ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

வளைகளில் வாழும் மனிதனுக்கு சேதத்தை உண்டுபண்ணும் எலி ! A rat that causes damage to a man living in the arches !

                                      எலிகள் - RATS.

எலிகளின் தோற்றம்

       எலிகள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப வாழப் பழகி விட்டன . எலி பாலூட்டி வகையைச் சார்ந்தது. 

          


   வீடுகளிலும் வயல்களிலும் வலியை தோண்டி வாழும் ஒரு சிறு பிராணி எலி . இது தன் இறையை குறி வைத்து தின்னும் . கிடைக்கும் எந்த உணவையும் உண்ணக்கூடியவை.

   இந்தியாவில் ஒரு மனிதனுக்கான உணவை 6 எலிகள் உண்ணுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


 எலிகளின் புலன் உறுப்பு : 


        எலிகளுக்கு கண் பார்வையை விட. தொடு , கேள் மற்றும் மோப்ப உணர்ச்சிகள் மிகவும் அபார சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

எலிகளின் வகைகள் :


      சுண்டெலி , வெள்ளெலி , மூஞ்சூறு , கல்லெலி  சரவெலி, இந்திய பெருச்சாளி வீட்டெலிவயலெலி என எலிகளில் பல வகைகள் உள்ளன.


பற்கள் :

        



        எலிகளின் பற்கள் வாழ்நாள் முழுவதும் வளரும் . எனவே எலிகள் அவற்றை கடினமான பொருட்களை கடித்து தேய்ந்து போக செய்யும் . மரம் , பிளாஸ்டிக் , அலுமினியம் போன்ற கடினமான பொருட்களையும் கூட எலிகள் எளிதாக கடிக்க முடியும்.


உணவாகும் எலிகள் :

         



       எலிகளை வேட்டையாடுவது பூனை மட்டுமல்ல . பாம்பு , பருந்து , ஆந்தை , காகம் , நாய் , நரி ஆகியவையும் எலிகளை உணவாகப் பிடித்து உண்ணும்.


உணவுப் பொருள் இழப்பு :


     ஒவ்வொரு ஆண்டிலும் உலகம் முழுவதிலும் எலிகள் தின்று அளிக்கும் உணவுப் பொருட்களை மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது .


        எலிகளால் இந்தியாவில் சுமார் 26 ஆயிரம் கோடி கிலோ வரை தானியங்கள் வீணாகின்றன.


       அமெரிக்காவில் மட்டும் ஓராண்டில் சுமார் 140 கோடி ரூபாய் மதிப்புள்ள  உணவு பொருள்களை எலிகள் தின்று விடுகின்றனவாம்.


எலிக்கடிக் காய்ச்சல்  :


             எலிக்கடிக் காய்ச்சல் என்பது எலிகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் கடும் நோயாகும். இந்தக் காய்ச்சல் பாக்டீரியா  தொற்றுகளால் ஏற்படுகிறது. 

         எலியின் சிறுநீர், சளி சுரப்பிகளின்  வழியான பாக்டீரியா தொற்றுகளால் மனிதர்களிடம் பரவும்  நோயாகும்.

      பாக்டீரியாக்கள் தொற்றிய எலி கடித்தாலோ, அல்லது மனித உடலில் ஏற்படும் வெட்டு அல்லது காயத்தாலோ இந்த காய்ச்சல் பரவும்.


உணவாகும் எலிகள் :


       எலிகளை வேட்டையாடுவது பூனை மட்டுமல்ல . பாம்பு , பருந்து , ஆந்தை , காகம் , நாய் , நரி ஆகியவையும் எலிகளை உணவாகப் பிடித்து உண்ணும்.


   நோய்கள் :


    இரைப்பு நோய்பிளேக் போன்ற கொடிய கொள்ளை நோய்கள் இதனாலேயே பரவுகிறது.


லிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்  :


      எலிகளைப் பிடிப்பதற்கும் அழிப்பதற்கு மனிதர்கள் பல வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.


