சீனா மங்கோலியாவின் தெற்கு பகுதிகளை உள்ளடக்கியது.
* இங்கு மணலும் பாறைகளும் புல்வெளிகளும் குன்றுகளும் உள்ளன.
*  இங்கு வெப்பநிலை சற்று குளிர்ச்சியாகவும் வறண்டதாகவும் காணப்படும்.
*  பனிச்சிறுத்தை, கரும்புலி, காட்டுக் கழுதை போன்றவை இங்கே வாழ்கின்றன.

3. கடலோர பாலைவனங்கள் :
                  
                  அட்டகாமா பாலைவனம். 

*  அட்டகாமா பாலைவனம் தென் அமெரிக்காவில் சிலி- பெரு நாடுகளின் இடையில் உள்ளது.
*  இங்கு எரிமலை குழம்புகளின் படிமங்களும், உப்பு படுகைகளும் அதிகம் காணப்படுகின்றன.
* இங்கே சில பகுதிகளில் சுமார் 400 ஆண்டுகளாக மழை பொழிவு ஏற்படாமல் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
*  இங்கு ஒட்டகம், எலிகள், சாம்பல்நரி, பெங்குயின் ஆகிய உயிரினங்கள் வாழ்கின்றன.

4.குளிர் பாலைவனங்கள் :
             


* அண்டார்டிகா உலகின் மிகப்பெரிய குளிர்பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.
*  இங்கு மிகக் குறைந்த வெப்பநிலையே நிலவும் மழை பொழிவும் மிக குறைந்த அளவே இருக்கும்.
* அதிக அளவு பனித்துகள்களும் பனிப்பாறைகளும் நிறைந்து காணப்படும்.
* பனிப்பகுதியில் வாழும் பெங்குயின், சீல், திமிங்கலம், கடற்பறவைகள் இங்கு காணப்படும் உயிரினங்கள் ஆகும்.




Sponsor ship :

"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

السبت، 19 أكتوبر 2024

இலக்கணம்-பால் இலக்கணம் , பாலின் விளக்கம் மற்றும் பாலின் வகைகள்-படங்களுடன்.(Grammar-gender ,gender's definition and their varieties)

                   தமிழ் இலக்கணம்.

                           பால்.


* பால் என்பதற்கு பகுப்பு /பிரிவு என்று பொருள். 


* திணையின் உட்பிரிவே பால் ஆகும்.திணை என்பதற்கு ஒழுக்கம் என்பது பொருள்.திணை உயர்திணை, அஃறிணை என இரண்டு வகையாக பிரித்து அறியப்படும்.

        உயர்திணை:


         @  உயர்ந்த ஒழுக்கம் உடையவர்கள்.அதாவது நன்மை,தீமை என பகுத்தறியும் திறன் உடையவர்கள்.

          @உயர்திணைக்குரிய பால்கள் மூன்று வகைப்படும்.அவை,
1.ஆண்பால்
2. பெண்பால்
3. பலர்பால்  ஆகும்.

         அஃறிணை:

                  @ அல்+திணை.அதாவது மனிதர்கள்  அல்லாத பிற உயிருள்ள,உயிரற்ற அனைத்தும் சார்ந்தது..பகுத்தறியும் திறன் இல்லாதவை.

அஃறிணைக்குரிய பால்கள் :

 இரண்டு வகைப்படும்.அவை,
1. ஒன்றன் பால்

2. பலவின்பால் ஆகும்.


திணையை  உள்ளடக்கியே பால் ஐந்து வகைப்படும்.

பாலின் வகைகள் :


* பால் ஐந்து வகைப்படும்.


1. ஆண்பால் :


ராகவன்.


தாத்தா.




சரண்குமார்.

   *ஓர்  ஆணைக் குறிப்பது ஆண்பால்.(மாணவன்,கண்ணன்,மன்னன்,வெட்டியான்,ஆதவன்)

           *  பொதுவாக 'அவன்' என்றப் பெயரில் சுட்டப்படும்.

       *னகர ஈறுகள் ஆண்பாலை உணர்த்தும்.எ.கா:அவன், இவன், வந்தான்.


 2. பெண்பால் :



                           பாட்டி



              பூக்காரி.


                             நளினி.

     

      *ஓர் பெண்ணைக் குறிப்பது பெண்பால்.(ராகவி,குறத்தி, பைரவி, இளவரசி, சன்விகா)
       * பொதுவாக 'அவள்' என்றப் பெயரில் சுட்டப்படும்.

