الأربعاء، 27 نوفمبر 2024

தமிழ்-ஓரெழுத்து ஒருமொழி(ஒற்றை எழுத்துச் சொற்கள்)-One letter is one language.(Single letter words.)

                ஓரெழுத்து ஒருமொழி.

    

       எழுத்துக்கள் சேர்ந்து சொல்லை உருவாக்குகின்றன.அவை ஓரெழுத்து சொல்லாகவோ,பல எழுத்துக்கள் சேர்ந்தோ சொல்லை உருவாக்குகிறது.

        எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து பொருள் தந்தால் அது "சொல்" எனப்படும்.

       மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். மொழியை (சொல்லை) ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி என மூன்று வகையாகக் கூறலாம்.

          

ஓரெழுத்து ஒருமொழி :

            ஓரெழுத்து ஒருமொழி என்பது 'ஒற்றை எழுத்துச் சொற்கள்' என்று பொருள்படும். அதாவது ஒற்றை எழுத்தாக நின்று பிற பொருளைச் சுட்டும் சொற்களாக அமைகிறது.

        ஓரெழுத்து ஒருமொழியானது ஓர் எழுத்து தன்னைக் குறிக்கும்போது எழுத்தாகிறது; அந்த எழுத்தே பிற பொருளைச் சுட்டும் போது சொல்லாகிறது.

 ஓரெழுத்து மொழி எண்ணிக்கை :

       தமிழில் 52 ஒற்றை எழுத்துச் சொற்கள் பட்டியலிடப் பட்டிருக்கின்றன.


சுட்டு எழுத்து : அ,இ,உ.

  சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ அல்லது மனிதரையோ சுட்டி காட்டும் பொருளில் ரும்.

     "அ" - அந்த யானை.

    



  

 "இ" - இந்த ஆறு.



 "உ" - உந்த என்ற சுட்டுப் பொருள்.

      தற்காலத்தில் 'உ' என்ற சுட்டெழுத்து தமிழ்நாட்டில் வழக்கில் இல்லை.

         இந்த "உ" என்ற சுட்டெழுத்து யாழ்ப்பாணத் தமிழ் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் தற்போதும் தொடர்ந்து இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
          ' உ' என்ற சுட்டு பல பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது. சேய்மைக்கும் அண்மைக்கும் இடையில் உள்ளவற்றைக் குறிக்க 'உ' என்ற சுட்டெழுத்து பயன்பட்டது. நடுவிலுள்ள பொருள்களையும், உயரத்திலுள்ள பொருள்களையும், பின்பக்கம் உள்ள பொருள்களையும் சுட்ட 'உ' என்ற எழுத்துப் பயன்படும்.
எ.கா : உம்பர்- மேலே என்ற பொருள் தரும்.


         

ஓரெழுத்துச் சொற்பட்டியல் :


1. அ -'அந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
2. ஆ - மாடு.
3. இ - 'இந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
4. ஈ - ஒரு வகைப் பூச்சி, அழிவு.
5. உ - 'உந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
6. ஊ - ஊன், இறைச்சி.
7. எ - 'எந்த' என்ற பொருள்படும் கேள்விப்பெயர்.
8. ஏ - ஏவுதல், அம்பு.
9. ஐ - நுட்பம், அழகு.
10. ஓ - சென்று தங்குதல், மதகு நீர் தங்கும் பலகை.
11. க - நெருப்பு.
12. கா - சோலை.
13. கு - பூமி.
14. கூ - கூப்பிடு.
15. கை - கரம்.
16. கோ - அரசன்.
17. கௌ - 'கௌவு' என்று ஏவுதல்.
18. சா - இறத்தல், 'சாவு' என்று ஏவுதல்.
19. சே - சிவப்பு.
20. சோ - மதில்.
21. தா - 'கொடு' என்று ஏவுதல்.
22. தீ - நெருப்பு.
23. து - உண் என்னும் ஏவல்.
24. தூ - தூய்மை.
25.  தை - தையல் எனப்படும் பெண், 'தை' என்று ஏவுதல்.
26. ந - சிறப்பு.
27. நா - நாக்கு.
28. நீ - முன்னிலை ஒருமைப் பெயர்
29. நூ - எள்.
30. நே - நேசம்.
31. நை - நைதல்.
32. நொ - மென்மை.
33. நோ - வலி.
34. நௌ - மரக்கலம், கப்பல்.
35. பா - பாடல்.
36. பி - அழகு.
37. பீ - கழிவு.
38. பூ – மலர்.
39. பே - அச்சம்.
40.  பை - பசுமை.
41. போ - 'செல்' என்று ஏவுதல்.
42. மா - ஒரு வகை மரம்.
43. மீ - மிகுதியானது.
44. மூ - மூன்று.
45. மே - மேன்மை.
46. மை - மசி (ink).
47. மோ - மொள்ளுதல்.
48. யா - 'யாவை' என்ற பொருள்படும் கேள்விப்பெயர்.
49. வா - 'வா' என்று அழைத்தல்.
50. வி - விசை.
51. வீ – பறவை.
52. வை - 'வை' என்று ஏவுதல்.


