ஞாயிறு, 26 ஜனவரி, 2025

தோற்றத்தில் வசீகரிக்கும் விரல்களால் மீட்டெடுக்கும் இசைக்கருவி வீணை!A musical instrument to restore the appearance of the fingers!

 

          இசைக்கருவி - வீணை.


   பண்டைய காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும் கிபி 17ஆம் நூற்றாண்டில் தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது . தஞ்சையை  ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில்தான் இவ்வுருவம் அமையப் பெற்றது.

           


           இசைக்கருவிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வீணை . ஏனென்றால் மற்ற இசைக்கருவிகள் இசையினால் வசீகரிக்கும் . ஆனால் வீணை தன் தனித்துவமான அழகிய தோற்றம், அதில் செதுக்கி இருக்கும் அழகிய வெளிப்பாடுகளினாலும் நம்மை கவர்ந்திழுக்கும். இந்திய இசையின் பல நுட்பங்களை ,  தத்துவங்களை இக்கருவி மூலம் வெளிப்படுத்தலாம்.


நரம்புக் கருவி :

 
     வீணை ஒரு நரம்புக் கருவி .  இது பலா மரத்தினால் செய்யப்படுகிறது. உலோக கம்பிகளில் நான்கு தந்திகள் வாசிப்பதற்கும், மூன்று தந்திகள்  சுருதி மற்றும் தாளத்திற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.


    வீணை சுமார் நான்கரை அடி அகலம் கொண்டிருக்கும் இது நடை சுமார் ஏழு கிலோ முதல் ஒன்பது கிலோ கிராம் வரை இருக்கும்.

 
பயன்படுத்தும் முறை :

 
      தரையில் அமர்ந்து கொண்டு மடியில் வைத்து வலது தொடையில் தாங்கிக் கொண்டு வீணை மீட்டப்படும் அழகே தனி. வீணை கருவிகளை இடது கைவிரல்களால் அழுத்தி தேய்த்து ஸ்வரங்களை எழுப்புவர் . தனியாகப் பக்கத்திலுள்ள மூன்று கம்பிகள் தாளக்கம்பிகள் எனப்படும் . அவற்றை வலது கை சுண்டு விரலாலும் நெளி அல்லது மீட்டு எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்தும் மீட்டுவர்.


 வீணையின் அமைப்பு :


     தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு.


    ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் , குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர்.


வீணையின் வகைகள் :

 
     வீணையில் சரஸ்வதி வீணை , ருத்ர வீணை , விசித்திரவீணை, மகாநாடக வீணை , அன்சவீணை , நவசித்திர வீணை,  சாத்வீக வீணை எனப் பல வகைகள் உள்ளன.

புகழ்பெற்ற வீணை இசை கலைஞர்கள் :


1.  காரைக்குடி சாம்பசிவ ஐயர்.
2.  வீணை சிட்டிபாபு.
3. எஸ் . பாலச்சந்தர்.
4. வீணை தனம்மாள்.
5. வீணை காயத்ரி .
6. ஆர் பிச்சுமணி ஐயர்.
7.ஈமணி சங்கர சாஸ்திரி.


   செவ்வியல் இசையில் வீணையின் பங்கு முக்கியமானது .  உலக அளவில் புகழ்பெற்ற பல வீணை கலைஞர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் வீணை புகழ்பெற்றது . இங்கு கைவினைஞர்கள் பல தலைமுறைகளாக வீணைகளை செய்து வருகின்றனர்.  தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீட்டு முத்திரையை பெற்றுள்ளது.


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication".

சனி, 18 ஜனவரி, 2025

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் உருவாக்கிய பலவகையான அழகியக் கோட்டைகள் - பகுதி 1.Tamil Nadu Forts Part 1.

                 தமிழக கோட்டைகள் ( பகுதி-1)

          தமிழகத்தை மன்னர் பல சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளனர் . அவர்களுள் சேரர், சோழர் , பாண்டியர் , பல்லவர் , நாயக்கர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.                                

