الأحد، 25 مايو 2025

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் அரிய தகவல்கள் ! Rare information in Tirukkural composed by Tiruvalluvar !

           திருக்குறளின் அரிய தகவல்கள்!

         திருக்குறளில் மொத்தம் 1330 திருக்குறள்கள் உள்ளன . 133 அதிகாரங்கள் உள்ளன. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

        




      மொத்தம் 42,194 எழுத்துக்கள் உள்ளன. திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் 14,000.

    
# முதன் முதலாய் :


       # 1971 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு திருவள்ளுவர் அண்டை பயன்படுத்த ஆணையிட்டது. 1981 ஆம் ஆண்டு முதல் அனைத்து அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு அரசு நடவடிக்கை வருகிறது.


       # திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.    


     # திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் ஞானப்பிரகாசன். இவர் தஞ்சையைச் சேர்ந்தவர்.


      # திருக்குறளை முதன் முதலில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர் . 1730 ஆம் ஆண்டு லத்தின் மொழியில் திருக்குறளை  மொழிப் பெயர்த்தவர். இதுவரை 45 பேர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளனர்.


      # ஜி.யு.போப் அவர்கள் 1886-ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.


# திருவள்ளுவர் ஆண்டு :


     திருவள்ளுவர் ஆண்டு, தமிழரின் ஆண்டுக்கணக்காக, தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டி முறைமை ஆகும்.

 
       இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர் திருவள்ளுவர்.அதாவது கி.மு 31. எனவே நடப்பாண்டுகளுடன் 31 கூட்டினால் கிடைப்பது  திருவள்ளுவர் ஆண்டு.  உதாரணமாக நடப்பாண்டு  2025 எனில் அதனுடன் 31 ஐக் கூட்டினால் கிடைப்பது 2056.எனவேப் திருவள்ளுவர் ஆண்டு 2056 ஆகும்.


# திருக்குறளில் பயன்படுத்தப்படாதது :


        * தமிழில் எழுதப்பட்ட திருக்குறளில் எந்த இடத்திலும் " தமிழ் "  என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை . " கடவுள் " என்ற வார்த்தையும்  பயன்படுத்தப்படவில்லை.


       *  திருக்குறளில் "ஔ" என்ற உயிர் எழுத்தை திருவள்ளுவர் பயன்படுத்தவே இல்லை.


# திருக்குறளில் பயன்படுத்தப்பட்டவை :


      # ஒரு முறை பயன்பாடு : ஒரே ஒரு குறளில் மட்டும் நெருஞ்சிப் பழத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

 
       திருக்குறளில்  இரண்டு மலர்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை அனிச்சமலர் மற்றும் குவளை மலர்.

 
     # இரு முறை பயன்பாடு : திருக்குறளில் "குறிப்பறிதல்"  என்ற அதிகாரம் மட்டும் பொருட்பாலிலும், காமத்துப்பாலிலும் ஆக இரண்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.   

     
   #  எண்களின் பயன்பாடு :  

        திருவள்ளுவர் தம் குறள்களில் எண்களை பல தடவை பயன்படுத்தியுள்ளார்.


        *   "ஒன்று" என்ற எண் 11 இடங்களிலும் ,      
        *  "இரண்டு"  என்ற எண் 10 இடங்களிலும்,
         *  "நான்கு"  என்ற எண் 11 இடங்களிலும்,
          * "ஐந்து"  என்ற எண் 14 இடங்களிலும்,
          *  "ஆறு"  என்ற எண் ஒரே ஒரு இடத்திலும்,
          *  "ஏழு" என்ற எண் 7 இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.


          *  8,10,100, 1000 ஆகிய எண்கள் ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.


          *  கோடியை திருவள்ளுவர் 7 இடங்களில் பயன்படுத்தி உள்ளார்.


          #  திருக்குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல் :


1. படும் - 42
2. தரும் - 37
3. இல் - 32
4. கெடும் - 28
5. இல்லை - 22


      #   தொடக்க சொல்லாக பல முறை திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் :

1. ஆற்றின் - 5
2. இன்பம் - 5
3. நனவினால் - 5
4. காமம் - 4
5. காமக் - 4


     #  இறுதி சொல்லாக பல முறை திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட 

சொற்கள் :


1. படும் - 42
2. தரும் - 37
3. இல் - 32
4. கெடும் - 28
5. செயல் - 22


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"




الأحد، 18 مايو 2025

Degrees of comparison-change one degree to another degree!-THREE DEGREES (Change of degree-PART2)

             CHANGE OF DEGREE!