1 . விந்தைப் பொறி :

        விந்தைப் பொறி மூலம் எலிகளை வயல்களிலும் வீடுகளிலும் உயிருடன் பிடித்து அழிக்கலாம். இந்தப் பொறி கூண்டில் கவர்ச்சியான உணவை வைத்து இரவில் வயல்களில் வைத்தால் எலிகள் உள்ளே சென்றவுடன் முன் கதவு கீழே அழுந்தப்படுவதால் அகப்பட்டுக் கொள்ளும்.


2.சிங்க் பாஸ்பைடு  எலி கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. கருமை நிறத் தூளாக பூண்டு வாசனையுடன் இருக்கும்.


3. முதுகு ஒடிக்கும் பொறி :
       

         இந்தப் பொறியில் உணவை உண்ண வரும் எலி, ஒரு சிறிய கொக்கியை அசைப்பதால், விசையிலிருந்து விடுபடும் விசை மிக்க கம்பி எலியின் கழுத்துப் பகுதியிலோ அல்லது முதுகிலோ வேகமாகத் தாக்கி கொன்று விடும்.


4. சிறு வரப்புகள் அமைத்தல் :


         எலிகளைக் கட்டுப்படுத்த வயல்களில் சிறு வரப்புக்களை அதாவது 3/4 அடி அகலமும் 1/2 அடி உயரமும் உள்ள பரப்புகள் அமைக்க வேண்டும். இதனால் எலிகள் வளை தோண்டி பரப்புகளில் வாழ்வதும், பயிர்களை அழிப்பதும் பெரிதும் தடுக்கப்படுகிறது.


5 . மாமிசப் பட்சிகளான ஆந்தை, கழுகு, கோட்டான், பாம்பு, காட்டுப் பூனை, நாய், கீரிப்பிள்ளை, பருந்து முதலியவை எலிகளை கொன்று உண்கின்றன.


SPONSORSHIP :


"This Video Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"



சனி, 8 பிப்ரவரி, 2025

முப்பொருள் : தமிழ் சித்தாந்த மற்றும் இலக்கியத்தில் முப்பொருள் பற்றிய விளக்கம்! Explanation of the Thing in Tamil ideology and literature !

 


            தமிழ் - முப்பொருள்.


        முப்பொருள் என்பது, சைவ சித்தாந்தத்திலும், இலக்கணத்திலும் பயன்படுத்தப்படும் ஒரு சொல். 

       


சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் :

              முப்பொருள் என்றால் பதி, பசு, பாசம் ஆகியவை ஆகும்.

         பதி என்பது இறைவனை (கடவுள்) குறிக்கும், பசு என்பது உயிர்களைக் குறிக்கும், பாசம் என்பது தளைகளைக் குறிக்கும். 

     கடவுள் பேரறிவு உடையது என்றும், உயிர் சிற்றறிவுடையது என்றும் தளை உயிர் அற்றதாகவும் அறியப்படுகிறது.

இலக்கணத்தில் முப்பொருள் :

          முப்பொருள் என்றால் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை ஆகும்.

      தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறும்போது, அவற்றிற்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை விளக்கியுரைக்கின்றார். 

       @  முதற்பொருள் : நிலம், பொழுது என இரு வகைப்படும்.

          நிலம் என்பதில் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவை அடங்கும்.

          பொழுது என்பதில் மாத்திரை, நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அநயம், ஆண்டு, உகம் ஆகியவை அடங்கும்.

     @   உரிப்பொருள் :

உரிப்பொருள் என்பது மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கத்தைக் குறிக்கும்.

      பண்டைத் தமிழ் இலக்கியங்கள் ஐந்து திணைகளின் நிலப்பகுதிகள் சார்ந்த கருப்பொருள்களிலேயே அமைந்திருந்தன. அவற்றில் அந்தந்த நிலப்பகுதிக்குரிய ஒழுக்கங்களும் இடம்பெற்றிருந்தன. இவ்வொழுக்கங்கள் ஐந்தும் அவற்றிற்கான நிமித்தங்கள் (காரணங்கள்) ஐந்துமாக உரிப்பொருள்கள் பத்து உள்ளன .