          சோழர்கள் , பாண்டியர்கள் , நாயக்கர்கள் ஆகியோர் தமிழகத்தில் அற்புதமான கோட்டைகளைக் கட்டினார்கள். டச்சு,  பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் போன்ற அயல் நாட்டினரும் நமது நாட்டிற்குள் நுழைந்து கோட்டைகளைக் கட்டியுள்ளனர்.

            



       அக்கால கட்டடக்கலையின் நினைவுச் சின்னங்களாக கோட்டைகள் விளங்குகின்றன. வரலாற்று இடங்களாகவும் பாதுகாக்கப்படுகிறது. அக்கால கோட்டைகளில் சில கோட்டைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன .


கோட்டைகளின் வகைககள் :


தமிழ்நாட்டில் உள்ள கோட்டைகள் , 

       அ. சங்ககாலக் கோட்டைகள், 

       ஆ. பேரரசுக் கோட்டைகள், 

       

       இ. சிற்றரசர்களின் கோட்டைகள்,

        ஈ.  பாளையக் காரர்களின் கோட்டைகள்,

         உ.  ஐரோப்பிய/ சேதுநாட்டுக் கோட்டைகள் 

      எனப்  பல வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. 

       எல்லைப்புறங்களில் காடுகளில் படைப்பற்று அல்லது படைவீடு என அழைக்கப்படும் கோட்டைகள் அமைக்கப்பட்டன. 
செலவுக்காக மக்களிடம் "கோட்டைப் பணம்" என்று வரி வசூலிக்கப்பட்டது.

    கருங்கற்களால் ஆன கோட்டைகள்,

    மண்ணால் ஆன கோட்டைகள்,

    மலையால் ஆன மலைக்கோட்டைகள்,

    செங்கற்களால் ஆன கோட்டைகள் என கோட்டைகள் பலவாறாக அமைக்கப்பட்டிருந்தது.

         தமிழகத்தில் பல பகுதிகளில் பழைய கோட்டைகள் உள்ளன . தமிழக சுற்றுலாக்களின் முக்கிய இடங்களாக விளங்குகின்றன . அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

 
1.புனித ஜார்ஜ் கோட்டை :


              இந்தியாவில் பிரித்தானியர்களின்  முதலாவது கோட்டையாகும்.
        இந்த கோட்டை சென்னை கடற்கரை பகுதியில் உள்ளது . இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் 1639 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ல் கட்டப்பட்டது .

          



     ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், அமைச்சர் அலுவலகங்கள்,

 சட்டமன்றம்   ஆகியவை உள்ளன.


      கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றிலும்  அகழி உள்ளதை இன்றும் காணலாம். இவை தவிர புனித மேரி கிறித்தவ ஆலயம்கிளைவ் மாளிகை, மற்றும் கோட்டை அருங்காட்சியகம் ஆகிய மூன்று முக்கியக் கட்டடப் பகுதிகள் இங்கு உள்ளன.


2 . புனித டேவிட் கோட்டை :


      இந்தியாவின் சோழ மண்டலக் கடற்கரைப் பகுதியில் உள்ளது.தமிழகத்தில்  கடலூர் நகரத்திற்கு அருகில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.

         



    இக்கோட்டை1650 ஆம் ஆண்டு மராட்டியரிடம் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் வாங்கப்பட்டது. 1756 ஆம் ஆண்டு ராபர்ட் கிளைவ் புனித டேவிட் கோட்டையின் ஆளுனராகப் பதவி வகித்தார்.


    கோட்டை, மற்றுமுள்ள இடங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்காக விநோதமான வழிமுறை கையாளப்பட்டது.  கோட்டையில் இருந்து வானை நோக்கி ஒரு பீரங்கிக் குண்டு சுடப்பட்டு, அந்த பீரங்கிக் குண்டு விழுந்த இடம் வரை கோட்டைக்குச் சொந்தமான பகுதியாக கைக்கொள்ளப்பட்டது. இன்றும் அந்தக் கிராமங்கள் ‘பீரங்கிக்குண்டு கிராமங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன.