      ஒரு Degree யில் உள்ள வாக்கியத்தை மற்றொரு Degree க்கு மாற்றுவதை change of degree என்கிறோம்.

    

Positive degree :

     Positive degreeயில் உள்ள ஒரு வாக்கியத்தின் ஆரம்பத்தில் " No other " என்ற வார்த்தையும், வாக்கியத்தின் முடிவில் அந்த degreeக்கு முன்னும் பின்னும் " as " என்ற சொல்லும் வரும்.

  Example :

     1. No other girl in the class is as clever as Priya.

       


     பிரியாவைப் போல வகுப்பில் வேறு எந்த பெண்ணும் புத்திசாலி அல்ல.


2. No other continent in that world is as large as Asia.

      


   ஆசியாவைப் போல  வேறு எந்த கண்டமும்  பெரியது அல்ல.


Comparative degree :


    Comparative degree யில் உள்ள ஒரு   வாக்கியத்தில் " Than "  என்ற வார்த்தையை அடுத்து " any other " என்ற வார்த்தை வரும்.

Example :

    1. Priya is cleverer than any other girl in the class.

   வகுப்பில் உள்ள மற்ற பெண்ணை விட பிரியா புத்திசாலி.

   2. Asia is larger than any other continent in the world.

     உலகின் வேறு எந்த கண்டத்தையும் விட ஆசியா பெரியது.


Superlative degree :


    Superlative degree யில் அந்த degree க்கு முன்னால் " The " மட்டுமே வரும். இவற்றை வைத்து ஒன்றை ஒன்று Inter change செய்து கொள்ள முடியும்.

 Example :

     1. Priya is the cleverest girl in the class.

        பிரியா வகுப்பில் மற்ற எவரைக் காட்டிலும் புத்திசாலித்தனமான பெண்.

    2. Asia is the largest continent in the world.

          ஆசியா உலகிலேயே மிகப்பெரிய கண்டம்.

Words in three degrees :

        


# சில Word 3 degree யிலும் வேறுபடும்.

# சில Word- Y ல் முடிந்திருப்பின் Y க்கு பதிலாக ier, est Word ன் கடைசியில் சேரும் .
.
# Word 6 letter அல்லது அதற்கு மேல் இருப்பின் wordன் முன்னால் More,  Most சேரும்.

@@@@@@@@@@@@@@@@@@@


SPONSORSHIP :
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"





الأحد، 11 مايو 2025

Degrees of comparison - Grammar (superlative degree, comparative degree, superlative degree)-PART 1

       Degrees of comparison-Grammar.

     Degrees of comparison in English grammar refer to the different forms of adjectives and adverbs used to express varying degrees of a quality or quantity.there are three main degrees

1.positive degrees.

2.comparative degrees.

3.superlative degrees.


1.POSITIVE DEGREES : 

( discribes a single quality) 

     * Describes a quality without any comparison,used for basic descriptions.

      * Positive degree என்பது ஒரு நபரை, பொருளை அல்லது இடத்தை பொதுவாகக் குறிக்கும்.

   * Positive degree. என்பது ஒரு Statement ஆகும்.

Example :

    Ragavi is a good girl.   

    ராகவி ஒரு நல்ல சிறுமி.

        


   Dhanus is a good student.

  தனுஷ் ஒரு நல்ல மாணவன்.

    



2.COMPARATIVE DEGREES :

 ( compares two entities) 


     * Compares two entities, indicating which has a greater or lesser degree of a quality.

       * Uses "---er" or. "more" for adjectives and adverbs.

     * Comparative degree என்பது இரு நபர்களை / பொருட்களை / இடங்களை ஒப்பீடு செய்வதைக் குறிப்பதாகும்.

    * Comparative degree யில் வாக்கியத்தில் அந்த டிகிரிக்கு அடுத்து  " Than " வரும்.


Example :

    He is fast runner in the class.

        


   Raja is better than Ravi.

       


    


3. SUPERLATIVE DEGREE :

 ( Compares three three or more entities)

     * Compare three or more entities, indicating which has the highest or lowest degrees of a quality.

     * Uses "----est" for adjectives and adverbs.

     * Superlative degree என்பது ஒரு பல நபர்களில்,  பொருட்களில் அல்லது இடங்களில் இருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து சொல்வதாகும்.

    * Superlative degree யில் வாக்கியத்தில் அந்த டிகிரிக்கு முன்னால் " The" வரும்.