 இவ்வொழுக்கங்கள் பின்வருமாறு :


    * புணர்தல்: ஒன்றுசேர்தல்

      


     * இருத்தல்: பிரிவைப் பொறுத்து இருத்தல்.

         


      * ஊடல்: தலைவி தலைவன் மீது கோபம் கொள்ளல்

        


      * இரங்கல்: பிரிவு தாங்காது தலைவி வருந்துதல் .

        


      * பிரிதல்: தலைவன் தலைவியைப் பிரிதல் என்பனவாகும்.

         


       ஐந்து நிலத்திணைகளுக்கும் அவற்றின் இயல்புக்கு ஏற்ப உரிப்பொருள்கள் உள்ளன. அவை பின்வருமாறு :

      * குறிஞ்சி: புணர்தலும், புணர்தல் நிமித்தமும்.

      * பாலை: பிரிதலும், பிரிதல் நிமித்தமும்.

       * முல்லை: இருத்தலும், இருத்தல் நிமித்தமும்.

       * மருதம்: ஊடலும், ஊடல் நிமித்தமும்.

        * நெய்தல்: இரங்கலும், இரங்கல் நிமித்தமும்

     @  கருப்பொருள் :       

        கருப்பொருள் என்பது பண்டையத் தமிழ் இலக்கியங்களில் ஐந்து திணைகளின் நிலப்பகுதிகளைக் குறிக்கும்கும்.

கருப்பொருள்கள் எத்தனை என்பது குறித்துத் தெளிவாகக் குறிப்பிடாத தொல்காப்பியம் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி என்று எட்டு வகைளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது. 

      இது பிற்காலத்தில் பதினான்கு என வரையறுக்கப்பட்டது பின்வருமாறு:

1. ஆரணங்கு (நிலத்தெய்வம்)

2. உயர்ந்தோர் (தலைமக்கள்)

3. அல்லோர் (உயர்ந்தோர் அல்லாதவர் அல்லது பொதுமக்கள்)

4. புள் (பறவை)

5. விலங்கு

6. ஊர்

7. நீர்

8. பூ

9. மரம்

10. உணா (உணவு)

11. பறை

12. யாழ்

13. பண்

14. தொழில்.


SPONSORSHIP :


"This Video Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


வியாழன், 30 ஜனவரி, 2025

GRAMMAR - ARTICLE (Primary level) it's very important in sentence.

         GRAMMAR -ARTICAL (primary level).

 

   Articles are a very important part of the sentence and very easy to learn. 

  Vowels -5 : a,e,i,o,u.

Consonants -21 : b,c,d,f,g,h,j,k,l,m,n,p,q,r,s,t,v,w,x,y,z.

 


This is a peacock.



This is an ink bottle.


This is a mango fruit.


This is a flower.


The sun rises in the East.


               These words are ( peacock , inkbottle , mango fruit , flower ) known as articles.Let us Learn how to use them again in a word or sentence.

AN :
 
   @  we use " an " before words that start with the vowel sound of a ,e ,I ,o , u.

@ an apple
     an umbrella
     an orange
     an hour

@ exception :
       *why we use " an" for - hour?
        Why we use " an " for - umbrella?
            Because hour sounds like ox , owl and orange in the beginning (vowel).so we use " an".

         An hour.
         An umbrella .
       

Examples :


    
An elephant lives in the forest.


1. It is an  elephant.
2. She returned after an hour.
3.An umbrella is used in the rainy season.
4.I read an amazing story yesterday .

A : 
 
    We use " a " before words that starts with a consonants sounds.

Example:

       

             I saw a peacock in the ground.

          


             


I draw a unicorn picture.

(Unicorn pronoun as yunicorn. We pronounce as constant sound.)
  So we use " a ".



@ a car .
    a bat .
    a ball .
    a university .

    a unicorn.



@ exception :


      *Why don't use " an " for home?
        Why don't use  " an " university?

We use,


                    A home.
                   A university  .


           Because home , university sounds like  Consonants sound.so we use " A ".


THE :


    we already knows that the is used when we talk of your particular thing the article the is also used before the names of unique things like mountains , rivers , lakes ,seas ,  oceans , famous books and directions.