      * ளகர ஈறுகள் பெண்பாலை உணர்த்தும்.

          எ.கா:அவள், இவள், வந்தாள்.

3.பலர்பால் :

  


                        முதியவர்கள்.


                           மக்கள்.


                   மாணவர்கள்.

        * உயர்திணையில் பலரைக் குறிப்பது பலர்பால்.
        * அவர்கள் என்றப் பெயரில் சுட்டப்படும்.

         * அர், ஆர் என்பன பலர்பாலை உணர்த்தும்.எ.கா:அவர், இவர், உண்டார்.

4.ஒன்றன் பால் :


                            பொம்மை.

      
                            தாமரை.


                               பூனை.


        *அஃறிணையில் ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால்.
         * அது என்ற பெயரில் சுட்டப்படும்.


5.பலவின்பால் :


                   பறவைகள்.


                          பூக்கள்.


                வளையல்கள்.


           * அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால்.
          * அவை என்றப் பெயரில் சுட்டப்படும்.

Vedio link : : https://drive.google.com/file/d/12FODW60eRrIgMABOiik5h0Wwjtsa02ez/view?usp=drivesdk


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

genreviews

الجمعة، 11 أكتوبر 2024

படித்தல் திறன் - சிறுகதை.

                 எல்லாம் நன்மைக்கே!!!

         


     முன்னொரு காலத்தில்ஒரு நாட்டை மன்னன் ஒருவர் ஆண்டு வந்தார்.அவர் கோபம் மிகுந்தவர்.அவரருக்கு ஓர் மந்திரி இருந்தார்.எது நடந்தாலும் " எல்லாம் நன்மைக்கே" என்று கூறுவார்.

          ஒரு சமயம் மன்னனின் கைவிரல் ஒன்று வெட்டப்பட்டு ஊனமடைந்து வலியால் துடித்தார்.வேதனைப்பட்டார்.ஆனால் அச்சமயத்தில் அமைச்சர் " எல்லாம் நன்மைக்கே ! கவலை வேண்டாம் அரசே" என்றார்.

          அரசனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட மந்திரிக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

        ஒரு நாள் மன்னனும் மந்திரியும் வேட்டையாடும் போது வழி தவறி நீண்ட தூரம் சென்றுவிட்டார்.அங்கு பாழடைந்த கிணறு இருந்தது.மன்னன் மந்திரிக்குப் புத்தி புகட்ட கிணற்றில் தள்ளிவிட்டார்.அப்போதும் அமைச்சர், "எல்லாம் நன்மைக்கே" என்று பொறுமையாகக் கூறினார்.

       பொழுது சாய்ந்துவிட்டது.மன்னன் திரும்பும் போது சில காட்டுவாசிகள் கூட்டமாக வந்து ன்னனைப் பிடித்துச் சென்று காளி கோவில் முன் நிறுத்தி பலி கொடுக்க இருந்தனர்.அப்போது அவர்கள் தலைவன் வந்தான்.மன்னனை ஏற இறங்கப் பார்த்து " விரல் ஊனமுள்ள இவனையா அழைத்து வந்தீர்கள்? ஊனம் எதுவும் இல்லாதவனைத் தானே பலி கொடுப்போம்.இவனை அவிழ்த்து விடுங்கள்" என்றதும் மன்னனை விடுவித்தனர்.

           இப்போது மந்திரி சொன்னது நினைவிற்கு வந்தது.அவர் உடனே பாழும் கிணற்றிற்குச் சென்று மந்திரியைக் காப்பாற்றினார். "மந்திரியாரே!  நான் தெரியாமல் உங்களுக்கு கெடுதல் செய்துவிட்டேன்.நீங்கள் சொன்னபடி 'எல்லாம் நன்மைக்கே' என்பதன் உண்மையை உணர்ந்து கொண்டேன்" என்று வருந்தினார்.

      " வருந்த வேண்டாம் மன்னரே! என்னையும் நன்மைக்காகத்தான் தள்ளிவிட்டீர்கள்.உங்களுடன் நானும் வந்திருந்தால் என்னையல்லவா பலி கொடுத்திருப்பார்கள்?" என்றதும் மன்னனுக்கு அதிலிருந்த உண்மை புலப்பட்டது.

الأربعاء، 9 أكتوبر 2024

உங்களுக்குத் தெரியுமா காளானைப் பற்றி! மழைக்காலத்தின் காளான்!பல பல வண்ணங்களில்,பல வடிவங்களில்!Do you know mushrooms!