Example :

  Siva ia the best student in the class.

         


  She is the fastest runner in the class.

       



Sponsorship:

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


  


الأحد، 4 مايو 2025

கருமை நிற கரைந்து உண்ணும் கருப்பு காகம் ! Dark colored Black crow !

 

               கருமை நிற காகம்!


     மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதிகம் வசிக்கக் கூடியவை காகங்கள். காகம் கரையும் (ஒலி) என்பார்கள்.காகங்கள் சைவ மற்றும் அசைவ உணவு வகை உயிரி.

           



உணவு :


      காக்கைகள் பொதுவாக அனைத்துண்ணிகள் ஆகும். தானியங்கள், புழுக்கள், விதைகள், கொட்டைகள், தவளை, நண்டு போன்றவற்றையும் உண்ணும். வயல்களில் உள்ள பூச்சிகளையும் உணவாகக் கொள்வதால் உழவர்களின் நண்பன் எனப்படுகிறது. இறந்த உடல்களையும் தின்னும்.


       மனிதர்களைப் போலவே காகங்களும் உண்பதற்கு கருவிகளை பயன்படுத்துகின்றன. மரக் குச்சியை கூர்மையாக்கி அதனை கொண்டு வர புகுந்துகளில் இருக்கும் புழுக்களை எடுத்து உண்கின்றன.


காகத்தின் கூடு :


        இவை கூடுகளைக் கட்ட மரக்குச்சிகள் சிறுசிறு இரும்பு கம்பிகளையும் பயன்படுத்துகின்றன. நம் நாட்டில் பல இடங்களில் வாழும் இந்த காகங்கள் இமயமலையில் சுமார் 2500 மீட்டர் இடங்களில் கூட வாழ்கின்றன. 

           காகங்கள் கார் வீடு என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள் ஆகும். இவற்றில் சுமார் 40 வகைகள் உள்ளன. வெவ்வேறு பருவநிலை கொண்ட கண்டங்களிலும் இவை வாழக்கூடியவை .கதைகளில் கூறுவது போன்றே காகங்கள் புத்திசாலியான பறவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றன.


ஒற்றுமை :


         ஒற்றுமையாக வாழும் பழக்கமுடைய காகங்கள் அதன் கூட்டத்தில் உள்ள ஒரு காகம் இறந்துவிட்டால் அந்த இடத்தில் உடனே நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் ஒன்று கூடி தங்கள் இரங்கல் கூட்டம் நடத்தும்.

             



        மற்ற பறவைகளின் மூளையை காட்டிலும் காகங்களின் மூளை பெரியதாக உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர் .

காகத்தின் சிறப்பு :


          மரங்களில் வாழும் காகங்கள் பொதுவாகக் 20 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியவை. பெண் காகங்கள் மூன்று வருடங்களிலும் ஆண் காகங்கள் ஐந்து வயதில் பருவத்தை அடைந்து விடுகின்றன. கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் இனத்தைச் சார்ந்தது. இதுவரை உலகில் அதிக வருடம் உயிர் வாழ்ந்த காகமாகக் கருதப்படுவது அமெரிக்காவின் காடுகளில் வாழ்ந்த காகம் ஆகும்.


நினைவுத்திறன் :


        30 ஆண்டுகள் காகங்கள் மனித முகங்களை நினைவில் வைத்திருக்கும்.


        ஹவாயென் காகம் மற்றும் மரியானா காகம் ஆகிய காக்கை இனங்கள் அழிந்து  விட்டன.


ஆன்மீகம் :


     ஆன்மீகத்தில் தங்களின் கர்மாவைக் கழிப்பதற்காக காகத்தை முன்னோர்களாகக் கருதுகிறார்கள்.


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


الأحد، 27 أبريل 2025

எதிர்கால சந்ததியினரை காக்கும் அரிதாகி வரும் பனைமரம்! Palm tree that is rare to protect future generations!

 

                   #  பனைமரம் #


         பனை மரம் என்பது ஆங்கிலத்தில் "palm tree" என்று அழைக்கப்படும்.


      பொது வழக்கில் மரம் என்று வழங்கப்படினும்  இது மர வகையைச் சார்ந்தது அல்ல.இது புல் இனத்தைச் சார்ந்தது.


பனையின் வளர்ச்சி :


         பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றி நேராக சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

         பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமென கருதப்படுகிறது.

