الثلاثاء، 11 مارس 2025

மனிதனின் உயிர் காக்கும் தலைக்கவசம்! The life -saving helmet of man!

             

                         தலைக்கவசம்  (Helmet)

பழங்காலத்திலிருந்து தலைக்கவசம்:


         மன்னர்கள் ஆட்சி காலங்களில் போர்கள் நடைபெறும் போது வீரர்களின் உடல் உடலில் காயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு கவசம் அணிவது வழக்கம். அவர்கள் தலையைக் காக்க உலோகத் தலைக்கவசம் அணிந்தனர். அதிலிருந்து தோன்றியதுதான் வாகன ஓட்டுநர் தலைக்கவசம்.

          



        தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதுதான் பாதுகாப்பானது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கீழே உள்ள நேரிடும் போது அதிக வேகமாக தரையில் மோதுவது  தலைதான். தலையில் அடிபட்டு மூக்கு, காது, வாய் வழியாக இரத்தம் வெளியேறினால் அவர் பிழைப்பது மிகவும் கடினம்.

உயிர்சேதம் வேண்டாம் :


          தலையில் அடிபட்டவர் உயிர் போகலாம். நினைவற்ற நிலைக்கும்(Coma stage) வரலாம்.

        



         மனித செயல்களைக் கட்டுப்படுத்துவது மூளை( பெருமூளை, சிறுமூளை, முகுளம்). இவை தலையில்தான் உள்ளன. மேலும் கண், காது, மூக்கு, வாய் ஆகிய மிக முக்கிய உறுப்புகளும் தலையில்தான் உள்ளன. இவை அனைத்தும் அடிபடாமல் காக்கப்பட வேண்டும்.


        " எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் " என்ற பழமொழிக்கு மேற்கண்ட கருத்துக்களையே வலியுறுத்துகின்றன. விபத்தின் போது தலையில் அடிபடாமல் காக்கப்பட வேண்டும் எனில் தலைக்கவசம் அணிய வேண்டும்.


            முதன் முதலாக 1885 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிளை உருவாக்கியவர் ஜெர்மனியைச் சேர்ந்த " கோட்டிலெப் டெய்ம்ளர் " என்பவராவார் . அப்போதே தலைக்கவசம் தேவை என வலியுறுத்தப்பட்டது.

        



           இருசக்கர வாகனம் ஓட்டுபவர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் எனும் சட்டம் இன்னும் கடுமையாக  அமல்படுத்தப்பட வேண்டும் .

இயற்கையிலிருந்தும் பாதுகாப்பு :


    
மேலும் வெயில்,மழை , பனி, குளிர் தூசி இவற்றில் இருந்து தலையைக் காத்துக் கொள்ளவும் தலைக்கவசம் பயன்படுகிறது.


       
தலைக்கவசம் அணிந்தால் தான் இருசக்கர வாகன இயந்திரம் செயல்படத் துவங்கும் என்ற இயந்திர அமைப்பை பாங்காங் நகரில் உருவாக்கி உள்ளனர். (ஆதாரம் தினமலர் நாள் 21- 11 -2005 )

அதிகரித்து வரும் இரு சக்கர வாகனங்கள் :


           
மீப காலத்தில் நடக்கும் சாலை விபத்துகளில் அதிகமான உயிரிழப்பவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளே . இரு சக்கர வாகனங்கள்எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனால் அதிக விபத்துகள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது.அவர்கள் தலைக்கவசம் அணிந்து இருந்தால் உயிரிழக்க வாய்ப்பு இல்லை .


        1970 இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் கனடாவிலும் ஹெல்மெட் விதிகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டன. தற்போது நமது நாட்டிலும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது.


        
தற்காப்புக்காக பலர் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்வதை காண்கின்றோம். சட்டத்திற்காக தலைக்கவசம் அணிய வேண்டாம். தற்காப்புக்காக தலைக்கவசம் அணிய வேண்டும் . தற்காலத்தில் விண்வெளி வீரர்கள் , சிறந்த தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள், நீரில் மூழ்குவார்கள், கட்டிட தொழிலாளர்கள், கனரக தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் ஆகியவர்கள் தலைக்கவசம் அணிகின்றனர்.


         
மேல் நாடுகளில் தலைக்கவச சங்கம் செயல்பட்டு வருகின்றன. சேலத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது .


    
" ஹெல்மெட் விபத்தை தடுக்காது... ஆனால் உயிர்சேதத்தைத் தவிர்க்கும்....


Sponsorship :

 
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
.


ليست هناك تعليقات:

إرسال تعليق

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...