              இச்சொற்களுக்கு ஒரு பொருள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர அந்த ஒவ்வொரு ஓரெழுத்து ஒரு மொழிக்கும் தமிழ் அகரமுதலிகள் கூறும் பொருள்கள் பல உள்ளன.மேலும் பொருள்கள் அறிய தமிழ் அகராதியை பயன்படுத்துங்கள்.

sponsorship :

  "This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


    

السبت، 23 نوفمبر 2024

PART-2 : தமிழ்நாட்டில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள் சில.Some Wildlife Sanctuaries in Tamil Nadu.

         வனவிலங்கு சரணாலயங்கள்(4-8).

தமிழகத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள் மொத்தம் 17 உள்ளன. இவற்றில் பறவைகளுக்காக 7 சரணாலயங்களும்விலங்குகளுக்காக 8 சரணாலயங்களும் மற்றும் ஆராய்ச்சிப் பூங்காக்கள் இரண்டும் அடங்கும். 

8 வனவிலங்கு சரணாலயங்கள் :

1.முதுமலை வனவிலங்கு சரணாலயம்.

2.களக்காடு வனவிலங்கு சரணாலயம்.

3.வல்லநாடு வெளிமான் வனவிலங்கு சரணாலயம்.

4.சாம்பல்நிற அணில் வனவிலங்கு சரணாலயம்.

5.சத்திய மங்கலம் வனவிலங்கு சரணாலயம

6.முக்கூர்த்தி விலங்குகள் சரணாலயம்.

7.முண்டந்துறை புலிகள்  சரணாலயம்.

8.மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கள் சரணாலயம்.

      தமிழகத்திலுள்ள வனவிலங்குகள் சரணாலயங்களில் 3 வனவிலங்கு சரணாலயங்கள் பார்க்கப்பட்டது.இதில் மீதமுள்ள 5 சரணாலயங்கள்  பற்றி காணலாம்.


4. சாம்பல்நிற அணில் வனவிலங்கு சரணாலயம்.

          


* விருதுநகர் மாவட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1988.
       *அணில்களுக்கு என்று உள்ள தனிச் சரணாலயம் இதுதான்.
        *இளஞ்சிவப்பு மூக்கும் அடர்த்தியான முடிகளுடன் கூடிய நீண்ட வாழ் சாம்பல் நிற முதுகு பகுதி என பார்க்க பெரிய பணியை போல் இருக்கக்கூடியது இந்த அணில்.
        *அணிலை தவிர இங்கு புலி, சிறுத்தை,சிங்கவால் குரங்கு, தேவாங்கு உள்ளிட்ட பல விலங்குகளையும் 100க்கும் மேற்பட்ட பறவை இனங்களையும் இங்குப் பார்க்க முடியும்.
       * இச் சரணாலயத்தில் ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

5.சத்திய மங்கலம் வனவிலங்கு சரணாலயம் :

           


         * ஈரோடு மாவட்டம்,தொடங்கப்பட்ட ஆண்டு 2008.
        * இது புலிகளுக்கு என்று பெயர் பெற்றது.இங்கே சுமார் 50-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன.
         * புலிகளைத் தவிர சுமார் 800 யானைகளும் நூற்றுக்கணக்கான பறவைகள், பல இன பட்டாம்பூச்சிகள் ஊர்வனங்கள் மற்றும். பல விலங்குகள் இக்காட்டில் உள்ளன.

6 . முக்கூர்த்தி விலங்குகள் சரணாலயம்.

     * நீலகிரி பீடபூமியில் 78.46 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.                                          * மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகும்.

      

          நீலகிரி தஹ்ர்.

          * நீலகிரியில் பொதுவாகக் காணப்படும் முக்கிய கல் இனங்களில் ஒன்றான நீலகிரி தஹ்ரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த பூங்கா உருவாக்கப்பட்டது. நீலகிரி உயிர்க்கோளத்தின் ஒரு பகுதி,முக்கூர்த்தி தேசியப் பூங்காவாகும்.
    * தாவரங்கள் மற்றும் கவர்ச்சியான விலங்கினங்களால் அமையப்பெற்று தமிழ்நாட்டில் அதிகம் பார்வையிடப்படும் தேசிய பூங்காக்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

7.முண்டந்துறை புலிகள்  சரணாலயம்.

        


     *மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளதி.