   Use the before superlative adjectives to indicate the highest degree with in a group.



Mountains :

        



   The Himalayas, The Everest , The Kangchenjunga , The yercaud , The Ooty , The Kodaikanal.....


Rivers / Lakes / Waterfalls :

       



    The Ganga , The Godavari , The Krishna , The yamuna....
     The Chilika lake , The Karuviparai lake , The Lonar lake....
     The Thalayar falls , The Victoria falls , The Hogennakkal falls , The Kutralam falls....


Seas / Oceans :

       



  The Indian Ocean, The Arabic ocean , The pacific Ocean....


Direction :

        



   The East , The West , The North , The South.

Famous books :

         



     The Thirukkural , The Mahabharadha , The Ramayana , The Ponniyin selvan , The Parthibanbkanavu.....


Islands :

          



    The Andaman & Nicobar , The srilanka , The Europe....


Examples :


1.Sanvika sails in the Indian Ocean.


2.The jungle book has won many awards.


3.Harichandra was the honest king.


4.We crossed the river by boat.


5. The sun rises in the East.


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


  










               





ஞாயிறு, 26 ஜனவரி, 2025

தோற்றத்தில் வசீகரிக்கும் விரல்களால் மீட்டெடுக்கும் இசைக்கருவி வீணை!A musical instrument to restore the appearance of the fingers!

 

          இசைக்கருவி - வீணை.


   பண்டைய காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும் கிபி 17ஆம் நூற்றாண்டில் தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது . தஞ்சையை  ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில்தான் இவ்வுருவம் அமையப் பெற்றது.

           


           இசைக்கருவிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வீணை . ஏனென்றால் மற்ற இசைக்கருவிகள் இசையினால் வசீகரிக்கும் . ஆனால் வீணை தன் தனித்துவமான அழகிய தோற்றம், அதில் செதுக்கி இருக்கும் அழகிய வெளிப்பாடுகளினாலும் நம்மை கவர்ந்திழுக்கும். இந்திய இசையின் பல நுட்பங்களை ,  தத்துவங்களை இக்கருவி மூலம் வெளிப்படுத்தலாம்.


நரம்புக் கருவி :

 
     வீணை ஒரு நரம்புக் கருவி .  இது பலா மரத்தினால் செய்யப்படுகிறது. உலோக கம்பிகளில் நான்கு தந்திகள் வாசிப்பதற்கும், மூன்று தந்திகள்  சுருதி மற்றும் தாளத்திற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.


    வீணை சுமார் நான்கரை அடி அகலம் கொண்டிருக்கும் இது நடை சுமார் ஏழு கிலோ முதல் ஒன்பது கிலோ கிராம் வரை இருக்கும்.

 
பயன்படுத்தும் முறை :

 
      தரையில் அமர்ந்து கொண்டு மடியில் வைத்து வலது தொடையில் தாங்கிக் கொண்டு வீணை மீட்டப்படும் அழகே தனி. வீணை கருவிகளை இடது கைவிரல்களால் அழுத்தி தேய்த்து ஸ்வரங்களை எழுப்புவர் . தனியாகப் பக்கத்திலுள்ள மூன்று கம்பிகள் தாளக்கம்பிகள் எனப்படும் . அவற்றை வலது கை சுண்டு விரலாலும் நெளி அல்லது மீட்டு எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்தும் மீட்டுவர்.


 வீணையின் அமைப்பு :


     தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு.


    ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் , குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர்.


வீணையின் வகைகள் :

 
     வீணையில் சரஸ்வதி வீணை , ருத்ர வீணை , விசித்திரவீணை, மகாநாடக வீணை , அன்சவீணை , நவசித்திர வீணை,  சாத்வீக வீணை எனப் பல வகைகள் உள்ளன.

புகழ்பெற்ற வீணை இசை கலைஞர்கள் :


1.  காரைக்குடி சாம்பசிவ ஐயர்.
2.  வீணை சிட்டிபாபு.
3. எஸ் . பாலச்சந்தர்.
4. வீணை தனம்மாள்.
5. வீணை காயத்ரி .
6. ஆர் பிச்சுமணி ஐயர்.
7.ஈமணி சங்கர சாஸ்திரி.