 
தூக்கணாங்குருவி :

        



        இதில் தூக்கணாங்குருவிகளின் இருப்பிடமாக இருப்பதைப் பார்க்கலாம். இதன் ஓலைகளில் தூக்கணாங்குருவிகளின் தொங்கும் கூடுகள் பார்க்கும் பொழுது அவ்வளவு அழகாக இருக்கும்.


சல்லிவேர்களின் 

அதிசயம் :


         ஒரு 5 வருடங்கள் வளர்ந்த பனை மரத்தில்  1000- 1500 சல்லி வேர்கள் இருக்கும் .மழைக்காலங்களில் மழை பெய்யும் பொழுது இந்த 1500 சல்லி வேர்களின் வழியாக மழைநீர் பூமிக்கு அடியில் ஒரு பெரிய பைப்பில் தண்ணீர் போவது போல் சென்று கொண்டே இருக்கும்.

        





        ஒரு இடத்தில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் இருந்தால் இந்த சல்லி வேர்களின் வழியாக செல்லும் மழை  நீர் ஒரு பெரிய குளம் போல் பூமிக்கு அடியில் தேங்கி நிற்கும். நிலத்தடி நீர்மட்டம் உயர வழி வகுக்கும்.


       ஒரு வளர்ந்த பனைமரம், 15,000-20,000 லிட்டர் தண்ணீரை மழை காலத்தில் பூமிக்கு அடியில் சேர்த்து வைக்கும் திறன் கொண்டது.


        எனவே நாம் நடும் பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பனை மரங்கள் வளரும் பொழுது ,ஒரு பெரிய குளம் போல் /ஏரி போல் பூமிக்கு அடியில் தண்ணீரை சேர்த்து வைக்கும்.

     எனவே, உங்கள் ஊரில் உள்ள நீர்நிலைப் பகுதிகளில்,குளம் குட்டைகளில் வயல்களில், வரப்புகளில், ஆற்றங்கரை ஓரங்களில் நிறைய நிறைய பனை விதைகளை நட்டு அடுத்த தலைமுறைக்கு நிலத்தடி நீர் பெருக,மண் வளம், மழை வளம் பெருக உதவுங்கள்.


பனையின் வகைகள் :

      



         பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. 

அவை,


1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை.


காணப்படும் இடங்கள் :


       ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன.தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.


பயன்கள் :

         



1. நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கிழங்கு , பனம்பழம், பனங்கற்கண்டு , பனங்கற்பட்டி நுங்கு ஜுஸ் போன்ற உணவுப் பொருட்கள் கிடைக்கிறது.

         



2. கூரை வேய பனை ஓலைகள், கைவினைப் பொருள்கள், நுங்கு வண்டி, விசிறி,வேலி அமைத்தல்  என பல பயன்கள் உள்ளன. 

3. மேலும் பனை மரங்கள் மரச்சட்டங்கள் செய்ய பயன்படுகின்றன. 

4. பதநீர் செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.பதநீர் உடல் சூட்டை தணிக்கிறது, வயிற்றுப் புண்களை குணப்படுத்துகிறது.

5. பனங்கற்கண்டு தொண்டைப் புண்களை குணப்படுத்துகிறது, உடல் சூட்டை தணிக்கிறது.

Sponsorship :

"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

الخميس، 24 أبريل 2025

My feedback about SBO!

      My feedback about SBO!

The SBO Online Job Company has an opportunity to exclude a certain time from all grade people in the house.
sbo is the genuine online job company .it's give to chance improve our digital knowledge and also we earn that platform.it is one of the best online job company. it is confident in digital marketing.

      

#SBO #SBOTVM #SBOGROUP #BUYMOTE #EDUQUEST #SBOFAKE #SBOSCAM #SBOFRAUD #SBOCHEATING #SBODIGITALMARKETING

Buymote:https://play.google.com/store/apps/details?id=com.Buymote.buymas&pcampaignid=web_shareEduquest :https://eduquest.courses/.

الجمعة، 18 أبريل 2025

கட்டுரை எழுதும் முறைகள் ! Article Writing Methods and two model article writting method

       

கட்டுரை எழுதும் முறைகள் :


  கட்டுரை விளக்கம் :


     கட்டுரை என்பது கட்டு + உரை # கட்டுரை. நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பிற்கு ஏற்றவாறு உரைகள்  அமைகின்ற முறை தான் கட்டுரை.


கட்டுரை பின்வரும் முறையில் அமைக்கப்பட்டிருப்பின் சிறப்பானதாக அமையும்.