         



     இது ஒரு பிரிட்டீஷ் கோட்டையாகும்.தற்போது பராமரிப்பின்றி வெள்ளி கடற்கரைக்கு அருகில் உள்ளது.

3. வேலூர் கோட்டை :


       வேலூர் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் 1566 ஆம் ஆண்டு  விஜய நகர பேரரசு காலத்தில் நாயக்கர் மன்னரான  இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்முன நாயக்கரால்   கட்டப்பட்டு தற்போது வரைப் பயன்பாட்டில் உள்ளது.ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை  133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

       



        தமிழ்நாட்டின் கோட்டைகளில் வேலூர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக கருதப்படுகிறது. கருங்கற்களால் கட்டப்பட்ட அழகியக் கோட்டையாகும்.


        191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளதுஇந்த அகழி ஆயிரக்கணக்கான முதலைகளைக் கொண்டிருப்பதால் படையெடுப்பவர்கள் இதனைக் கண்டு அஞ்சினர்.


       வேலூர் கோட்டை ராணுவ கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் . இது இரட்டை கோட்டைகளாக உருவாக்கப்பட்டுள்ளது.     1799 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானிய குடும்பம் ஆங்கிலேயர்களால் இங்கு சிறை வைக்கப்பட்டது . 1806 ஆம் ஆண்டில் வேலூர் கோட்டையில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் கிளர்ச்சி இங்குதான் நடைபெற்றது.

           


        வேலூர் கோட்டைக்கு புகழ் பெற்ற ஜலகண்டேஸ்வரர் ஆலயம் , தேவாலயம் , மசூதி , அருங்காட்சியகம் மற்றும் பல அரசு அலுவலகங்கள் உள்ளன. வேலூர் கோட்டையின் உள்ளே ஹைதர் மஹால்,  திப்பு மஹால் , பேகம் மஹால் , கண்டி மஹால் , பாதுஷா மஹால் என ஐந்து முக்கியமான மஹால்கள் காணப்படுகின்றன.

      இக்கோட்டை வரலாற்று சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.இக்கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறித்தவ தேவாலயம், பள்ளிவாசல் ஆகியவை உள்ளன.


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


 


வியாழன், 9 ஜனவரி, 2025

நோயை உண்டு பண்ணும் கொசு ! A disease-causing mosquito!

               

                 கொசு (Mosquito)

   

      உருவில் மிகச் சிறிய அளவில் உள்ள கொசு தான் பலரின் தூக்கத்தை கெடுக்கிறது.நம் காது ஓரம் ' கொய்ங்... கொய்ங்...'என்று சத்தமிடும்.நம்மை கடித்து துன்புறுத்தும்.

          



       இதன் ஆயுள் காலம் சுமார் 15 நாட்கள் முதல் 25 நாட்கள் ஆகும். உலகில் மற்ற பூச்சி வகைகளை காட்டிலும் கொசு தான் மனிதனுக்கு அதிக தீமையை செய்கிறது.உலகில் சுமார் 2000 வகையான கொசுக்கள் உள்ளன.


 உடல் அமைப்பு :

 
        மெல்லிய உடல் கொண்ட கொசுக்கள் ஓர் இணை இறக்கைகளையும் , மூன்று இணை நீண்ட கால்களையும் கொண்டது.

நோய்க்கிருமிக்கான காரணி :

       


         கொசு ஊசி போன்ற மெல்லிய உறுப்பின் மூலம் நம் தோலுக்குள் குத்துகின்றன . அந்த நேரத்தில் நம் இரத்தத்தில்  உமிழ்நீரை செலுத்திவிட்டு நம் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்கின்றன . அந்த உமிழ் நீர் உள்ள கிருமிகளே நோய்க்கு காரணமாகின்றன.