      * 1983-84 களில் இப்பகுதிகளில் களப்பணிகள் மேற்கொண்டு இந்த இடத்தை புலிகள் காப்பகமாக அறிவிக்க பரிந்துரை செய்தார். இதன் விளைவாக ஏப்ரல் 1988ல் இப்பகுதியும், களக்காடு காட்டுயிர் சரணாலயமும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

        * இது இந்தியாவின் 17-ஆவது புலிகள் காப்பகமாக களக்காடு முண்டன்துறை அமைந்துள்ளது.                                
     * இங்கு புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன.  
     *தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காப்பகம் ஆகும்.

8.மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கள் சரணாலயம்.

          


 *இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

        * இது 21 சிறிய தீவுகளையும், மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப் பாறைகளையம் உள்ளடக்கிய பகுதியாகும்.
       * தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து 1 முதல் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா, தூத்துக்குடியில் இருந்து தனுட்கோடி வரையிலான கடற்பகுதியில் 160 கி.மீ நீளத்திற்குப் பரந்துள்ளது. 
        * இப்பூங்காவானது பல்வகை தாவரங்களையும், விலங்குகளையும்  கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் கொண்டுள்ளது.       பூங்காவின் உள்ளே பொதுமக்கள் கண்ணாடிப் படகுகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். 

PART -1  :  1-3 content link :

     https://lifechange4777.blogspot.com/2024/11/some-wildlife-sanctuaries-in-tamil-nadu.html


Sponsorship :

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"



الجمعة، 15 نوفمبر 2024

கங்காரு-ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு.Kangaroo- Australia's national animal is the kangaroo.

                  உயிரினம் அறிவோம்!!!                                                                    *** கங்காரு***  

     கங்காருக்கள் மேக்ரோபோடிடே குடும்பத்தைச் சேர்ந்த மார்சுபியல்கள். பொதுவான பயன்பாட்டில், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மிகப்பெரிய இனங்களான சிவப்பு கங்காரு , ஆன்டிலோபின் கங்காரு , கிழக்கு சாம்பல் கங்காரு மற்றும் மேற்கு சாம்பல் கங்காரு ஆகியவற்றை விவரிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது . இது ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவைச் சார்ந்தவை .

           


   மிகப்பெரிய இனங்கள் "கங்காருக்கள்" என்றும் சிறியவை பொதுவாக "வாலபீஸ்" என்றும் அழைக்கப்படுகின்றன. 

       ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு . கங்காருக்கள் பயந்த சுபாவம் கொண்டவை. ஆனால் தன்னை தாக்க ஏதேனும் விலங்குகள் வந்தால் எதிர்த்து நின்று கடுமையாக போராடும்.

அழிந்து வரும் கங்காரு :

        கங்காருகள் வயல்களில் வளரும். பயிர்களை அழித்து சேதப்படுத்திவிடும். அதனால் கங்கார்களை பலர் வேட்டையாடுகின்றனர் . ஆஸ்திரேலியாவில் கங்கார்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது . அதனால் கங்காருவை வேட்டையாடக்கூடாது என்று அந்த நாடு தடை விதித்துள்ளது.

கங்காருவின் வளர்ச்சி :

       கங்காரு 2 மீட்டர் உயரம் உடையது. கங்காரு குட்டி போட்டு பால் கொடுக்கும் . குட்டி பிறக்கும் போது மூன்று சென்டிமீட்டர் நீளம் மட்டுமே இருக்கும்.

 கங்காருவின் இளமைப் பருவம்:        

         கங்காருக்குட்டி பிறந்தவுடன் தன் தாயின் வயிற்றில் உள்ள பைபிள் ஊர்ந்து சென்று தங்கிவிடும் .அது சுமார் ஆறு மாத காலம் வரை தாய்ப்பாலை உண்டு வளரும்.

       

                          ஒரு நாய்க்குட்டி அளவுக்கு வளர்ந்த பின் கங்காரு குட்டி தாய் பையை விட்டு இறங்கிவிடும். அப்போது அது தானாகவே புல்லை மேயத் தொடங்கும்.


கங்காரு உடலமைப்பு : 

        கங்காருக்கு உள்ள நான்கு கால்களில் முன்பக்கத்தில் இரண்டு கால்கள் உள்ளன இவை மிகச் சிறியவை. இதன் வயிற்றுப் பகுதியில் பை போன்ற அமைப்பு காணப்படும்.

        கங்காரு உடலமைப்பு கங்காருக்கு உள்ள நான்கு கால்களில் முன்பக்கத்தில் இரண்டு கால்கள் உள்ளன . இவை மிகச் சிறியவை. இதன் வயிற்றுப் பகுதியில் பை போன்ற அமைப்பு காணப்படும்.

      குதிப்பதற்கு ஏற்ற பெரிய பாதங்கள், சமநிலைக்கு நீண்ட தசை வால் மற்றும் சிறிய தலை ஆகியவை உள்ளன.