         



எழுதும் முறைகள் :


         1. கட்டுரை எழுத தொடங்கும் முன் கட்டுரையின் தலைப்பினை படிப்பவர்களுக்கு நன்றாக புரியும் வகையில் தெளிவான மொழி நடையில் அமைத்தல் வேண்டும்.


         2.கட்டுரையின் ஆரம்பத்தில் முன்னுரை அமைய வேண்டும். இந்த முன்னுரையானது தலைப்பை எடுத்து விளக்கும்படியாக ஐந்து வரிகளுக்கு மிகாமல் கட்டுரை தலைப்பினை பார்ப்பவர் எவருக்கும் எளிதில் புரிய வைக்கும்படி அமைத்தல் வேண்டும்.


          3.அடுத்ததாக பொருளுரை அமைய வேண்டும் . பல சிறிய தலைப்புகளில் கட்டுரை தலைப்போடு தொடர்பு கொண்டதாக அமைதல் வேண்டும் .


            4. கட்டுரையின் பொருளுரையில் சில இடங்களில் அறிஞர்களின் பொன்மொழிகள், திருக்குறள், தமிழ் பாடல்கள் போன்றவை பொருத்தமான இடங்களில் மேற்கோள்களாக காட்டுவது மிகச் சிறந்ததாக அமையும்.


              5. கட்டுரையின் நடுவே குறிப்பிடப்படும் அரிய கருத்துக்கள் மேற்கோள்கள் காட்டி(" ") அதனை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும்.


               6. கட்டுரையின் இறுதியில் முடிவுரை அமைதல் வேண்டும்கட்டுரையின் முடிவுரை 5 முதல் 10 வரிகளுக்கு உட்பட்டு அமைத்தல் சிறப்பு.


               7.கையெழுத்து மிக அழகாகவும், தெளிவாகவும் இருத்தல் வேண்டும்.


                8 .  கட்டுரை எழுதும் முன் கட்டுரை தலைப்பினை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டு தலைப்பிற்கு ஏற்ற மாதிரியான கட்டுரையை எழுத வேண்டும்.


              9 . கட்டுரைகள் எழுதிய பின்பு அதனைப் படித்துப் பார்க்க வேண்டும். எழுத்துப்பிழை , வாக்கியப்பிழை , இலக்கணப் பிழை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் . கட்டுரைகள் இரண்டு அல்லது மூன்று பாகங்கள் பக்கங்களுக்கு மிகாமல் எழுதுதல் வேண்டும்.


             10. நாம் எழுதும் கட்டுரை படிப்பவர்களின் மனதை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும். கட்டுரையை ஆர்வமாக படிக்கும் படியாக எழுத வேண்டும்.

மாதிரிக் கட்டுரை 1 :

       சிறப்பான வாழ்க்கைக்கு சிறுசேமிப்பு !

           


 முன்னுரை :

        ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழ அவசியம் செய்ய வேண்டியது சிறுசேமிப்பு. சேமிப்பு இல்லாதவன் வாழ்க்கை , கால்களால் நடப்பதற்கு பதில் தலையால் நடப்பதற்கு ஒப்பாகும். சேமிப்பின் பெருமையை பற்றி இக்கட்டுரையில் காணலாம் . 

சிக்கனம் தேவை :

       நாம் அன்றாடம் உழைத்து சம்பாதிக்கிறோம். சம்பாதிப்பதில் எதிர்காலத்திற்காக சிறிதளவாவது சேமித்து வைக்க வேண்டும் . இன்றைய காலகட்டத்தில் கல்விச் செலவு , பயணச் செலவு , மருத்துவச் செலவு , திருமண செலவு மற்றும் திடீர் செலவு என பல வகையான செலவுகள் நம்மை நோக்கி வருகின்றன. அவற்றையெல்லாம் சமாளிக்க சேமிப்பு மிகவும் அவசியமாகும் . 

          ' உங்கள் முதல் செலவே சேமிப்பு ' என்று ஒரு வங்கி கூறுகிறது . நமது சம்பளத்தில் 20% சேமிப்பு செய்தோம் என்றால் நம் எதிர்காலத்தில் பயமில்லா வாழ்க்கை வாழ முடியும் . மாதம் மாதம்  ஒருவர் சேமித்துக் கொண்டே வந்து அப்பணத்தை செலவு செய்து விட்டு வெறும் கையாக இருந்தால். நாளைக்கு அவசர தேவைக்கு என்ன செய்வது? யோசிக்கவும் . 