கொசு உற்பத்தி இடங்கள் :

        


 
     தேங்கிய நீர்நிலைகள் , வடியாத மழைநீர் , திறந்தவெளி சாக்கடைகள் , மூடப்படாத நீர் இருக்கும் பாத்திரங்கள் ,  தெரு குப்பைத் தொட்டிகள் போன்ற இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. தேங்கி நிற்கும் சாக்கடை நீரில் மட்டுமல்ல ; நல்ல நீரிலும் கூட கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

ஆண் கொசு :

        



     பொதுவாக ஆண் கொசுக்கள் தாவரச்சாறு , பழ ரசம் ஆகியவற்றை ஆண் கொசுக்கள் உறிஞ்சி உண்ணும் .


பெண் கொசு :

 
       நம்மை கடித்து ரத்தத்தை உறிஞ்சுவது பெண் கொசுக்கள் தான். பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிடமிருந்தும் ரத்தத்தை உறிஞ்சும். இவை ரத்தத்தை உறிஞ்சும் என்றாலும் ரத்தம் முதன்மையான உணவல்ல.

          


         முட்டைகளை உருவாக்கத் தேவையான புரதத்தைப் பெறவே பெண் கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறது. அதனால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழ்கின்ற  இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீரில் மட்டுமே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது.

ஏடிஸ் கொசு : 

       ஏடிஸ் அல்போபிக்டசு  என்னும் வீரியமான இனம் தென் வட அமெரிக்காவிலிருந்து பயன்படுத்தப்படாத டயர் வணிகத்தின் வழி பரவியுள்ளது.


    யோகஃகன் வில்லெம் மெய்கன் என்பவரால் 1818 இல் முதன் முதலில் விளக்கப்பட்டு அவர் இட்ட பெயர்தான் ஏடிஸ் ஆகும் . இச்சொல் கிரேக்க மொழி . 

 
            இவ்வினக் கொசு கருமையான டெங்கு காய்ச்சல் , சிக்கன்குனியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை உண்டாக்குகின்றன . ஏடிஸ் கொசுக்களின் உடலிலும் கால்களிலும் கருப்பும் வெள்ளையுமான குறிகள் காணும்படியாக இருக்கும் . இவை பகலில் மட்டுமே உலா வரும். காலையிலும் மாலை சாயங்கால பொழுதிலுமே அதிகமாகக் கடிக்கிறது.

அனாபிலஸ் கொசு :

 
       இது ஒரு பெண் கொசு . இது உலகின் சில பகுதிகளில் மனித இறப்பை ஏற்படுத்தும் மலேரியா என்னும் தொற்று நோயை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குக் கடத்துகிறது. 

         மலேரியா , யானைக்கால் நோய் , ஃபைலேரியா போன்ற நோய்களை இவை பரப்புகின்றன.


வீட்டில் பின்பற்றக்கூடிய எளிய கொசு விரட்டி:


       1. எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றில் கிராம்பை சொருகி வைத்தால்  கொசு தொல்லை நீங்கும்.

      2.வேப்பிலை , நொச்சி , ஆடுதொடா இலை , குப்பைமேனி  இவற்றை பொடியாக்கி வாசனைக்காக சிறிது சாம்பிராணி   தூபம் போட்டால் கொசுவை விரட்டலாம்.
      அல்லது இவற்றைக் கொண்டு வில்லைகள் உருவாக்கி ஏற்றி வைக்கலாம்.
       ( புகை ஒவ்வாமை , ஆஸ்துமாத் தொல்லை உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டாம்.)


      3. சுத்தமான வேப்ப எண்ணெய் வாங்கி ஒரு அகல் தீபம் ஏற்றி எல்லா இடங்களிலும் காட்டி பின் ஒரு மூலையில் ஏற்றி வைத்தால் கொசு தொல்லை இருக்காது.

     



    இயற்கை முறையில் இவற்றைப் பின்பற்ற முயற்சிப்பது நமக்கும்,  சுற்றுச்சூழலுக்கும் நன்மை தரும்.


