திருக்குறளின் அரிய தகவல்கள்!
திருக்குறளில் மொத்தம் 1330 திருக்குறள்கள் உள்ளன . 133 அதிகாரங்கள் உள்ளன. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 42,194 எழுத்துக்கள் உள்ளன. திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் 14,000.
# முதன் முதலாய் :
# 1971 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு திருவள்ளுவர் அண்டை பயன்படுத்த ஆணையிட்டது. 1981 ஆம் ஆண்டு முதல் அனைத்து அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு அரசு நடவடிக்கை வருகிறது.
# திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.
# திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் ஞானப்பிரகாசன். இவர் தஞ்சையைச் சேர்ந்தவர்.
# திருக்குறளை முதன் முதலில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர் . 1730 ஆம் ஆண்டு லத்தின் மொழியில் திருக்குறளை மொழிப் பெயர்த்தவர். இதுவரை 45 பேர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளனர்.
# ஜி.யு.போப் அவர்கள் 1886-ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.
# திருவள்ளுவர் ஆண்டு :
திருவள்ளுவர் ஆண்டு, தமிழரின் ஆண்டுக்கணக்காக, தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டி முறைமை ஆகும்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர் திருவள்ளுவர்.அதாவது கி.மு 31. எனவே நடப்பாண்டுகளுடன் 31 கூட்டினால் கிடைப்பது திருவள்ளுவர் ஆண்டு. உதாரணமாக நடப்பாண்டு 2025 எனில் அதனுடன் 31 ஐக் கூட்டினால் கிடைப்பது 2056.எனவேப் திருவள்ளுவர் ஆண்டு 2056 ஆகும்.
# திருக்குறளில் பயன்படுத்தப்படாதது :
* தமிழில் எழுதப்பட்ட திருக்குறளில் எந்த இடத்திலும் " தமிழ் " என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை . " கடவுள் " என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படவில்லை.
* திருக்குறளில் "ஔ" என்ற உயிர் எழுத்தை திருவள்ளுவர் பயன்படுத்தவே இல்லை.
# திருக்குறளில் பயன்படுத்தப்பட்டவை :
# ஒரு முறை பயன்பாடு : ஒரே ஒரு குறளில் மட்டும் நெருஞ்சிப் பழத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறளில் இரண்டு மலர்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை அனிச்சமலர் மற்றும் குவளை மலர்.
# இரு முறை பயன்பாடு : திருக்குறளில் "குறிப்பறிதல்" என்ற அதிகாரம் மட்டும் பொருட்பாலிலும், காமத்துப்பாலிலும் ஆக இரண்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
# எண்களின் பயன்பாடு :
திருவள்ளுவர் தம் குறள்களில் எண்களை பல தடவை பயன்படுத்தியுள்ளார்.
* "ஒன்று" என்ற எண் 11 இடங்களிலும் ,
* "இரண்டு" என்ற எண் 10 இடங்களிலும்,
* "நான்கு" என்ற எண் 11 இடங்களிலும்,
* "ஐந்து" என்ற எண் 14 இடங்களிலும்,
* "ஆறு" என்ற எண் ஒரே ஒரு இடத்திலும்,
* "ஏழு" என்ற எண் 7 இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* 8,10,100, 1000 ஆகிய எண்கள் ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
* கோடியை திருவள்ளுவர் 7 இடங்களில் பயன்படுத்தி உள்ளார்.
# திருக்குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல் :
1. படும் - 42
2. தரும் - 37
3. இல் - 32
4. கெடும் - 28
5. இல்லை - 22
# தொடக்க சொல்லாக பல முறை திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் :
1. ஆற்றின் - 5
2. இன்பம் - 5
3. நனவினால் - 5
4. காமம் - 4
5. காமக் - 4
# இறுதி சொல்லாக பல முறை திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட
சொற்கள் :
1. படும் - 42
2. தரும் - 37
3. இல் - 32
4. கெடும் - 28
5. செயல் - 22
Sponsorship :
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
ليست هناك تعليقات:
إرسال تعليق