சரணாலயங்கள்!!!
விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாக்கும் இடத்தை தான் சரணாலயங்கள் என்கிறோம்.
தமிழக சரணாலயங்கள் :
தமிழகத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள் மொத்தம் 17 உள்ளன. இவற்றில் பறவைகளுக்காக 7 சரணாலயங்களும், விலங்குகளுக்காக 8 சரணாலயங்களும் மற்றும் ஆராய்ச்சிப் பூங்காக்கள் இரண்டும் அடங்கும்.
தமிழகத்திலுள்ள வனவிலங்குகள் சரணாலயங்களில் சில...இதில் 3 வனவிலங்கு சரணாலயங்கள் பற்றி காணலாம்.
கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சந்திப்பில் வனவிலங்கு சுற்றுலா தலங்கள் தமிழக சுற்றுலாவினை சிறப்பிக்கின்றன.
1.முதுமலை தேசிய வனவிலங்கு சரணாலயம்:
1940 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் வனவிலங்கு சரணாலயம் ஆகும் .
சமீபத்தில் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட முதுமலை தேசிய பூங்கா மோயார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இது பாலூட்டிகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் போன்றவை உள்ளன.
இந்திய யானைகள், வங்காளப்புலி, நாட்டு எருமைகள்,கவுர் மற்றும் இந்திய சிறுத்தைகள் போன்ற பல அழிந்து வரும் விலங்குகள் உள்ளன.
2.களக்காடு வனவிலங்கு சரணாலயம் :
களக்காடு காட்டுயிர் சரணாலயம் ஏற்படுத்தப்பட்டது 1977ல். திருக்கரங்குடி மற்றும் களக்காடு சரகங்களை உள்ளடக்கிய இப்பகுதி (253 சதுர கி.மீ) சோலைமந்திகளின் (சிங்கவால் குரங்கு) பாதுகாப்பிற்காகவே இப்பகுதி சரணாலமாக அறிவிக்கப்பட்டது.
மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமாக உள்ளது.
இது புலிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்கு புகழ்பெற்றது.
திருநெல்வேலியில் உள்ள இந்த சரணாலயத்தில் சிங்கவால் குரங்குகள், நீலகிரி லங்கூர், லாங்கூர், நீலகிரி தஹர், சாம்பார், சோம்பல் கரடி, கவுர், யானை, பறக்கும் அணில், சிறுத்தை, காட்டு நாய் மற்றும் பாங்கோலின் ஆகியவை உள்ளன.
களக்காடு வனவிலங்கு சரணாலயம் 1976 ஆம் ஆண்டு சிங்கவால் குரங்குகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இது தெற்கு இடையக மண்டலத்தில் அமைந்துள்ளது.
3.வல்லநாடு வெளிமான் வனவிலங்கு சரணாலயம்:
வல்லநாடு வெளிமான் காப்பகம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த காப்பகம் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வெளிமான் இனத்தைக் காப்பதற்காக அமைக்கப்பட்டதாகும். திருநெல்வேலியிருந்து 18 கி.மீ தொலைவில் வல்லநாடு என்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது.
19-ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் வெளிமான்கள் அதிகமாக இருந்தன. அதன் பின்னர், அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைய ஆரம்பித்தது. தமிழகத்தில் கோடியக்கரை, சத்தியமங்கலம், நாகப்பட்டினம் மற்றும் வல்லநாடு ஆகிய 4 இடங்களில் மட்டுமே வெளிமான்கள் உள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகளையும் இங்கு காண முடியும் .
சுமார் 60 வகையான வண்ணத்துப்பூச்சிகளையும் இங்கே கண்டு மகிழலாம்.
SPONSORSHIP :
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"
ليست هناك تعليقات:
إرسال تعليق