           சிக்கனமாக செலவு செய்தால் கடன் வாங்காமல் வாழலாம் . சிலர்  தேவையில்லாமல் செலவு செய்து விட்டு பின் கடன் வாங்கி பாதிக்கப்படுகின்றன . இந்த நிலை வராமல் இருக்க சிக்கனம் அவசியமாகிறது . 

எவ்வாறு சேமிக்கலாம் ?

       வாங்குகிற சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்குமே பற்றவில்லை , எங்கிருந்து சேமிப்பது ? என்று பலர் புலம்புவதை காணலாம். இது தேவையற்ற புலம்பல். முதலில் நமக்குள் ஒரு வைராக்கியமான எண்ணம் இருக்க வேண்டும் . எதிர்கால நல்வாழ்விற்கு சேமிக்க வேண்டும் என்ற கருத்தை நமக்குள் விதைத்துக் கொள்ள வேண்டும் . 10 ரூபாய் சம்பாதிக்கிறோம் என்றால் ஒரு ரூபாய் சேமிப்பிற்காக எடுத்து வைத்து விட வேண்டும். மீதி ஒரு ரூபாயில் தான் செலவுகள் செய்ய வேண்டும் .                                

         அன்றாடம் செய்யும் செலவுகளை அவசியம் எழுதி வைக்க வேண்டும் . இது முக்கியமானது . நமது தேசப்பிதா பைசா செலவு என்றாலும் எழுதி வைப்பாராம். நமது செலவுகளை எழுதி வைத்து பார்த்தால் நமக்கு எது தேவையான செலவு ? எது தேவையில்லாத செலவு ? என்று தெரிந்துகொண்டு  தேவையில்லாத செலவுகளை நீக்கிவிட முடியும் .

       இன்று மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று ஆடம்பர செலவுகளை அதிகம் செய்துவிட்டு கடன் மேல் கடன் வாங்கி கஷ்டப்படுகின்றன. கடன் தொல்லையால் தற்கொலைக்குக் கூட செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. இந்நிலைக்கு ஆளாகாமல் சேமிக்க பழகுங்கள். 

சேமிக்கும் வழிமுறைகள்:

          இன்று அரசாங்கம் வங்கிகள் , எல்ஐசி போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தபால் அலுவலகங்கள் என அரசு நிறுவனங்களில் சேமிக்க பல வழிகள் இருக்கின்றன. தற்போது  SIP சேமிப்பு முறையும் உள்ளது. இவைகளை அந்தந்த நிறுவனங்களில் கேட்டு அறிந்து கொள்வது நல்லது. குறைந்த வட்டி என்றாலும் நமது பணத்திற்கு பாதுகாப்பு. சில தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் அதிக வட்டி தருகிறோம் என்று கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவார்கள். மக்களும் ஏமாந்து இன்றும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இதை புரிந்து செயல்பட வேண்டும் . இல்லை யெனில் நான் கட்டிய பணம் பைசா கூட நமக்கு கிடைக்காது! 

சிறுசேமிப்பின் பயன்கள்:

         மழைக்காலத்தில் வேண்டிய உணவுகளை எறும்புகள் வெயில் காலத்திலேயே சேமித்து வைக்கிறது.. நமது சீரான வாழ்க்கைக்கு சிறு சேமிப்பு அவசியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால் சிறு சேமிப்பின் பயன்களை உணரலாம் . அவசர தேவைக்கும் பல வகையான செலவுகளுக்கும் சேமிப்பு நமக்கு உதவும். 

       கடன் வாங்குவது சுலபம்.ஆனால் திருப்பி செலுத்துவது மிகவும் கடினம். கல்விச் செலவு, மருத்துவச் செலவு ,திருமண செலவு  மற்றும் வீடு கட்டும் செலவு போன்ற அவசிய செலவுகளுக்கு சேமிப்பு நமக்கு பக்கபலமாய் இருக்கும்.

 முடிவுரை :

         நாளைய நமது நல்வாழ்க்கைக்கு இன்றைய சேமிப்பு மிகவும் உதவும் என்பதை உணர்ந்து ஒருவரும் செயல்பட்டால் நமது வாழ்க்கையில் எந்த துன்பமும் இருக்காது. வாழ்க்கையை என்றும் ஒளிமயமாக அமைத்துக் கொள்ள நாம் தான் காரணமாக அமைய வேண்டும்.

மாதிரி கட்டுரை 2 : (கையெழுத்து)

மழை தன் வரலாறு கூறுதல் :

         


               



Sponsorship :

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"





      


எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...