الجمعة، 18 أبريل 2025

கட்டுரை எழுதும் முறைகள் ! Article Writing Methods and two model article writting method

       

கட்டுரை எழுதும் முறைகள் :


  கட்டுரை விளக்கம் :


     கட்டுரை என்பது கட்டு + உரை # கட்டுரை. நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பிற்கு ஏற்றவாறு உரைகள்  அமைகின்ற முறை தான் கட்டுரை.


கட்டுரை பின்வரும் முறையில் அமைக்கப்பட்டிருப்பின் சிறப்பானதாக அமையும்.

         



எழுதும் முறைகள் :


         1. கட்டுரை எழுத தொடங்கும் முன் கட்டுரையின் தலைப்பினை படிப்பவர்களுக்கு நன்றாக புரியும் வகையில் தெளிவான மொழி நடையில் அமைத்தல் வேண்டும்.


         2.கட்டுரையின் ஆரம்பத்தில் முன்னுரை அமைய வேண்டும். இந்த முன்னுரையானது தலைப்பை எடுத்து விளக்கும்படியாக ஐந்து வரிகளுக்கு மிகாமல் கட்டுரை தலைப்பினை பார்ப்பவர் எவருக்கும் எளிதில் புரிய வைக்கும்படி அமைத்தல் வேண்டும்.


          3.அடுத்ததாக பொருளுரை அமைய வேண்டும் . பல சிறிய தலைப்புகளில் கட்டுரை தலைப்போடு தொடர்பு கொண்டதாக அமைதல் வேண்டும் .


            4. கட்டுரையின் பொருளுரையில் சில இடங்களில் அறிஞர்களின் பொன்மொழிகள், திருக்குறள், தமிழ் பாடல்கள் போன்றவை பொருத்தமான இடங்களில் மேற்கோள்களாக காட்டுவது மிகச் சிறந்ததாக அமையும்.


              5. கட்டுரையின் நடுவே குறிப்பிடப்படும் அரிய கருத்துக்கள் மேற்கோள்கள் காட்டி(" ") அதனை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும்.


               6. கட்டுரையின் இறுதியில் முடிவுரை அமைதல் வேண்டும்கட்டுரையின் முடிவுரை 5 முதல் 10 வரிகளுக்கு உட்பட்டு அமைத்தல் சிறப்பு.


               7.கையெழுத்து மிக அழகாகவும், தெளிவாகவும் இருத்தல் வேண்டும்.


                8 .  கட்டுரை எழுதும் முன் கட்டுரை தலைப்பினை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டு தலைப்பிற்கு ஏற்ற மாதிரியான கட்டுரையை எழுத வேண்டும்.


              9 . கட்டுரைகள் எழுதிய பின்பு அதனைப் படித்துப் பார்க்க வேண்டும். எழுத்துப்பிழை , வாக்கியப்பிழை , இலக்கணப் பிழை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் . கட்டுரைகள் இரண்டு அல்லது மூன்று பாகங்கள் பக்கங்களுக்கு மிகாமல் எழுதுதல் வேண்டும்.


             10. நாம் எழுதும் கட்டுரை படிப்பவர்களின் மனதை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும். கட்டுரையை ஆர்வமாக படிக்கும் படியாக எழுத வேண்டும்.

மாதிரிக் கட்டுரை 1 :

       சிறப்பான வாழ்க்கைக்கு சிறுசேமிப்பு !

           


 முன்னுரை :

        ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழ அவசியம் செய்ய வேண்டியது சிறுசேமிப்பு. சேமிப்பு இல்லாதவன் வாழ்க்கை , கால்களால் நடப்பதற்கு பதில் தலையால் நடப்பதற்கு ஒப்பாகும். சேமிப்பின் பெருமையை பற்றி இக்கட்டுரையில் காணலாம் . 

சிக்கனம் தேவை :

       நாம் அன்றாடம் உழைத்து சம்பாதிக்கிறோம். சம்பாதிப்பதில் எதிர்காலத்திற்காக சிறிதளவாவது சேமித்து வைக்க வேண்டும் . இன்றைய காலகட்டத்தில் கல்விச் செலவு , பயணச் செலவு , மருத்துவச் செலவு , திருமண செலவு மற்றும் திடீர் செலவு என பல வகையான செலவுகள் நம்மை நோக்கி வருகின்றன. அவற்றையெல்லாம் சமாளிக்க சேமிப்பு மிகவும் அவசியமாகும் . 

          ' உங்கள் முதல் செலவே சேமிப்பு ' என்று ஒரு வங்கி கூறுகிறது . நமது சம்பளத்தில் 20% சேமிப்பு செய்தோம் என்றால் நம் எதிர்காலத்தில் பயமில்லா வாழ்க்கை வாழ முடியும் . மாதம் மாதம்  ஒருவர் சேமித்துக் கொண்டே வந்து அப்பணத்தை செலவு செய்து விட்டு வெறும் கையாக இருந்தால். நாளைக்கு அவசர தேவைக்கு என்ன செய்வது? யோசிக்கவும் . 