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

புதன், 1 ஜனவரி, 2025

பஞ்சகவ்யம் நமக்கு முன்னோர்கள் கொடுத்த வரம்! Panchakavyam is a gift given to us by our ancestors.

                  பஞ்சகவ்யம்.


 பஞ்சகவ்யம் பெயர்காரணம் :

       பஞ்சகவ்யா - பஞ்ச + கவ்யா.

பஞ்ச என்பது ஐந்து ஆகும். பசுவிலிருந்து கிடைக்கும் சாணம்,கோமியம்,பால்,தயிர் மற்றும் நெய் ஆகிய ஐந்து வகையான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவதால் இப்பெயர் பெற்றது.


பஞ்சகவ்யம் :

                
         




 @ பஞ்சகவ்யம் ஆன்மிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.     

                   @ பஞ்சகவ்யம் அல்லது பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு நீர்மக்கலவை.

       பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.


இந்துக்களின் வழிபாடு :

                



     பஞ்சகவ்யம் அபிசேகப் பொருள்களில் ஒன்றாக தெய்வச் சிலைகளுக்கு அபிசேகம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. அதன் பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.. இதனை பக்தர்கள் உட்கொள்கிறார்கள்.
      சுவாமி சிலைக்கு பஞ்சகவியத்தால் அபிசேகம் செய்யப்படும் போது வெளிப்படும் கதிர்கள் உடல் மற்றும் மனநோயைப் போக்கும் என இந்துக்கள் நம்புகின்றனர்.


இயற்கை வேளாண்மை :

             



         இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் பொருளாகவும்(உரம்) பயன்படுத்தப்படுகிறது.

பயன்படுத்தும் முறை :


ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் கைத்தெளிப்பான் கொண்டு பயிர்களுக்கு தெளிக்கலாம்.


மருத்துவ முக்கியத்துவம்:


* தூய்மைப்படுத்தல்பஞ்சகவ்யம் நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே, பஞ்சகவ்ய விளக்கு ஏற்றுவது சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும்.
*
தோல் நோய்கள்:  பஞ்சகவ்ய விளக்கின் புகை தோல் நோய்களை குணப்படுத்தும் என நம்பப்படுகிறது.

* மன அமைதி:  பஞ்சகவ்ய விளக்கின் புகை மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியைத் தரும் என நம்பப்படுகிறது.

பஞ்சகவ்யத்தின் நன்மைகள் :

         



1 . பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 
2 . பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.

    
3 . பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும் உள்ளது.


4.சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத
வகையில் இயற்கை வழியில் மிகவும் பயனுள்ளது.


5 . பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.


6 . ஆயுர் வேத வைத்தியத்தில் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

7.மண்ணுக்கு ஊட்டமளிக்கிறது.


பஞ்ச கவ்ய விளக்கு :

         



   கார்த்திகை, அமாவாசைபௌர்ணமி போன்ற சிறப்பான நாட்களிலோ, வெள்ளிக் கிழமையிலோ பஞ்ச கவ்ய விளக்கு ஏற்றினால் சிறப்பான பலனைப் பெறலாம்.இவ்விளக்கு ஏற்றுவதால்...

         



1 . தீய சக்திகள் நம்மை விட்டு அகலும்.

2. வீட்டின் எதிர்மறை ஆற்றல் அகலும்.
3.ஹோமம் செய்த பலன் உண்டு.
4. பணப்புழக்கம் அதிகரிக்கும்.
5.லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
6. கடன் பிரச்சினைக்கு தீர்வு விரைவில் உண்டாகும்.
     என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவுகிறது.


SPONSORSHIP :

"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


செவ்வாய், 31 டிசம்பர், 2024

படித்தல் திறன்-சிறுகதை

                   சுயபுத்தி வேண்டும்

         

           ஓர் ஊரில் நெசவாளி ஒருவன் வாழ்ந்து  வந்தான் . அவன் தறியில் துணி நெய்து விற்று, கிடைக்கும் ஓரளவு  வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தான்.