                                    காளான்கள்

         மழைக் காலங்களில் நம்மில் பலரும் காளான்கள் முளைத்திருப்பதைப் பார்த்திருப்போம்.காளான்கள் பூஞ்சைகள் இனத்தைச் சேர்ந்தவையாகும். தாவரங்கள் அல்ல.நிலத்திற்கு அடியில் வாழும் பூஞ்சைகள், தனக்குத் தேவையான காற்றைப் பபெற காளான்களாக வெளியே வருகின்றன.காளான்களில் பல வகைகள் உள்ளன.

         


      காளானில் கொழுப்பு இல்லை.சோடியம் குறைவு.கலோரிகள் குறைவு.கொழுப்பு இல்லை.நார்சத்து அதிகம்.மழைக் காலத்தில் சேர்த்துக்கொண்டால் நோய், தொற்றுநோய் வருவது குறையும்.

காளான் வகைககள் :

           காளான்கள் முட்டை வடிவிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத நுண்ணறிவு வரை பல வடிவங்களில் கிடைக்கின்றன.

        1.நாய்குடைக் காளான். 

        2.முட்டைக் காளான்.

         3.சிப்பிக் காளான்.

         4.பூஞ்சைக் காளான்.

காளானின் மருத்துவ குணம் :

         


     * பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸுடன் காளான் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண்,  ஆசனவாய்புண் போன்றவை குணமாகும்.

     * மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்க வல்லது.

      * இரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

       *மூட்டு வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணி.

      *காளான்சூப் சாப்பிட்டால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் குணமாகும்.

      *புற்றுநோய் வராமல் தடுக்கும். 

       *உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.

காளானில் சத்துக்கள் :

       1. 100 கிராம் காளானில் 447 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.

      2. 100 கிராம் காளானில் 35% புரதச்சத்து உள்ளது.

      3. தாமிரச்சத்து நிறைந்தது.

      4. ஊட்டச்சத்து நிறைந்தது.வைட்டமின் பி1, பி2, பி9, பி12, வைட்டமின் சி, வைட்டமின் டி2 உள்ளது.


இந்தியாவிலுள்ள காளான் வகைகள் :

       


        போதுமான ஈரப்பதம் கொண்ட வெப்பமண்டல நாடான இந்தியா, பூஞ்சைகளுக்கு சொர்க்கமாக உள்ளது, ஏனெனில் இந்த ஈரப்பதமான நிலைமைகள் அவற்றின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. எனவே நாட்டில் ஏராளமான காளான்கள் உள்ளன. ஆனால் இந்த மிகுதியானது அளவில் மட்டுமல்ல, காளான் இனங்களின் பன்முகத்தன்மையிலும் உள்ளது. எனவே இந்தியாவில் எண்ணற்ற வகை காளான்கள் உள்ளன.அவற்றில் சில,

     1.பட்டன் காளான்

     2.சிப்பிக் காளான்

     3.ஷிடேக் காளான்

     4.ஏனோகி காளான்

      5.மோரல் காளான்

      6.ரெய்ஷி காளான்.


ஒட்டுண்ணிக் காளான்கள் :


        காளான்கள் முளைப்பதற்குத் தனியாக விதைகள் என்று ஏதுமில்லை. தன்னிச்சையாக ஒளிச்சேர்க்கை செய்யாமல் வாழும் பூஞ்சை என்பதனால், மற்ற தாவரங்கள் அல்லது உயிரினங்கள் மீது ஒட்டுண்ணியாகக் காளான்கள் இருக்கும்.இதன் வழியாக இறந்த தாவரங்கள், விலங்குகளின் உடல்களை மக்கச் செய்யும் பணியிலும் பூஞ்சைகள் ஈடுபடுகின்றன.

       


        இயற்கையாக வளரக்கூடிய சில வகை காளான்களில் விஷத்தன்மை மிகுந்து உள்ளதால் விவரம் தெரியாமல் எதையும் உண்ணக்கூடாது. காளான்களில் புரதம் மிகுந்துள்ளதால் தற்போது இவை வியாபார ரீதியாக அதிகம் பயிரிடப்படுகின்றன.


மாறுபட்ட வடிவங்களில் காளான் :

        


     ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் ஒவ்வொரு காளானும் அளவு, நிறம், உருவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடுகின்றன.காளான்கள் பஃப்பால் (puffball), கோப்பை வடிவக் காளான் ( Cup fungi) , வட்ட வடிவக் காளான் (Fairy rings) என வெவ்வேறு வடிவங்களிலும் காணப்படுகின்றன.