           சிக்கனமாக செலவு செய்தால் கடன் வாங்காமல் வாழலாம் . சிலர்  தேவையில்லாமல் செலவு செய்து விட்டு பின் கடன் வாங்கி பாதிக்கப்படுகின்றன . இந்த நிலை வராமல் இருக்க சிக்கனம் அவசியமாகிறது . 

எவ்வாறு சேமிக்கலாம் ?

       வாங்குகிற சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்குமே பற்றவில்லை , எங்கிருந்து சேமிப்பது ? என்று பலர் புலம்புவதை காணலாம். இது தேவையற்ற புலம்பல். முதலில் நமக்குள் ஒரு வைராக்கியமான எண்ணம் இருக்க வேண்டும் . எதிர்கால நல்வாழ்விற்கு சேமிக்க வேண்டும் என்ற கருத்தை நமக்குள் விதைத்துக் கொள்ள வேண்டும் . 10 ரூபாய் சம்பாதிக்கிறோம் என்றால் ஒரு ரூபாய் சேமிப்பிற்காக எடுத்து வைத்து விட வேண்டும். மீதி ஒரு ரூபாயில் தான் செலவுகள் செய்ய வேண்டும் .                                

         அன்றாடம் செய்யும் செலவுகளை அவசியம் எழுதி வைக்க வேண்டும் . இது முக்கியமானது . நமது தேசப்பிதா பைசா செலவு என்றாலும் எழுதி வைப்பாராம். நமது செலவுகளை எழுதி வைத்து பார்த்தால் நமக்கு எது தேவையான செலவு ? எது தேவையில்லாத செலவு ? என்று தெரிந்துகொண்டு  தேவையில்லாத செலவுகளை நீக்கிவிட முடியும் .

       இன்று மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று ஆடம்பர செலவுகளை அதிகம் செய்துவிட்டு கடன் மேல் கடன் வாங்கி கஷ்டப்படுகின்றன. கடன் தொல்லையால் தற்கொலைக்குக் கூட செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. இந்நிலைக்கு ஆளாகாமல் சேமிக்க பழகுங்கள். 

சேமிக்கும் வழிமுறைகள்:

          இன்று அரசாங்கம் வங்கிகள் , எல்ஐசி போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தபால் அலுவலகங்கள் என அரசு நிறுவனங்களில் சேமிக்க பல வழிகள் இருக்கின்றன. தற்போது  SIP சேமிப்பு முறையும் உள்ளது. இவைகளை அந்தந்த நிறுவனங்களில் கேட்டு அறிந்து கொள்வது நல்லது. குறைந்த வட்டி என்றாலும் நமது பணத்திற்கு பாதுகாப்பு. சில தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் அதிக வட்டி தருகிறோம் என்று கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவார்கள். மக்களும் ஏமாந்து இன்றும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இதை புரிந்து செயல்பட வேண்டும் . இல்லை யெனில் நான் கட்டிய பணம் பைசா கூட நமக்கு கிடைக்காது! 

சிறுசேமிப்பின் பயன்கள்:

         மழைக்காலத்தில் வேண்டிய உணவுகளை எறும்புகள் வெயில் காலத்திலேயே சேமித்து வைக்கிறது.. நமது சீரான வாழ்க்கைக்கு சிறு சேமிப்பு அவசியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால் சிறு சேமிப்பின் பயன்களை உணரலாம் . அவசர தேவைக்கும் பல வகையான செலவுகளுக்கும் சேமிப்பு நமக்கு உதவும். 

       கடன் வாங்குவது சுலபம்.ஆனால் திருப்பி செலுத்துவது மிகவும் கடினம். கல்விச் செலவு, மருத்துவச் செலவு ,திருமண செலவு  மற்றும் வீடு கட்டும் செலவு போன்ற அவசிய செலவுகளுக்கு சேமிப்பு நமக்கு பக்கபலமாய் இருக்கும்.

 முடிவுரை :

         நாளைய நமது நல்வாழ்க்கைக்கு இன்றைய சேமிப்பு மிகவும் உதவும் என்பதை உணர்ந்து ஒருவரும் செயல்பட்டால் நமது வாழ்க்கையில் எந்த துன்பமும் இருக்காது. வாழ்க்கையை என்றும் ஒளிமயமாக அமைத்துக் கொள்ள நாம் தான் காரணமாக அமைய வேண்டும்.

மாதிரி கட்டுரை 2 : (கையெழுத்து)

மழை தன் வரலாறு கூறுதல் :

         


               



Sponsorship :

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"





      


ليست هناك تعليقات:

إرسال تعليق

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...