       


        ஒரு நாள் தறியின் கழிகள் உடைந்து விடவே கட்டைகள் வெட்டி வர கோடாரியுடன் புறப்பட்டான்.கடற்கரையோரத்தில் இருந்த மரத்தை வெட்ட கோடாரியை உயர்த்தினான்.அப்போது ஒரு தேவதை, "நிறுத்து! இந்த மரத்தில் நான் குடியிருக்கிறேன்.வெட்டாதே!" என்று தடுத்தது.

           


         நெசவாளி, "தறியின் கழிகள் உடைந்து விட்டன.துணி நெய்ய முடியவில்லை.என் குடும்பம் பசியால் துடிக்கிறது.வெட்டித்தான் ஆக வேண்டும்" என்றான். "மனிதனே! நீ இந்த மரத்தை வெட்டாமல் இருக்க என்ன வேண்டுமோ அதைக் கேள், தருகிறேன்!" என்று தேவதை கூறியது.

        அவனுக்கு எதைக் கேட்பது என்று புரியவில்லை.அதனால் "மற்றவர்களிடம் யோசனைக் கேட்டு வருகிறேன்.அவகாசம் கொடு!" என்று கூறிவிட்டுப்  புறப்பட்டான்.வழியில் நண்பன் ஒருவனைச் சந்தித்துக் கேட்டான்.அவன் முடி திருத்தும் தொழிலாளி.அவன்,"ஒரு பெரிய நாட்டைக் கேள்.நீ அரசனாகலாம்.நான் உனக்கு மந்திரியாகிறேன்.

இருவரும்சந்தோஷமாக வாழலாம்" என்றான்.

           நெசவாளி அவன் கூறியதை ஏற்கவில்லை.நேரே தன் மனைவியிடம் சென்று கேட்டான்.அவளோ,"நண்பன் கூறியபடி நாட்டைக் கேட்காதே.அரசன் என்றால் பகைவர் இருப்பர்.எப்பொழுதும்று தொல்லைகள் கொடுப்பர்" என்றாள்.அதுவும் நியாயமாகத் தெரிந்தது.அடுத்து அவளே,"உனக்கு இப்போது இரண்டு கைகளும்ஒரு தலையும் மட்டுமே இருப்பதால் முன் பக்கமாக ஒரு துணியைநெய்கிறாய்.மேலும் இரண்டு  கைகளும் ஒரு தலையும்,பின்புறமாக இருந்தால் இன்னொன்றையும் நெய்யலாம்.அதனால் வருமானம் இரட்டிப்பாகும்" என்று கூறினாள்.

      நெசவாளியும் அவ்வாறே தேவதையிடம் சென்று கேட்டான்.அவளும் அளித்தாள்.அவன் இரண்டு தலை நான்கு கைகள் பெற்றவனாய் ஊருக்குள் நுழைந்ததும்,அவனை யாரும் மனிதனாக எண்ணவில்லை.அரக்கன் என்று நினைத்து அடித்து கொன்று விட்டனர்.

      அதனால் யார் என்ன கூறினாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளாது , சுய புத்தியில் எது சரி? எது தவறு? என ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.அதுவே நன்மை பயக்கும்.

@@@####@@@####@@@####@@@###@@@

EDUQUEST ONLINE COURSE :


Many online course available here!
Live class available and clear doubts on the spot!
Valuable and money worth!
Easy to join and learn easy!
Course offers! And more...
If you want to join eduquest course,

Use Eduquest course my refferal link :
https://eduquest.courses?wlr_ref=REF-SPX-RSU


சனி, 28 டிசம்பர், 2024

Family - A group of people related to each other.Small family and big family.

                           FAMILY.

          your family is a group of people who are related to each other and live together.A family provides love , warmth and support to its members . we depend on our family for all over emotional needs.  Earlier , most  families had a joint set - up where the parents, Uncles,  aunts,  cousins and grandparents lived together in the same house.

      Due to shifting of people to different places for jobs , education etc. Families are nowadays  becoming smaller.