   செவ்வியல் இசையில் வீணையின் பங்கு முக்கியமானது .  உலக அளவில் புகழ்பெற்ற பல வீணை கலைஞர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் வீணை புகழ்பெற்றது . இங்கு கைவினைஞர்கள் பல தலைமுறைகளாக வீணைகளை செய்து வருகின்றனர்.  தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீட்டு முத்திரையை பெற்றுள்ளது.


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication".

சனி, 18 ஜனவரி, 2025

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் உருவாக்கிய பலவகையான அழகியக் கோட்டைகள் - பகுதி 1.Tamil Nadu Forts Part 1.

                 தமிழக கோட்டைகள் ( பகுதி-1)

          தமிழகத்தை மன்னர் பல சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளனர் . அவர்களுள் சேரர், சோழர் , பாண்டியர் , பல்லவர் , நாயக்கர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.                                

          சோழர்கள் , பாண்டியர்கள் , நாயக்கர்கள் ஆகியோர் தமிழகத்தில் அற்புதமான கோட்டைகளைக் கட்டினார்கள். டச்சு,  பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் போன்ற அயல் நாட்டினரும் நமது நாட்டிற்குள் நுழைந்து கோட்டைகளைக் கட்டியுள்ளனர்.

            



       அக்கால கட்டடக்கலையின் நினைவுச் சின்னங்களாக கோட்டைகள் விளங்குகின்றன. வரலாற்று இடங்களாகவும் பாதுகாக்கப்படுகிறது. அக்கால கோட்டைகளில் சில கோட்டைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன .


கோட்டைகளின் வகைககள் :


தமிழ்நாட்டில் உள்ள கோட்டைகள் , 

       அ. சங்ககாலக் கோட்டைகள், 

       ஆ. பேரரசுக் கோட்டைகள், 

       

       இ. சிற்றரசர்களின் கோட்டைகள்,

        ஈ.  பாளையக் காரர்களின் கோட்டைகள்,

         உ.  ஐரோப்பிய/ சேதுநாட்டுக் கோட்டைகள் 

      எனப்  பல வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. 

       எல்லைப்புறங்களில் காடுகளில் படைப்பற்று அல்லது படைவீடு என அழைக்கப்படும் கோட்டைகள் அமைக்கப்பட்டன. 
செலவுக்காக மக்களிடம் "கோட்டைப் பணம்" என்று வரி வசூலிக்கப்பட்டது.

    கருங்கற்களால் ஆன கோட்டைகள்,

    மண்ணால் ஆன கோட்டைகள்,

    மலையால் ஆன மலைக்கோட்டைகள்,

    செங்கற்களால் ஆன கோட்டைகள் என கோட்டைகள் பலவாறாக அமைக்கப்பட்டிருந்தது.

         தமிழகத்தில் பல பகுதிகளில் பழைய கோட்டைகள் உள்ளன . தமிழக சுற்றுலாக்களின் முக்கிய இடங்களாக விளங்குகின்றன . அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

 
1.புனித ஜார்ஜ் கோட்டை :


              இந்தியாவில் பிரித்தானியர்களின்  முதலாவது கோட்டையாகும்.
        இந்த கோட்டை சென்னை கடற்கரை பகுதியில் உள்ளது . இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் 1639 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ல் கட்டப்பட்டது .

          



     ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், அமைச்சர் அலுவலகங்கள்,

 சட்டமன்றம்   ஆகியவை உள்ளன.


      கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றிலும்  அகழி உள்ளதை இன்றும் காணலாம். இவை தவிர புனித மேரி கிறித்தவ ஆலயம்கிளைவ் மாளிகை, மற்றும் கோட்டை அருங்காட்சியகம் ஆகிய மூன்று முக்கியக் கட்டடப் பகுதிகள் இங்கு உள்ளன.


2 . புனித டேவிட் கோட்டை :


      இந்தியாவின் சோழ மண்டலக் கடற்கரைப் பகுதியில் உள்ளது.தமிழகத்தில்  கடலூர் நகரத்திற்கு அருகில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.

