காளான்கள்
மழைக் காலங்களில் நம்மில் பலரும் காளான்கள் முளைத்திருப்பதைப் பார்த்திருப்போம்.காளான்கள் பூஞ்சைகள் இனத்தைச் சேர்ந்தவையாகும். தாவரங்கள் அல்ல.நிலத்திற்கு அடியில் வாழும் பூஞ்சைகள், தனக்குத் தேவையான காற்றைப் பபெற காளான்களாக வெளியே வருகின்றன.காளான்களில் பல வகைகள் உள்ளன.
காளானில் கொழுப்பு இல்லை.சோடியம் குறைவு.கலோரிகள் குறைவு.கொழுப்பு இல்லை.நார்சத்து அதிகம்.மழைக் காலத்தில் சேர்த்துக்கொண்டால் நோய், தொற்றுநோய் வருவது குறையும்.
காளான் வகைககள் :
காளான்கள் முட்டை வடிவிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத நுண்ணறிவு வரை பல வடிவங்களில் கிடைக்கின்றன.
1.நாய்குடைக் காளான்.
2.முட்டைக் காளான்.
3.சிப்பிக் காளான்.
4.பூஞ்சைக் காளான்.
காளானின் மருத்துவ குணம் :
* பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸுடன் காளான் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண், ஆசனவாய்புண் போன்றவை குணமாகும்.
* மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்க வல்லது.
* இரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
*மூட்டு வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணி.
*காளான்சூப் சாப்பிட்டால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் குணமாகும்.
*புற்றுநோய் வராமல் தடுக்கும்.
*உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.
காளானில் சத்துக்கள் :
1. 100 கிராம் காளானில் 447 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.
2. 100 கிராம் காளானில் 35% புரதச்சத்து உள்ளது.
3. தாமிரச்சத்து நிறைந்தது.
4. ஊட்டச்சத்து நிறைந்தது.வைட்டமின் பி1, பி2, பி9, பி12, வைட்டமின் சி, வைட்டமின் டி2 உள்ளது.
இந்தியாவிலுள்ள காளான் வகைகள் :
போதுமான ஈரப்பதம் கொண்ட வெப்பமண்டல நாடான இந்தியா, பூஞ்சைகளுக்கு சொர்க்கமாக உள்ளது, ஏனெனில் இந்த ஈரப்பதமான நிலைமைகள் அவற்றின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. எனவே நாட்டில் ஏராளமான காளான்கள் உள்ளன. ஆனால் இந்த மிகுதியானது அளவில் மட்டுமல்ல, காளான் இனங்களின் பன்முகத்தன்மையிலும் உள்ளது. எனவே இந்தியாவில் எண்ணற்ற வகை காளான்கள் உள்ளன.அவற்றில் சில,
1.பட்டன் காளான்
2.சிப்பிக் காளான்
3.ஷிடேக் காளான்
4.ஏனோகி காளான்
5.மோரல் காளான்
6.ரெய்ஷி காளான்.
ஒட்டுண்ணிக் காளான்கள் :
காளான்கள் முளைப்பதற்குத் தனியாக விதைகள் என்று ஏதுமில்லை. தன்னிச்சையாக ஒளிச்சேர்க்கை செய்யாமல் வாழும் பூஞ்சை என்பதனால், மற்ற தாவரங்கள் அல்லது உயிரினங்கள் மீது ஒட்டுண்ணியாகக் காளான்கள் இருக்கும்.இதன் வழியாக இறந்த தாவரங்கள், விலங்குகளின் உடல்களை மக்கச் செய்யும் பணியிலும் பூஞ்சைகள் ஈடுபடுகின்றன.
இயற்கையாக வளரக்கூடிய சில வகை காளான்களில் விஷத்தன்மை மிகுந்து உள்ளதால் விவரம் தெரியாமல் எதையும் உண்ணக்கூடாது. காளான்களில் புரதம் மிகுந்துள்ளதால் தற்போது இவை வியாபார ரீதியாக அதிகம் பயிரிடப்படுகின்றன.
மாறுபட்ட வடிவங்களில் காளான் :
ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் ஒவ்வொரு காளானும் அளவு, நிறம், உருவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடுகின்றன.காளான்கள் பஃப்பால் (puffball), கோப்பை வடிவக் காளான் ( Cup fungi) , வட்ட வடிவக் காளான் (Fairy rings) என வெவ்வேறு வடிவங்களிலும் காணப்படுகின்றன.
வண்ணங்களே ஆபத்து :
தானாக வளரும் அனைத்துக் காளான்களும் உண்பதற்கு உகந்தவை அல்ல.பொதுவாகக் காடுகளில் காணப்படக்கூடிய கவரும் வண்ணங்களில் உள்ள காளான்கள் நச்சுத்தன்மை உடையதாக இருக்கின்றன.
தொப்பிக் காளான் :
தொப்பிக் காளான்கள் மிகவும் ஆபத்தானவை.காளான்களிலேயே அதிக நச்சுத்தன்மை வாய்ந்தவை இவையே ஆகும்.
இவை சுமார் 15 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக் கூடியதாகும்.மமேலே தொப்பிப் போன்ற தலைப்பகுதி இருக்கும்.மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும்.தொப்பியின் கீழ் வெள்ளை நிறச் செதில்கள் மற்றும் வெள்ளைத் தண்டு இருக்கும்.
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"
ليست هناك تعليقات:
إرسال تعليق