NUCLEAR FAMILY :


   A nuclear family consists of only one set of parents and their children.

   it can be small like small family.


     


@ SMALL FAMILY :

        A small family has parents with one or two children . Now a days parents with children called small family.

    Nowadays, the number of small families is increasing.


Small families  benefits :


* Stronger Bonds: With fewer members, there's often more time for individual attention and deeper relationships within the family.


* Greater Financial Stability: Fewer mouths to feed and fewer expenses related to children can contribute to a more comfortable financial situation.


* Flexibility: Smaller families may have more flexibility in terms of travel, leisure activities, and career choices.


Disadvantages :


* Loneliness: Children in small families may sometimes feel isolated or lack the social interaction that comes from having many siblings.


* Pressure to Succeed: With fewer children, there can be increased pressure on each child to excel in various areas.

    From young to old, they are more and more under stress depending on the situation.


* Difficulty in Finding Support: 

Small families may have fewer relatives or friends to rely on for childcare or emotional support.
Ultimately, the size of a family is a personal choice, and there is no one-size-fits-all definition of what constitutes a "small" family.

  * In times of danger there is no one to help.


   

JOINT FAMILY :


   Joint family is a family structure where multiple generations live together in the same household, sharing resources and responsibilities. It's a common arrangement in the Indian subcontinent, especially in India.

A family that includes at least three generations,such a grandparents, parents, children, aunts, Uncles, cousins and grandchildren.

         


@ BIG FAMILY :


       A big family has parents with three or more children.

    Nowadays, the number of joint families has reduced drastically.

Advantages :


  1. Having good economic condition and getting more experience knowledge. Because there are more people who can earn money.

    2. A good decision can be made after deliberation. 

     3. Many people who grow up with good morals act cautiously with a sense of vulnerability.

   4. young people who enjoy a social life may prefer joint family.

   5. You will get more love and affection from family members.

   6. There will be a sense of security that there are many with us.

  7. Food that is shared does not go to waste.

8. There will be a tendency to give up anything for others.


Disadvantages :


     1. It can be difficult to have privacy in a joint Family. Because every one is living together.

    2. There will be a restriction to do this.

     3. Personal financial status will be affected.

     4. There will be a lot of fights.

     5. A small space can accommodate more people.

   6.Personal desire cannot be fulfilled.


SPONSORSHIP :

"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

புதன், 25 டிசம்பர், 2024

READING SKILL-STORY.

                    DON'T BE GREEDY.

   


    

           In a city, two brothers lived with their mother. The elder earned more than the younger, so he kicked him and the mother out of the house.


    Younger brother used to survive by cutting firewood in the hills.


     One day he saw a lion carved out of stones in the rain and worshiped it as a deity.The statue said, "I know about you. You have honored me. When you come tomorrow, bring a big pot."


          The next day the idol went with the pot and put the pot under my mouth and kept pouring out gold coins from its mouth. When the pot was full I would stop saying that if a coin falls down it would be disastrous.

             



           He also did as the idol said and came home with a pot of gold coins. He became very rich .


          The elder brother thought that he wanted to be rich like his brother. Some place came with a big pot and the lion asked you to help me.


          The lion also agreed and warned as he had said before that gold coins are pouring into the pot.When the pot overflowed, his desire could not be contained.By then the coin had stopped falling.


        The lion screamed that the gold lump was stuck in my throat and he let go of his mouthpiece to pick it up as well.


         His hand was caught and he was struggling to free his hand and by then the pots had disappeared.


     At last he freed his hand and returned home empty-handed to his brother, who was jealous and greedy.He said that I have come to my senses.


        Justice:Don't greedy.

@@@#####@@@#####@@@####@@@


  EDUQUEST ONLINE COURSE :

    


Many online course available here!
Live class available and clear doubts on the spot!
Valuable and money worth!
Easy to join and learn easy!
Course offers! And more...
If you want to join eduquest course,

Use Eduquest course my refferal link :


https://eduquest.courses?wlr_ref=REF-SPX-RSU

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...