الأحد، 8 ديسمبر 2024

மூவிடப்பெயர்கள் (இலக்கணம்) - இடத்தை நோக்கி தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவிடப் பெயர்களாக வரும்.

          தமிழ் இலக்கணம் - மூவிடப்பெயர்கள்!


மூவிடப் பெயர்கள் :


          மொழிகளின் உறவையும், மொழியினங்களின் தொடர்பையும் விளக்கும் வகையில் மூவிடப்பெயர்கள்  சிறந்து விளங்குகின்றன.
     நாம் உரையாடும்போது பேசுகின்ற நாமும், கேட்கின்றவர்களும், பேசப்படும் பொருளும் என்று மூன்று நிலைகள் உள்ளன. இதையே இடம் என்று குறிப்பிடுவர். இடம் மூன்று வகைப்படும். எனவே இதை மூவிடம் என்றும் கூறுவார்கள்.

       ஒரு பெயர்ச் சொல்லை வேறொரு பெயர் சொல்லால் குறிப்பது மாற்றுப் பெயர்ச்சொல். இந்த மாற்று பெயர்ச்சொல்தான் இடம் நோக்கி தன்மை , முன்னிலை  படர்க்கை என மூவிட பெயர்களாக அமைகிறது.

மூவிடப்பெயர்கள்- தன்மை, முன்னிலை , படர்க்கை என மூன்று பெயர்களில் வரும்.

       கவின்ஒரு உரையாடலை படிக்கிறான் என எடுத்துக் கொள்வோம். இதில் உரையாடலைப் படிப்பவர் அல்லது கூறுபவர் கவின். கவின் இதில் தன்மை.

     உரையாடலைக் கேட்பவரை முன்னிலை என எடுத்துக் கொள்ளலாம் . அதாவது தனக்கு முன்னால் இருப்பவரை நாம் முன்னிலையாகக் கருத வேண்டும்.

        கவின் , சரண் இருவரும் யாரோ ஒருவரைப் பற்றி அல்லது ஏதோ ஒரு செய்தியை பற்றி பேசினால் பேசப்படுபவர் அல்லது பேசப்படும் செய்தியை குறிக்கும் இடம் படர்க்கை.

        

(வீடியோவில் படர்க்கையில் கூறுபவர்  பக்கத்தில் மற்றொருவர் உண்டு.Cut ஆகியுள்ளது.)

    மூவிடப்பெயர்கள் ஒருமையாகவும் பன்மையாகவும் வரும்.

தன்மை :

      * தன்னைக் குறிப்பது தன்மை.

     * ஒருமை : நான்,  யான் .

         பன்மை : நாம்,  யாம், நாங்கள் .

              -என்ற பெயர்களில் வருவது தன்மை.

        

    

     நான் பாடம் கற்பிக்கிறேன்.

 (நான்-தன்மையில் ஒருமை)

      

   

நாங்கள் படகில் செல்கிறோம்.

(நாங்கள்-தன்மையில் பன்மை)


முன்னிலை :

       *  முன்னால் இருப்பவரை குறிப்பது முன்னிலை ஆகும்.

        * தன்மை :  நீ .
            பன்மை : நீர், நீவிர், நீயிர், நீங்கள்.

          - என்ற பெயர்களில் வருவது முன்னிலை.

          


     நீ செய்த செயலாய்வு நன்றாக உள்ளது. ( நீ-முன்னிலையில் ஒருமை)

        


     நீங்கள் நன்றாக நாடகம் நடித்தீர்கள்.

(நீங்கள்-முன்னிலையில் ஒருமை)


படர்க்கை : 

       * இருவரைத் தவிர மற்றவற்றை அல்லது மற்றவர்களை குறிப்பது படர்க்கைஆகும்.

        * ஒருமை : அவன், அவள்அதுஅவர்.

            பன்மை : அவர்கள் அவைகள்.

               - என்ற பெயர்களில் வருவது படர்க்கை.

     


 அது (முயல்) கூண்டில் உள்ளது.

 ( அது- படர்க்கையில் ஒருமை)

      



  அவர்கள் கோவிலில் இருக்கிறார்கள்.

 ( அவர்கள்-படர்க்கையில் பன்மை)

    தற்போதைய வழக்கில் அவர் என்பது ஒருவரை குறிக்கிறது. அவர்கள் என்பது பலரைக் குறிக்கிறது
எடுத்துக்காட்டு:  

அவர் பேசினார்.

அவர்கள் பேசினார்கள்.


        ஆனால் ....


அது வந்தது .


அவை வந்தன .


     என்று இருப்பதைப் போல்...


அதுகள் வந்தது .


அவைகள் வந்தன .


     என்பன வழக்கில் இல்லை. அவை வழூஉச் சொற்களாகக் ( பிழையானவையாகக்) கூறப்படுகின்றன.

Surnames in English Blogger link :

  

https://lifechange4777.blogspot.com/2024/08/english-grammar.html.

  


Sponsorship:

"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplicatio
n.






     

    

ليست هناك تعليقات:

إرسال تعليق

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...