 உணவு : 

        வலிமையான கங்காரு விரும்பி சாப்பிடுவது புல் , தழைகள் ஆகியவை ஆகும்.

        


கங்காருவின் வகைகள்: 

        60க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன . அவற்றில் ஒருவகை கங்காரு முயல் போல மிகச் சிறியதாக இருக்கும். மரங்களின் மேல் வாழ்கின்ற கங்காரு வகையும் உள்ளது.

      மரங்களின் மேல் வாழ்கின்ற கங்காரு வகையும் உள்ளது. 

   காட்டு கங்காருக்கள்  இறைச்சிக்காகவும். தோலுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.


Sponsorship:

"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"



الجمعة، 8 نوفمبر 2024

PART -1 தமிழ்நாட்டில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள் சில.Some Wildlife Sanctuaries in Tamil Nadu.

                                  சரணாலயங்கள்!!!

        விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாக்கும் இடத்தை தான் சரணாலயங்கள் என்கிறோம். 

 

தமிழக சரணாலயங்கள் :

 


           தமிழகத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள் மொத்தம் 17 உள்ளன. இவற்றில் பறவைகளுக்காக 7 சரணாலயங்களும், விலங்குகளுக்காக 8 சரணாலயங்களும் மற்றும் ஆராய்ச்சிப் பூங்காக்கள் இரண்டும் அடங்கும். 

        தமிழகத்திலுள்ள வனவிலங்குகள் சரணாலயங்களில் சில...இதில் 3 வனவிலங்கு சரணாலயங்கள் பற்றி காணலாம்.

       கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சந்திப்பில் வனவிலங்கு சுற்றுலா தலங்கள் தமிழக சுற்றுலாவினை சிறப்பிக்கின்றன.

 

1.முதுமலை தேசிய வனவிலங்கு சரணாலயம்:

             


      1940 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் வனவிலங்கு சரணாலயம் ஆகும் .

          சமீபத்தில் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட முதுமலை தேசிய பூங்கா மோயார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

         இது பாலூட்டிகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் போன்றவை உள்ளன.

        இந்திய யானைகள், வங்காளப்புலி, நாட்டு எருமைகள்,கவுர் மற்றும் இந்திய சிறுத்தைகள் போன்ற பல அழிந்து வரும் விலங்குகள் உள்ளன. 

 

2.களக்காடு வனவிலங்கு சரணாலயம் :

             

            

         களக்காடு காட்டுயிர் சரணாலயம் ஏற்படுத்தப்பட்டது 1977ல். திருக்கரங்குடி மற்றும் களக்காடு சரகங்களை உள்ளடக்கிய இப்பகுதி (253 சதுர கி.மீ) சோலைமந்திகளின் (சிங்கவால் குரங்கு) பாதுகாப்பிற்காகவே இப்பகுதி சரணாலமாக அறிவிக்கப்பட்டது.

 மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமாக உள்ளது.

          இது புலிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்கு புகழ்பெற்றது.
          திருநெல்வேலியில் உள்ள இந்த சரணாலயத்தில் சிங்கவால் குரங்குகள், நீலகிரி லங்கூர், லாங்கூர், நீலகிரி தஹர், சாம்பார், சோம்பல் கரடி, கவுர், யானை, பறக்கும் அணில், சிறுத்தை, காட்டு நாய் மற்றும் பாங்கோலின் ஆகியவை உள்ளன.
          களக்காடு வனவிலங்கு சரணாலயம் 1976 ஆம் ஆண்டு சிங்கவால் குரங்குகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது.               இது தெற்கு இடையக மண்டலத்தில் அமைந்துள்ளது.

 

3.வல்லநாடு வெளிமான் வனவிலங்கு சரணாலயம்:

       


     வல்லநாடு வெளிமான் காப்பகம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த காப்பகம் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வெளிமான் இனத்தைக் காப்பதற்காக அமைக்கப்பட்டதாகும்.  திருநெல்வேலியிருந்து 18 கி.மீ தொலைவில் வல்லநாடு என்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது.

     19-ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் வெளிமான்கள் அதிகமாக இருந்தன. அதன் பின்னர், அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைய ஆரம்பித்தது. தமிழகத்தில் கோடியக்கரை, சத்தியமங்கலம், நாகப்பட்டினம் மற்றும் வல்லநாடு ஆகிய 4 இடங்களில் மட்டுமே வெளிமான்கள் உள்ளன.

         


      நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகளையும் இங்கு காண முடியும் .

       சுமார் 60 வகையான வண்ணத்துப்பூச்சிகளையும் இங்கே கண்டு மகிழலாம்.


SPONSORSHIP :

 
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

        




எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...