         



    இக்கோட்டை1650 ஆம் ஆண்டு மராட்டியரிடம் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் வாங்கப்பட்டது. 1756 ஆம் ஆண்டு ராபர்ட் கிளைவ் புனித டேவிட் கோட்டையின் ஆளுனராகப் பதவி வகித்தார்.


    கோட்டை, மற்றுமுள்ள இடங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்காக விநோதமான வழிமுறை கையாளப்பட்டது.  கோட்டையில் இருந்து வானை நோக்கி ஒரு பீரங்கிக் குண்டு சுடப்பட்டு, அந்த பீரங்கிக் குண்டு விழுந்த இடம் வரை கோட்டைக்குச் சொந்தமான பகுதியாக கைக்கொள்ளப்பட்டது. இன்றும் அந்தக் கிராமங்கள் ‘பீரங்கிக்குண்டு கிராமங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன.

         



     இது ஒரு பிரிட்டீஷ் கோட்டையாகும்.தற்போது பராமரிப்பின்றி வெள்ளி கடற்கரைக்கு அருகில் உள்ளது.

3. வேலூர் கோட்டை :


       வேலூர் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் 1566 ஆம் ஆண்டு  விஜய நகர பேரரசு காலத்தில் நாயக்கர் மன்னரான  இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்முன நாயக்கரால்   கட்டப்பட்டு தற்போது வரைப் பயன்பாட்டில் உள்ளது.ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை  133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

       



        தமிழ்நாட்டின் கோட்டைகளில் வேலூர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக கருதப்படுகிறது. கருங்கற்களால் கட்டப்பட்ட அழகியக் கோட்டையாகும்.


        191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளதுஇந்த அகழி ஆயிரக்கணக்கான முதலைகளைக் கொண்டிருப்பதால் படையெடுப்பவர்கள் இதனைக் கண்டு அஞ்சினர்.


       வேலூர் கோட்டை ராணுவ கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் . இது இரட்டை கோட்டைகளாக உருவாக்கப்பட்டுள்ளது.     1799 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானிய குடும்பம் ஆங்கிலேயர்களால் இங்கு சிறை வைக்கப்பட்டது . 1806 ஆம் ஆண்டில் வேலூர் கோட்டையில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் கிளர்ச்சி இங்குதான் நடைபெற்றது.

           


        வேலூர் கோட்டைக்கு புகழ் பெற்ற ஜலகண்டேஸ்வரர் ஆலயம் , தேவாலயம் , மசூதி , அருங்காட்சியகம் மற்றும் பல அரசு அலுவலகங்கள் உள்ளன. வேலூர் கோட்டையின் உள்ளே ஹைதர் மஹால்,  திப்பு மஹால் , பேகம் மஹால் , கண்டி மஹால் , பாதுஷா மஹால் என ஐந்து முக்கியமான மஹால்கள் காணப்படுகின்றன.

      இக்கோட்டை வரலாற்று சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.இக்கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறித்தவ தேவாலயம், பள்ளிவாசல் ஆகியவை உள்ளன.


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


 


வியாழன், 9 ஜனவரி, 2025

நோயை உண்டு பண்ணும் கொசு ! A disease-causing mosquito!

               

                 கொசு (Mosquito)

   

      உருவில் மிகச் சிறிய அளவில் உள்ள கொசு தான் பலரின் தூக்கத்தை கெடுக்கிறது.நம் காது ஓரம் ' கொய்ங்... கொய்ங்...'என்று சத்தமிடும்.நம்மை கடித்து துன்புறுத்தும்.

          



       இதன் ஆயுள் காலம் சுமார் 15 நாட்கள் முதல் 25 நாட்கள் ஆகும். உலகில் மற்ற பூச்சி வகைகளை காட்டிலும் கொசு தான் மனிதனுக்கு அதிக தீமையை செய்கிறது.உலகில் சுமார் 2000 வகையான கொசுக்கள் உள்ளன.


 உடல் அமைப்பு :

 
        மெல்லிய உடல் கொண்ட கொசுக்கள் ஓர் இணை இறக்கைகளையும் , மூன்று இணை நீண்ட கால்களையும் கொண்டது.