வண்ணங்களே ஆபத்து :

       


             தானாக வளரும் அனைத்துக் காளான்களும் உண்பதற்கு உகந்தவை அல்ல.பொதுவாகக் காடுகளில் காணப்படக்கூடிய கவரும் வண்ணங்களில் உள்ள காளான்கள் நச்சுத்தன்மை உடையதாக இருக்கின்றன.


தொப்பிக் காளான் :


       தொப்பிக் காளான்கள் மிகவும் ஆபத்தானவை.காளான்களிலேயே அதிக நச்சுத்தன்மை வாய்ந்தவை இவையே ஆகும்.

         


முதன் முதலில் இத்தகைய காளான்கள் அமெரிக்க வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து தற்போது அயர்லாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகில் பல நாடுகளிலும் இந்தக் காளான்கள் இருப்பது தெரிய வந்தது.

        இவை சுமார் 15 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக் கூடியதாகும்.மமேலே தொப்பிப் போன்ற தலைப்பகுதி இருக்கும்.மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும்.தொப்பியின் கீழ் வெள்ளை நிறச் செதில்கள் மற்றும் வெள்ளைத் தண்டு இருக்கும்.


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

الجمعة، 4 أكتوبر 2024

READING SKILL-perseveration (story)



                 PERSEVERATION (STORY)

      

        Two frogs sneaked into the kitchen of a house through the door of the backyard. There, hot milk was getting cooled in a big vessel.

         


             The two frogs made up their minds to peep into the vessel and hence targeting the rim of the vessel. Alas! Instead of getting lodged on the rim of the vessel, they jumped into the milk. They were unable to jump out of the vessel in spite of their repeated attempts. They were unable to come out of the vessel.

             The two frogs were panicky. One of the frogs said, " That's all, our life ends" .
        
             Another frog said,  " Don't say so. Let's keep swimming and definitely we will get a way".

          The first frog grumbled out of fear after swimming for a while. However, the second frog continued the first one.

          In due course of time, milk turned into curd. They swam happily. Now as the butter had stared to separate and float over the area, they swam with confidence without getting tired and they jumbed out of the vessel standing on the butter. They had a great escape and ran away.

الثلاثاء، 1 أكتوبر 2024

மூளைக்கு வேலை!!

   

               கண்டுபிடி!!! கண்டுபிடி!!!

                   மூளைக்கு வேளை!!!


1. ஒரு பெரிய கனரக வாகனம் ஒன்று பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டது.உயரம் இடித்தது. எவ்வளவு முயன்றும் வாகனத்தை வெளியே எடுக்க முடியவில்லை. அப்போது ஒரு வயதான முதியவர் ஒருவர் உதவிக்கு வந்தார். அவர் சொன்ன யோசனைப்படி செய்தவுடன் வண்டி பாலத்தின் அடியில் இருந்து வெளியே வந்துவிட்டது, அப்படி அவர் என்ன யோசனை சொல்லிருப்பார்?

            

2..பாலாஜி விமலின் மகன், அருண் கமலாவின் மகன். பாலாஜி கீதாவை கல்யாணம் கொள்கிறான். கீதா கமலாவின் மகள் அப்படியென்றால் அருண் பாலாஜிக்கு என்ன உறவு ?

      




3. எட்டு, எட்டுகளை கொண்டு 1000 கூட்டுத்தொகை பெறுவது எப்படி?


         


4.ஒரு யானை தண்ணீர் குடிக்க ஆற்றுக்குச் சென்றது. அந்த ஆற்றுக்குள் 5 வரிக்குதிரைகளும்,, 5 ஒட்டகச்
சிவிங்கிகளும் இருந்தன. அப்படியானால் மொத்தம் எத்தனை மிருகங்கள் ஆற்றுக்கு சென்றன?

      

       





விடைகள் :


1. அவர் வாகனத்தின் டயர்களில் இருக்கும் காற்றை பிடுங்க சொன்னார். காற்றை பிடிங்கியவுடன் வண்டியின் உயரம் குறைந்தது. வாகனமும் எளிதாக வெளியே வந்தது.


2. மைத்துனர்.


3.   888 + 88 + 8 + 8 + 8 = 1000.


4. யானை மட்டும் தான் ஆற்றுக்கு சென்றது. மற்ற மிருங்கங்கள் அங்கே தான் இருந்தன.

                  
        



எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...