நோய்க்கிருமிக்கான காரணி :

       


         கொசு ஊசி போன்ற மெல்லிய உறுப்பின் மூலம் நம் தோலுக்குள் குத்துகின்றன . அந்த நேரத்தில் நம் இரத்தத்தில்  உமிழ்நீரை செலுத்திவிட்டு நம் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்கின்றன . அந்த உமிழ் நீர் உள்ள கிருமிகளே நோய்க்கு காரணமாகின்றன.

கொசு உற்பத்தி இடங்கள் :

        


 
     தேங்கிய நீர்நிலைகள் , வடியாத மழைநீர் , திறந்தவெளி சாக்கடைகள் , மூடப்படாத நீர் இருக்கும் பாத்திரங்கள் ,  தெரு குப்பைத் தொட்டிகள் போன்ற இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. தேங்கி நிற்கும் சாக்கடை நீரில் மட்டுமல்ல ; நல்ல நீரிலும் கூட கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

ஆண் கொசு :

        



     பொதுவாக ஆண் கொசுக்கள் தாவரச்சாறு , பழ ரசம் ஆகியவற்றை ஆண் கொசுக்கள் உறிஞ்சி உண்ணும் .


பெண் கொசு :

 
       நம்மை கடித்து ரத்தத்தை உறிஞ்சுவது பெண் கொசுக்கள் தான். பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிடமிருந்தும் ரத்தத்தை உறிஞ்சும். இவை ரத்தத்தை உறிஞ்சும் என்றாலும் ரத்தம் முதன்மையான உணவல்ல.

          


         முட்டைகளை உருவாக்கத் தேவையான புரதத்தைப் பெறவே பெண் கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறது. அதனால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழ்கின்ற  இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீரில் மட்டுமே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது.

ஏடிஸ் கொசு : 

       ஏடிஸ் அல்போபிக்டசு  என்னும் வீரியமான இனம் தென் வட அமெரிக்காவிலிருந்து பயன்படுத்தப்படாத டயர் வணிகத்தின் வழி பரவியுள்ளது.


    யோகஃகன் வில்லெம் மெய்கன் என்பவரால் 1818 இல் முதன் முதலில் விளக்கப்பட்டு அவர் இட்ட பெயர்தான் ஏடிஸ் ஆகும் . இச்சொல் கிரேக்க மொழி . 

 
            இவ்வினக் கொசு கருமையான டெங்கு காய்ச்சல் , சிக்கன்குனியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை உண்டாக்குகின்றன . ஏடிஸ் கொசுக்களின் உடலிலும் கால்களிலும் கருப்பும் வெள்ளையுமான குறிகள் காணும்படியாக இருக்கும் . இவை பகலில் மட்டுமே உலா வரும். காலையிலும் மாலை சாயங்கால பொழுதிலுமே அதிகமாகக் கடிக்கிறது.

அனாபிலஸ் கொசு :

 
       இது ஒரு பெண் கொசு . இது உலகின் சில பகுதிகளில் மனித இறப்பை ஏற்படுத்தும் மலேரியா என்னும் தொற்று நோயை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குக் கடத்துகிறது. 

         மலேரியா , யானைக்கால் நோய் , ஃபைலேரியா போன்ற நோய்களை இவை பரப்புகின்றன.


வீட்டில் பின்பற்றக்கூடிய எளிய கொசு விரட்டி:


       1. எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றில் கிராம்பை சொருகி வைத்தால்  கொசு தொல்லை நீங்கும்.

      2.வேப்பிலை , நொச்சி , ஆடுதொடா இலை , குப்பைமேனி  இவற்றை பொடியாக்கி வாசனைக்காக சிறிது சாம்பிராணி   தூபம் போட்டால் கொசுவை விரட்டலாம்.
      அல்லது இவற்றைக் கொண்டு வில்லைகள் உருவாக்கி ஏற்றி வைக்கலாம்.
       ( புகை ஒவ்வாமை , ஆஸ்துமாத் தொல்லை உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டாம்.)


      3. சுத்தமான வேப்ப எண்ணெய் வாங்கி ஒரு அகல் தீபம் ஏற்றி எல்லா இடங்களிலும் காட்டி பின் ஒரு மூலையில் ஏற்றி வைத்தால் கொசு தொல்லை இருக்காது.

     



    இயற்கை முறையில் இவற்றைப் பின்பற்ற முயற்சிப்பது நமக்கும்,  சுற்றுச்சூழலுக்கும் நன்மை தரும்.


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

புதன், 1 ஜனவரி, 2025

பஞ்சகவ்யம் நமக்கு முன்னோர்கள் கொடுத்த வரம்! Panchakavyam is a gift given to us by our ancestors.

                  பஞ்சகவ்யம்.


 பஞ்சகவ்யம் பெயர்காரணம் :

       பஞ்சகவ்யா - பஞ்ச + கவ்யா.

பஞ்ச என்பது ஐந்து ஆகும். பசுவிலிருந்து கிடைக்கும் சாணம்,கோமியம்,பால்,தயிர் மற்றும் நெய் ஆகிய ஐந்து வகையான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவதால் இப்பெயர் பெற்றது.


பஞ்சகவ்யம் :

                
         




 @ பஞ்சகவ்யம் ஆன்மிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.     

                   @ பஞ்சகவ்யம் அல்லது பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு நீர்மக்கலவை.

       பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.


இந்துக்களின் வழிபாடு :

                



     பஞ்சகவ்யம் அபிசேகப் பொருள்களில் ஒன்றாக தெய்வச் சிலைகளுக்கு அபிசேகம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. அதன் பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.. இதனை பக்தர்கள் உட்கொள்கிறார்கள்.
      சுவாமி சிலைக்கு பஞ்சகவியத்தால் அபிசேகம் செய்யப்படும் போது வெளிப்படும் கதிர்கள் உடல் மற்றும் மனநோயைப் போக்கும் என இந்துக்கள் நம்புகின்றனர்.


இயற்கை வேளாண்மை :

             



         இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் பொருளாகவும்(உரம்) பயன்படுத்தப்படுகிறது.

பயன்படுத்தும் முறை :


ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் கைத்தெளிப்பான் கொண்டு பயிர்களுக்கு தெளிக்கலாம்.


மருத்துவ முக்கியத்துவம்:


* தூய்மைப்படுத்தல்பஞ்சகவ்யம் நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே, பஞ்சகவ்ய விளக்கு ஏற்றுவது சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும்.
*
தோல் நோய்கள்:  பஞ்சகவ்ய விளக்கின் புகை தோல் நோய்களை குணப்படுத்தும் என நம்பப்படுகிறது.

* மன அமைதி:  பஞ்சகவ்ய விளக்கின் புகை மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியைத் தரும் என நம்பப்படுகிறது.

பஞ்சகவ்யத்தின் நன்மைகள் :

         



1 . பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 
2 . பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.

    
3 . பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும் உள்ளது.


4.சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத
வகையில் இயற்கை வழியில் மிகவும் பயனுள்ளது.


5 . பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.


6 . ஆயுர் வேத வைத்தியத்தில் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

7.மண்ணுக்கு ஊட்டமளிக்கிறது.


பஞ்ச கவ்ய விளக்கு :

         



   கார்த்திகை, அமாவாசைபௌர்ணமி போன்ற சிறப்பான நாட்களிலோ, வெள்ளிக் கிழமையிலோ பஞ்ச கவ்ய விளக்கு ஏற்றினால் சிறப்பான பலனைப் பெறலாம்.இவ்விளக்கு ஏற்றுவதால்...

         



1 . தீய சக்திகள் நம்மை விட்டு அகலும்.

2. வீட்டின் எதிர்மறை ஆற்றல் அகலும்.
3.ஹோமம் செய்த பலன் உண்டு.
4. பணப்புழக்கம் அதிகரிக்கும்.
5.லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
6. கடன் பிரச்சினைக்கு தீர்வு விரைவில் உண்டாகும்.
     என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவுகிறது.


SPONSORSHIP :

"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...